சசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் பிரம்மாண்டமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம்

சசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் பிரம்மாண்டமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)நடிகர் சசிகுமார் கெத்தாக நடந்து வந்து காலரைத் தூக்கிவிட்டு நடித்த கிராமத்து படங்கள் இன்றளவும் அவருக்கான ரசிகர் பேட்டயை அப்படியே வைத்திருக்கிறது. மேலும் அவர் புதுமையான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தாலும் மக்கள் அவரைக் கொண்டாட தயாராகவே இருக்கிறார்கள். கிராமத்து நாயகன் என்பதைத் தாண்டி அவர் பல படங்களில் தனது தடங்களை அற்புதமாக பதித்து வருகிறார். மேலும் அவர் கரியரில் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் படமாக ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது. நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி, வன்மம், மாப்பிள்ளை, டிக் டிக் டிக் உள்பட பதிமூன்று படங்களைத் தயாரித்த நெமிச்சந்த் ஜெபக் நிறுவனம் சார்பாக ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் சசிகுமார் நடிக்கிறார். இப்படத்தில் சசிகுமார் உடன் தேசியவிருது பெற்ற ஜோக்கர் படத்தின் நாயகன் குருசோமசுந்தரம் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப்,
மஞ்சுபெத்து ரோஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான், ஆகிய தரமான படங்களைத் தந்த ஜி.என்.கிருஷ்ணகுமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இப்படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். படம் முழுதும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்பதால் பார்வையாளரை படம் தன் வசப்படுத்திக் கொள்ளும் விதமாக கதை திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

இவை போன்ற திரில்லர் படங்களுக்கு இசையின் பங்களிப்பு மிக முக்கியம். அதை இப்படத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு வெகு சிறப்பாக செய்து வருகிறார் இசை அமைப்பாளர் ரோனி ராப்பில்.

சினிமா என்பதே காட்சிமொழி என்பதால், அந்த மொழியை S.கோபிநாத் அவர்களின் கேமரா மிக அற்புதமாக கற்று வைத்திருக்கிறது. அந்த ரிசல்ட் நமக்குத் திரையில் மிகப்பிரம்மாண்டமாக தெரியும். அவரின் ஒளிப்பதிவு இப்படத்தில் பெரிய அளவில் பேசப்படும்.

அன்பு அறிவு மாஸ்டரின் அதிரடி சண்டைக்காட்சிகள் எப்போதும் பிரம்மிக்க வைப்பவை. பொதுவாக போலீஸ் கதை என்றால் அங்கு சண்டைக்கு பஞ்சமே இருக்காது. இப்படத்தின் சண்டைக்காட்சிகள் படத்திற்கு பெரும்பலம் சேர்க்க இருக்கிறது.
எடிட்டராக தனது சிறப்பான பணியை
K.j வெங்கட் ரமணன் செய்துவருகிறார்.
இப்படத்தின் வசனங்களை அருள்செழியன் எழுத
கலை இயக்கத்தை சிவகுமார் யாதவ் கவனிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படம் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜெபக் அவர்களின் 14-வது தயாரிப்பாகும்.

“புல்லி மூவிஸ்” வழங்க “சத்யராம்” தயாரிக்கும் படம் “கண்டதை படிக்காதே”.

“புல்லி மூவிஸ்” வழங்க “சத்யராம்” தயாரிக்கும் படம் “கண்டதை படிக்காதே”.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஇயக்குனர் ஜோதிமுருகன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார், இவர் ராதாமோகன் ‘சிம்புதேவன் ,வேலு பிரபாகரன், போன்ற பிரபல இயக்குனரிடம் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் இவர் இதற்கு முன்னால் “கபடம்” என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனராக அறிமுகமானார்.

“கபடம்” படத்தை மிகவும் சிறிய பட்ஜெட்டில் இயக்கினார் 2014-ல் ரிலீஸான அந்த படத்தை டிஜிட்டல் Platform ஆனா “அமேசான்” நிறுவனம் படத்தின் பட்ஜெட்டை விட அதிக விலை கொடுத்து வாங்கியது.

தான் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான “கண்டதை படிக்காதே” படமும் டிஜிட்டல் Platform ஆனா “அமேசான்” உடன் பேச்சுவார்தை நடந்துகொண்டுடிருக்கிறது.

“கண்டதை படிக்காதே” படம் பற்றி கூறுகையில் இது ஒரு ஹை கான்செப்ட் ஸ்டோரி லைனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் திரைக்கதை அமைப்பை கொண்ட படங்களை ஹாலிவுட்டில் ஹை கான்செப்ட் திரைப்படம் என்று அழைப்பார்கள் இந்த மாதிரியான படங்களில் எந்த நடிகர் நடித்தாலும் படத்தின் கதை அம்சமே படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கிவிடும். அதே மாதிரி இந்த படமும் ஹாரர், மர்டர், மிஸ்டரி, மற்றும் ஆக்ஷன் கலந்த ஜனரஞ்சமான திரைப்பமாக இருக்கும். படம் ஆரம்பித்து மூன்று நிமிடங்களுக்குள் ரசிகர்களின் கவனத்தை படம் கவர்ந்துவிடும் படத்தின் இறுதிக் காட்சி வரையிலும் சஸ்பென்ஸ் இருந்துக்கொண்டேயிருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை தூண்டுகின்ற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்று இயக்குனர் கூறினார்.

படத்தில் ஆதித்யா ஹீரோவாக நடித்திருக்கிறார் இவர் தமிழில் “பயமறியான்” “கபடம்” ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார், திருப்பாச்சி புகழ் “பான்பராக் ரவி ஆர்யான்” வில்லனாக நடித்திருக்கிறார்,

சண்டைக் காட்சிகளில் ஆதித்யாவும் பான்பராக் ரவி ஆர்யானும் உயிரை பணயம் வைத்து நடித்திருக்கிறார்கள்.

“சபிதா ஆனந்த்” முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் படப்பிடிப்பு தளத்தில் “சபிதா ஆனந்த்” தன் வாழ்நாளில் இப்படி ஒரு அற்புதமான கேரக்டரில் முதல் தடவையாக தான் நடிப்பதாக கூறினார்,

படத்தின் தயாரிப்பாளரூம் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

“பிரீத்தி” “சுஜி “வைஷாலி” “ஜென்னி” என நான்கு ஹீரோயின்கள் இதில் நடித்திருக்கிறார்கள் மற்றும் “நவீன்” “சீனு” “மணிமாறன்” “நாகராஜ்” போன்ற சினிமா பட்டாளமே நடித்திருக்கிறது.

ஒளிப்பதிவு “மகிபாலன்” இசை “செல்வா ஜானகிராஜ்” எடிட்டிங் “சுரேஷ் அர்ஸ்” ஸ்டன்ட் “ஆக்ஷன் பிரகாஷ்” கலை “முனி கிருஷ்ணா” ஓலி வடிவமைப்பு தரணிபதி”, பாடல்கள் “ரவிதாஸ்” எழுத இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் இயக்குனர் “ஜோதி முருகன்”,

படப்பிடிப்பு கொடைக்கானல், ஊட்டி, சென்னை, ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டடுள்ளது.

விஸ்வாசம் சிவாவுக்கு பாராட்டு; இதான்யா தலைவர் என ரசிகர்கள் கருத்து

விஸ்வாசம் சிவாவுக்கு பாராட்டு; இதான்யா தலைவர் என ரசிகர்கள் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Wishes Director Siva For Viswasam Thalaivar fans happyபொங்கல் திருநாளும் அன்றைய தினத்தில் ரிலீசாகும் படங்களும் பரபரப்பாக பேசப்படும். அதுவும் இந்தாண்டு 2019 பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படத்துடன் அஜித்தின் விஸ்வாசம் மோதியதால் பெரும் சர்ச்சையானது.

இரண்டு படங்களும் வெற்றிப் பெற்ற போதிலும் ரசிகர்கள் மாறி மாறி மோதிக் கொண்டனர்.

இந்திய சினிமாவில் ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய நடிகர் என்ற போதிலும் அஜித் ரசிகர்கள் (சிலர்) தரக்குறைவான மீம்ஸ்களை போட்டு தாக்கினர்.

இதுபற்றி அஜித் எந்த வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஓரிரு தினம் முன்பு நடிகர் ரஜினிகாந்த் விஸ்வாசம் படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். அவர் இயக்குனர் சிவாவை தன் வீட்டிற்கே அழைத்து பாரட்டியிருக்கிறார் என்பதுதான் ஹைலைட்.

இதான்யா எங்க தலைவர். அவரின் நல்ல உள்ளம் என ரஜினி ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Rajini Wishes Director Siva For Viswasam Thalaivar fans happy

‘மாபியா’வில் இணையும் அருண் விஜய்-பிரசன்னா-கார்த்திக் நரேன்

‘மாபியா’வில் இணையும் அருண் விஜய்-பிரசன்னா-கார்த்திக் நரேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prasanna turns villain for Arun Vijay in Karthick Narens next‘துருவங்கள் பதினாறு’ என்ற தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் டைரக்டர் கார்த்திக் நரேன்.

இதனையடுத்து அவரது இயக்கத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

சில மாதங்களில் ‘நரகாசூரன்’ படத்தை அறிவித்தார். படப்பிடிப்பும் நடைபெற்றது. ஆனால் படம் வெளியாகவில்லை.

சில நாட்களில் ‘நாடக மேடை’ என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார் கார்த்திக் நரேன்.

ஆனால் அந்த படமும் தயாராகவில்லை.

இந்நிலையில் அருண் விஜய்யை வைத்து கார்த்திக் நரேன் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்திற்கு ‘மாபியா’ என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கவுள்ளதாக கூறப்பகிறது.

நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க. வில்லனாக பிரசன்னா நடிக்கிறாராம்.

விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Prasanna turns villain for Arun Vijay in Karthick Narens next

ரஜினி-விஜய்-அஜித் ரசிகர்களுக்கு சவால் விட்ட சூர்யா ரசிகர்கள்

ரஜினி-விஜய்-அஜித் ரசிகர்களுக்கு சவால் விட்ட சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya fans set Worlds Biggest Cut Out for NGK releaseசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா முதன்முறையாக நடித்துள்ள படம் என்ஜிகே.

இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் இசையமைத்துள்ளார்.

இந்த கூட்டணிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நாளை மறுநாள் மே 31ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தை வரவேற்கும் நிலையில் சூர்யா ரசிகர்கள் அதிரடியாக மிகப்பெரிய கட் அவுட்தை திருத்தணியில் வைத்துள்ளனர்.

இதன் உயரம் மட்டும் 215 அடி என தெரிய வந்துள்ளது.

இதுவரை மற்ற நடிகர்களின் ரசிகர்கள் வைத்த கட் அவுட்களை இது மிஞ்சியுள்ளது.

ரஜினியின் பல படங்களுக்கு அவரது ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர்.

அதுபோல் சர்கார் பட ரிலீசின் போது கேரளாவில் விஜய்க்கு 175 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும், அதனைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்துக்காக அஜித்துக்கு திண்டுக்கல்லில் 190 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும் தான் மிகப்பெரிய கட்-அவுட் சாதனைகளாக இருந்தன.

மேலும் உலகத்தின் மிகப்பெரிய கட்அவுட் எனவும் ட்விட்டரில் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.

சூர்யா ரசிகர்களின் இந்த சாதனை இந்திய சினிமாவையே அதிர வைத்துள்ளது எனலாம்.

Suriya fans set Worlds Biggest Cut Out for NGK release

வினோத் இயக்கும் அரசியல் கதையை அவாய்ட் செய்த அஜித்

வினோத் இயக்கும் அரசியல் கதையை அவாய்ட் செய்த அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith avoid political story in his next movie Thala 60வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தை தயாரித்து வருகிறார் போனி கபூர்.

இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதே கூட்டணி மீண்டும் அஜித்தின் அடுத்த படத்திற்கும் இணைகிறது என்பதை பார்தோம்.

அப்படத்திற்காக அஜித்திடம் இரண்டு கதைகளைச் சொன்னாராம் இயக்குனர் வினோத்.

அதில் ஒரு கதை சமூகப் பிரச்சினை அலசும் கதையாம். மற்றொரு கதை அரசியல் கதையாம்.

ஆனால் அரசியல் கதை வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அஜித்.

மற்றொரு கதையான சமூக பிரச்சினையில் அதற்கான தீர்வு உள்ளதாம். எனவே தனக்கு அது செட்டாகும் என நினைத்து அதை ஓகே பண்ணி விட்டாராம் தல.

Ajith avoid political story in his next movie Thala 60

More Articles
Follows