தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் பசும்பொன் தேவர் பூஜை கொண்டாடினார் சீமான்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். ரஜினியின் நேற்றைய அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் சீமான்.
”ரஜினிகாந்த் ஒரு ஒப்பற்ற கலைஞர். அவரின் படங்களை பார்த்து கைத்தட்டி விசிலடிச்சி ரசிச்சி இருக்கோம்.
ரஜினி, கமலின் அரசியல் நுழைவுக்கு முன்னர் இருந்தே நான் அரசியலில் உள்ளேன். இப்போது ரஜினியை அரசியலில் இழுத்து விடுபவர்களே நாளை அவரை இழிவாக பேசுவார்கள்.
ரஜினி புகழ்ச்சியை மட்டுமே பார்த்தவர். தமிழகத்தில் மோசமான ஆட்டம் நடக்கிறது.
நீங்கள் மென்மையான கலைஞன். அமைதியாக இருங்கள்.
சொல்லி கொடுங்கள். நாங்கள் செயல்படுத்துகிறோம்.
அவர் மீது அக்கறை கொண்டு சொல்கிறோம். நடிகர் ரஜினிகாந்துக்கு ஓய்வு தேவை என்பதால் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. அவர் வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படாது.
அவரை கெஞ்சி கேக்குறேன் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்.”
இவ்வாறு சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
Seeman views on Rajinikanth in politics