தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கறுப்பு பணத்தை ஒழிக்கும் திட்டமாக ரூ. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்தார்.
இதற்கு ரஜினி, கமல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து சீமான் கூறியதாவது…
மோடியின் அதிரடி திட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணக்காரர்கள் வரிசையில் நிற்கிறார்களா? நடுத்தர மக்கள்தான் பேங்க் வாசலில் கால்கடுக்க நிற்கின்றனர்.
தஞ்சாவூரில் 8 கோடி ரூபாய் பிடிபட்டுள்ளது.
அதில், இரண்டாயிரம் ரூபாய் புது நோட்டுகளும் பிடிபட்டுள்ளன.
வங்கிக்கே இன்றுதான் அந்த நோட்டுக்கள் வந்துள்ளன.
அதற்குள் அவர்கள் கைகளுக்கு எப்படிச் சென்றது?
வரி ஏய்க்காமல் இருக்கும் நடிக்கும் நடிகர், நடிகைகள் யார்?
எதற்கும் கருத்துச் சொல்லாத ரஜினி, இதற்கு மட்டும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
காவிரி மேலாண்மை வாரியத்தை மோடி அரசு அமைக்கவில்லை’ எனக் கேள்வி கேட்டாரா ரஜினி?
காவிரியால் கர்நாடக தமிழர்கள் பாதிக்கப்பட்டார்களே, அதைப் பற்றி பேசினாரா? ” என்றார் சீமான்.