தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசிய போது…
முதல்வர் பதவி மீது ஆசையில்லை…
50 வயதுக்குட்பட்டவர்கள் பதவிக்கு வரவேண்டும்.
கட்சி வேறு; ஆட்சி வேறு.. ஊழலற்ற சமுதாயம் உருவாக மக்கள் எழுச்சி பெற வேண்டும். அப்போதுதான் நான் அரசியலுக்கு வருவேன்.
விவேகானந்தர் & அண்ணா சொன்னதை போல் தலைமை ஏற்க இளைஞர்கள் வர வேண்டும்” என்றார் ரஜினி.
இந்த நிலையில் ரஜினியின் இந்த பேச்சு குறித்து சீமான் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…
BREAKING முதல்வராக ஆசையில்லை; மக்கள் எழுச்சி உருவாக வேண்டும்.. – ரஜினி
திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்!
இதே போன்று தான்,
அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்!
– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
என பதிவிட்டுள்ளார்.
திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்!
இதே போன்று தான்,
அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்!
— சீமான் (@SeemanOfficial) March 12, 2020