தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை தமிழகத்தில் ஐபிஎஸ் போட்டியை நடத்தக் கூடாது என பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.
அப்போது நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களை சில போராட்டக்காரர்கள் தாக்கினர்.
இதை ரஜினி கடுமையாக விமர்ச்சித்திருந்தார். காவலர்கள் தாக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது…
“காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடகாவில் கலவரம் வரும் என்றுதான் மத்திய அரசு கூறியது. தமிழ்நாட்டில் கலவரம் வரும் என்று கூறவில்லை.
ஏனென்றால் தமிழர்கள் அறவழியில்தான் போராடுவார்கள் என்று மத்திய அரசுக்கு தெரியும்.
கர்நாடகாவில் கேபிஎன் பேருந்துகள் எரிக்கப்பட்ட போது கூட தமிழர்கள் அறவழியை தான் மேற்கொண்டார்கள்.
கர்நாடகாவில் காவிரி விவகாரம் என்பது அரசியல், ஆனால் தமிழ்நாட்டை பொருத்தவரை அது உயிர் ஆதாரம். இரண்டையும் ஒப்பிட கூடாது.
நான் பல இடங்களுக்கு செல்கிறேன். பலருடன் போட்டோ எடுத்து கொள்கிறேன். என்னுடன் போட்டோ எடுப்பவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அன்று காவலர் தாக்கியது யார்? என்பது எனக்கு தெரியாது.
அன்று காவலருக்கு ஆதரவாக ரஜினி ட்வீட் போட்டார். ஆனால் சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக ஏன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் எழுதவில்லை…?
பொழுது போகவில்லை என்றால் இமயமலை போய் ‘ஸ்வெட்டர்’ போடட்டும் இங்கு சென்னையில் உட்கார்ந்து ஏன் ட்விட்டர் போடுகிறார்.
காவிரிப் பிரச்னையை திசை திருப்பவே காவல்துறைக்கு ஆதரவாக ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்” என்று சீமான் பேசினார்.