தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வேலுபிரபாகரன் இயக்கத்தில் தயாராகும் படம் ‘கடவுள்-2’ இதில் பாரதிராஜா, சீமான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துக் கொண்ட சீமான் பேசியதாவது…
ஆண்டாள் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்துவை பா.ஜ.கவை. சேர்ந்த எச். ராஜா வேசி மகன் என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு சீமான் தன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அவர் தொடர்ந்து பேசியதாவது…
வைரமுத்து சொல்லாத விஷயத்தை சொல்லியதாக கூறி பிரச்சினை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் எது வேண்டுமானாலும் எல்லாம் பேசுகிறார். நீங்கள் என்ன சொன்னாலும் இங்கு கால் ஊன்ற முடியாது.
கொல்லைப்புறமாக வந்து கோட்டையில் ஏற முடியாது.
தாமரை ஒருபோதும் இங்கு மலராது. எங்கள் உடலில் படர் தாமரைதான் படர்கிறது.
நீங்கள் நோட்டோவுக்கு கீழ் இருப்பதால் தான் பேட்டா ரஜினிகாந்தை அழைத்துக் கொண்டு வருகிறீர்கள்.
ரஜினி ஆன்மீக அரசியல் பற்றி பேசுகிறார். அப்படியென்றால் கட்சி செயற்குழு, பொதுக்குழு கோயிலில் நடக்குமா? நான் ஒருதடவை சொன்னால் நூறு தடவை சொன்னமாதிரி என்று சினிமாவின் பஞ்ச் டயலாக் பேசலாம்.
ஆனால் இங்கு அரசியலில் ஒவ்வொன்றையும் நூறு தடவை சொல்ல வேண்டும். இதை ரஜினி புரிந்துகொள்ள வேண்டும்.
அவர் எந்த பக்கம் நின்றாலும் அதற்கு எதிர் பக்கத்தில்தான் நான் நிற்பேன். தமிழ் மக்களுக்கு என்ன செய்துவிட்டீர்கள்? அவர்களை ஆள்வதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
இவ்வாறு சீமான் பேசினார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் வேலுபிரபாகரன், பாடல் ஆசிரியர் சினேகன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.