தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் ரஜினியுடன் சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா,சசிகுமார்,சமுத்திரகனி, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத், தமிழக சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட சசிகுமார் பேசியதாவது…
“எல்லாப் படமும் சீக்கிரம் முடியனும்னு நினைப்போம். ஆனா பேட்ட பட சூட்டிங் சீக்கிரமா முடிந்ததே என்ற கவலை இருந்தது.
ரஜினி சார் டான்ஸ் வராதுன்னு சொல்வார் ஆனால் அது பொய். அதிகாலை 3 மணிக்கு பணியாற்ற சொன்னாலும் அதை செய்து முடிப்பார்.
ஒரு ரஜினி ரசிகனாக இருந்து கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படம் மிகவும் பிரமாதமாக வந்துள்ளது.
ரஜினி சார் தொடர்ந்து படம் நடிக்க வேண்டும் . ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என எல்லோருக்கு ஆசை இருக்கும்.
எனக்கும் ஆசை இருக்கிறது” என்றார். அதன்பின்னர் தளபதி படத்தில் உள்ள நட்புன்னா என்னானு தெரியுமா? என்ற டயலாக்கை பேசி காண்பித்தார்.
அதன் பின்னர் இறுதியாக ரஜினி பேசும்போது…
சசிகுமாரின் கேரக்டர் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை சிறப்பாக இருக்கும்படியான ஒரு அருமையாக கேரக்டர்.
அவர் ஒரு தாடி மீசை வைச்சக் குழந்தை. அவர் படத்தை தயாரிக்காம நடித்தால் நன்றாக இருக்கும்” என்று வாழ்த்தி பேசினார் ரஜினி.
Sasikumar is like kid says Rajini at Petta Audio launch event