தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை நேற்று உறுதிப்படுத்தினார்.
அடுத்தாண்டு 2021 ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டரில் அறிவித்தார் ரஜினிகாந்த்.
“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.
அப்போது… “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.
நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.
இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பானது.
இந்த நிலையில் ரஜினி அரசியல் கட்சி குறித்து இயக்குனரும் நடிகருமான சீமான் கூறியதாவது…
ரஜினி கட்சியை நிர்வகிக்க மக்கள் மன்றத்தில் ஒருவர் கூடவா இல்லை ?..
அழுத்தத்தின் காரணமாகதான் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கியுள்ளார்.
ஜனவரியில் கட்சி ஆரம்பித்து ஏப்ரலில் முதல்வர் ஆகிட முடியுமா ?
60 நாளில் ஆங்கிலம் கற்பது எப்படி ? என்பது போல் உள்ளது ரஜினியின் அறிவிப்பு..
எந்த மக்கள் பிரச்சனைக்கு ரஜினி குரல் கொடுத்துள்ளார் ? அவரது தேவை எங்கு உள்ளது ?
இவ்வாறு ‘நாம் தமிழர்’ ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Seeman slams Rajinikanth on his political entry