விஜய் சேதுபதியை மிஞ்சிய சந்தானம்

விஜய் சேதுபதியை மிஞ்சிய சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Santhanam Vijay Sethupathiதமிழ்சினிமாவில் அவ்வப்போது பேராச்சர்யங்கள் நிகழும். அப்படி சினிமாவில் நிகழ்ந்த பேராச்சர்யம் நடிகர் சந்தானம். மிக எளிமையான இடத்தில் இருந்து வந்து கடுமையாக உழைப்பவர்களை சினிமா வலிமையான இடத்தில் வைக்கும். இப்போது சந்தானம் நாயகனாக அப்படியொரு வலிமையான இடத்தில் அமர்ந்துள்ளார். அவர் இருக்கும் இடத்திற்கு பின்னால் இருப்பது வெற்று புரோமோஷனும், வெட்டிப் பந்தாவும் இல்லை. உண்மையான மற்றும் மனம் தளராத அவரது உழைப்பு. விஜய் டிவியில் லொள்ளுசபா மூலமாக மக்களின் மனதில் அமர்ந்தவர், செய்யும் வேலையை மிகவும் நேசித்தே செய்தார். அந்த நேசிப்பும் அர்ப்பணிப்பும் தான் அவரை மன்மதன் படம் மூலமாக சினிமாவிற்கு இழுத்து வந்தது. சினிமாவில் தோன்றிய ஒரே நாளில் அவர் காமெடியில் உச்சம் அடையவில்லை. படிப்படியாக தனக்கான இடத்தைப் பிடிக்க அவர் பெரிதும் உழைத்தார். தனித்துவமான காமெடியில் தனித்துவ இடத்தைப் பிடித்தார். பெரிய பெரிய ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்கள் எல்லாரும் சந்தானத்திற்காக காத்திருந்தார்கள். காமெடியில் உச்சத்தில் இருந்த போதே ஹீரோ அவதாரம் எடுத்தார். ஹீரோவாக அவர் எடுத்து வைத்த முதல்படியே வெற்றிப்படியாக அமைந்தது. அடுத்தடுத்தப் படங்களிலும் மிகச்சிறப்பாக கவனம் செலுத்தினார். இப்பொழுது அவரது படங்கள் எப்போது வெளியாகிறது? என்று மக்கள் கவனிக்கத் துவங்கி விட்டார்கள். மேலும் வியாபார ரீதியாகவும் வசூல் ரிதீயாகவும் சந்தானம் பலரும் ஆச்சர்யப்படும் இடத்தில் இன்று இருக்கிறார். குறிப்பாக சந்தானம் நடிக்கும் படங்களை குடும்பத்தோடு சென்று பார்க்கலாம் என்ற பேச்சு பலமாக இன்று கேட்கிறது.

இந்த வருடம் சந்தானம் திரைவாழ்வில் மிக முக்கியமான வருடமாக இருக்கும் என்பதை அவரது நடிப்பில் வெளியாகவுள்ள படங்களின் வரிசையை பார்க்கும் போதே தெரிகிறது. நடிகர் விஜய்சேதுபதி தான் அதிக படங்களில் நடித்து வரும் கதாநாயகன் என்று ஒரு கருத்து சினிமாவில் உண்டு. ஆனால் சந்தானத்தின் படங்கள் விஜய்சேதுபதி படங்களை விட அதிகமாகவுள்ளது. வியாபாரத்திலும் சந்தானம் முன்னணியிலே இருக்கிறார்.

இந்த வருடம் டகால்டி வெற்றியை தொடர்ந்து சர்வர் சுந்தரம்,பிஸ்கோத், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்கு துட்டு3 ஆகிய படங்கள் வெறித்தனமான கன்டென்ட் மற்றும் பிரம்மாண்டத்தோடு தயாராகி வர, அடுத்தடுத்த சந்தானத்தின் கமிட்மெண்ட்களும் வேறுலெவலில் இருக்கிறது. A1 படத்தை இயக்கிய ஜான்சன் இயக்கத்தில் ஒரு படத்திலும், ராஜேஷ் M இயத்தில் ஒரு படத்திலும், வஞ்சகர் உலகம் என்ற தரமான படத்தைத் தயாரித்த புரொடக்சன் கம்பெனி தயாரிக்கும் புதியபடத்திலும் நடிக்கிறார் சந்தானம். மேலும் ஒரு நடிகராக மட்டும் அல்லாமல் சிறந்த மனிதராகவும் சந்தானம் இருக்கிறார். வெளியில் தெரியாமல் எத்தனையோ பேர்களுக்கு உதவியும் வருகிறார். இதையெல்லாம் அவர் வெளியில் சொல்ல விரும்புவதே இல்லை. சந்தானம் என்ற பெயரில் வாசம் இருப்பது போல் அவரிடம் நிறைய பாசமும் இருக்கிறது. அதுதான் அவரை உயர்த்தி வருகிறது. காமெடியனாலும் கதாநாயகனாலும் இனி நான் தான் என மற்ற ஹீரோக்களுக்கு சந்தானம் சவால் விடுவதுபோல் இருக்கிறது இந்த வருடம்.

எழுச்சிக்கு பின் வருவாரா.? தேவையே இல்லை… ஆனாலும் ரஜினியை அழைக்கும் தங்கர் பச்சான்

எழுச்சிக்கு பின் வருவாரா.? தேவையே இல்லை… ஆனாலும் ரஜினியை அழைக்கும் தங்கர் பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth thangar bachanநான் ஒரு நாளும் என்னை முதல்வராக நினைக்கவில்லை.. கட்சி தலைவராக பதவியேற்பேன்.

ஆட்சியில் அமர மாட்டேன். ஆட்சி மாற்றம் உருவாகனும். மக்களிடையே அரசியல் மாற்றத்திற்கான எழுச்சி உருவாக வேண்டும்.

அப்போது அரசியல் களத்துக்கு வருவேன்.. என ரஜினிகாந்த் இன்று காலை அறிவித்தார்.

இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான தங்கர் பச்சான் கூறியதாவது…

அரசியல் தொழிலாகிவிட்ட இக்காலத்தில் ரஜினி கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது.
அவர் களத்தில் இறங்கினால் மட்டுமே அந்த மாற்றம் உருவாகும்!

மாற்றம் உருவான பின் களத்திற்கு வருவேன் எனச் சொன்னால் மக்களுக்கு அவர் தேவையே இல்லை!

கட்டாயம் அவர் களம் இறங்குவார்! ரஜினி அவர்களை வரவேற்கிறேன்!

என தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பால் ஆஸ்கர் விருது வென்ற நடிகர் டாம் ஹெங்ஸ் தவிப்பு

கொரோனா பாதிப்பால் ஆஸ்கர் விருது வென்ற நடிகர் டாம் ஹெங்ஸ் தவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tom hanksஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹெங்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தங்களின் சினிமா பணி தொடர்பாக இருவரும் ஆஸ்திரேலியா சென்ற போது கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே தம்பதியர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக டாம் ஹெங்ஸ் உறுதி செய்துள்ளார்.

அரசியல் மாற்றம் இப்போ இல்லேனா எப்பவுமே இல்ல..; கஸ்தூரி போட்ட ‘ரஜினி’ வெடி

அரசியல் மாற்றம் இப்போ இல்லேனா எப்பவுமே இல்ல..; கஸ்தூரி போட்ட ‘ரஜினி’ வெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini kasthuriஇன்று மார்ச் 12ஆம் தேதி ரஜினிகாந்த் 3 அரசியல் திட்டம் குறித்து பேசினார்.

ரஜினி பேச்சுக்கு சீமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர்.

நடிகை கஸ்தூரியும் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.்ஒரே வார்த்தையோடு முடித்து கொண்டுள்ளார்.

அதில், “அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது நிகழவில்லை எனில் எப்போதுமே நிகழாது -ரஜினிகாந்த் அதிரடி என்று குறிப்பிட்டு

“போடுறாவெடிய ” என்ற வார்த்தையை பதிவிட்டுள்ளார்.

ரஜினியை பாராட்டி சொன்னாரா? கிண்டல் அடித்தாரா? என்பது கஸ்தூரிக்கே வெளிச்சம்.

மார்ச் 12 இன்றும் ஐடி ரெய்டு.; மாஸ்டர் விஜய்க்கு தொடரும் டார்ச்சர்..!

மார்ச் 12 இன்றும் ஐடி ரெய்டு.; மாஸ்டர் விஜய்க்கு தொடரும் டார்ச்சர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Vijayஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘பிகில்’.

இந்த படத்திற்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்புகள் குறித்தும், கடந்த பிப்., 5ல், நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ்., வீடு மற்றும் தியேட்டர்களிலும், இப்படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன் அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மூவருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பி அதிகாரிகள் விசாரித்தனர்.

இரு தினங்களுக்கு முன் ‛மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமார் வீட்டில், வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று மார்ச் 12 விஜய்யின் பனையூர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அரசியல் மாற்றத்திற்கான ரஜினி சொன்ன 3 திட்டம் என்ன? முழுமையான தகவல்கள் இதோ

அரசியல் மாற்றத்திற்கான ரஜினி சொன்ன 3 திட்டம் என்ன? முழுமையான தகவல்கள் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth at press meetஅரசியல் சிஸ்டம் சரியில்லை முதலில் அதைச் சரி செய்யவேண்டும்’ என்றார் ரஜினிகாந்த்.

ஒரு நல்ல ஆட்சியைக் கொடுக்க வேண்டுமென்றால் வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் போதாது, இங்கு அரசியல் மாற்றம் வர வேண்டும்.

அந்த அரசியல் மாற்றத்துக்காக நான் சில திட்டங்களை வைத்திருக்கின்றேன்.

ரஜினியின் மூன்று திட்டங்கள்;

1)திட்டம் ஒன்று;
முதல்வராக ஆசையில்லை; மக்கள் எழுச்சி உருவாக வேண்டும்.. – ரஜினி

கட்சிப் பதவி தொடர்பானது . பெரிய அரசியல் கட்சிகளில் மாநில நிர்வாகிகளில் துவங்கி, ஊராட்சிகள் வரை கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி பதவிகள் இருக்கின்றன .

இந்த ஐம்பதாயிரம் பதவியில் இருப்பவர்களின் குடும்பத்தினர் ,உறவினர், நண்பர்கள் என்று ஒரு பதவிக்கு ஐம்பது பேர் என்று எடுத்துக் கொண்டாலும் அவர்களின் எண்ணிக்கை இருபத்தைந்து லட்சமாக இருக்கும்.

இவர்கள் அனைவரையும் திருப்தி படுத்த வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சியினருக்கு ஏற்படுவதால் பெரிய அளவில் ஊழல் நடைபெற வாய்ப்புகள் உருவாகின்றன .

கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெற்று தர கட்சிகளுக்கு பெரிய அளவில் உதவுவார்களே தவிர, தேர்தலுக்கு பிறகு இவர்களால் அரசுக்கும், மக்களுக்கும் தொந்தரவது தான் அதிகம் .

ஆகவே தேர்தல் முடிந்தவுடன் கட்சிக்குத் தேவைப்படும் அத்தியாவசியமான பதவிகளை மட்டும் வைத்துக் கொண்டு தேவையற்ற மற்ற பதவிகளை நீக்க வேண்டும். இதுதான் என்னுடைய முதல் திட்டம் .

2)திட்டம் இரண்டு;

ரஜினியின் அரசியல் முடிவை வரவேற்று வாழ்த்துகிறோம்… – சீமான்

பொதுவாகவே இந்தியாவில் சட்ட மன்றங்களிலும் பாராளுமன்றத்திலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் பெரும்பாண்மை உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த வயதுக்கு கீழ் உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு இளைஞன் அரசியலில் பிரகாசிக்க வேண்டுமென்றால், எம்.பி மகனாகவோ, எம்.எல்.ஏ மகனாகவோ, பசெல்வாக்கு உள்ளவராக இருக்க வேண்டும் என்ற நிலை மாற வேண்டும். நல்லவர்கள், படித்தவர்கள், இளைஞர்கள் அரசியலில் ஈடு படுபட முன்வர வேண்டும்.

எனது கட்சியில் ஐம்பது வயதுக்கு கீழ் உள்ளவர்கள், ஓரளவு படித்தவர்கள் ,நேர்மையான தொழில் செய்பவர்கள், அவர்கள் வாழும் பகுதியில் கண்ணியமானவர் களை தேர்வு செய்து, 60 முதல் 65 சதவீதம் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து மீதியுள்ள 35 – 40 சதவீதத்தில் வேறு கட்சியில் வாய்ப்பு கிடைக்காத நல்லவர்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஸ், ஐ.பி.ஸ் அதிகாரிகள் விருப்பப்பட்டு நமது இயக்கத்தில் சேரவிரும்பினால் அவர்களுக்கு வாய்ப்பளித்து அனைவரையும் சட்டமன்றத்திற்கு அனுப்பி அதிகார சூத்திரத்தை கையில் எடுத்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.

அதற்கு நான் பாலமாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்தை அடைவதற்கு கடந்த 45 வருடங்களாக நான் திரையுலகில் ஈட்டிய புகழ், தமிழ் மக்கள் என் மீது செலுத்தி வரும் பேரன்பு அவர்களுக்கு என் மேல் இருக்கும் நம்பிக்கை அனைத்தும் உதவுமென நம்புகிறேன்.

3)திட்டம் மூன்று;

கட்சித் தலைமையையும், ஆட்சித் தலைமையையும் தனித் தனியாக பிரிப்பது .

அதாவது கட்சியை நடத்தும் தலைவர் வேறு ,ஆட்சியை நடத்தும் தலைவர் வேறு.

இந்த இரண்டையும் ஒன்றாகவே இணைத்து பார்த்து பழகிவிட்ட தமிழக அரசியலில் ஒரு மாற்று அரசியலை கொண்டுவர வேண்டியது. கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒரே நபரின் தலைமை எனும் பட்சத்தில் தேர்தலில் ஜெயித்து ஆட்சி அதிகாரத்திற்கு வருபவரின் ஐந்துவருட ஆட்சியில் என்ன தப்பு நடந்தாலும் மக்களோ, கட்சி பிரமுகர்களோ ஆட்சியாளரை தட்டி கேட்க முடியாது.

அவரை பதவியிலிருந்து கீழே இறக்கவும் முடியாது . இதையும் மீறி கட்சியில் இருப்பவர்கள் தட்டிக் கேட்டால் அவர்களை பதவியிலிருந்து இறக்கிவிடுவார்கள் அல்லது தூரமாக தள்ளி வைத்து விடுவார்கள்.

இந்த நிலை மாற கட்சி தலைமை மிகவும் வலிமையாக இருந்தால் தான் ஆட்சியில் இருப்பவர்கள் தவறுசெய்யும் போது தட்டி கேட்க முடியும் . தவறு செய்தவர்களைத் தூக்கி எறியவும் முடியும் .

மேலும் மக்களுக்கு கட்சி கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் சரிவர செயல்படுத்தும் படி பார்த்துக்கொள்ளும் .கட்சி சார்ந்த விழாக்களில், ஆட்சியாளர்கள் கலந்து கொள்ள வேண்டியதில்லை.

ஆட்சி நிர்வாகத்தில் அவர்களின் முழுக்கவனமும் இருப்பதற்கு இது உதவும்.

கட்சி சிறப்பாக நடைபெற மக்கள் வளர்ச்சிப் பணியில் அனுபவம் வாய்ந்த பல்வேறு துறைகளை சார்ந்த வல்லுனர்களை தேர்ந்தெடுத்து ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்கி அவர்கள் பரிந்துரைக்கும் ஆலோசனைகளை ,அரசின் மூலம் செயல்படுத்தப்படுவதை கட்சி தலைமை உறுதி செய்யும்.

இதுவே எனது மூன்றாவது திட்டம் . இது தான் அரசியல் மாற்றத்துக்கான எனது முக்கியான திட்டங்கள் என அவர் கூறினார்.

More Articles
Follows