மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா ! ஆக்ஸிஜன் மூலம் தீவிர சிகிச்சை

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா ! ஆக்ஸிஜன் மூலம் தீவிர சிகிச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் சிகிச்சை மறுபுறம் சினிமா பட வேலையில் ஈடுபட்டிருந்த சமந்தா மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் சிகிச்சையை எடுத்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது.

இந்த சிகிச்சை வீக்கத்தைக் குறைக்கவும், நோய்த்தொற்றுகளைக் குணப்படுத்தவும், சேதமடைந்த திசுக்களை சரிசெய்யவும் உதவுகிறது.

விரைவில் இது மையோசிடிஸ் நோயை குணப்படுத்தவும் உதவும் என்கிறது மருத்துவ உலகம்.

ஆனால், இந்த புகைப்படத்தைப் பார்த்து சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவர் விரைவில் பூரண நலமடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டுள்ளனர்.

Samantha underwent Hyperbaric Therapy share emotional post

உங்களுக்கு 2 ஸ்டோரி.. உங்க பெயரில் அன்னதானம்.; விஜய்யை சந்தித்த விஷால் தகவல்

உங்களுக்கு 2 ஸ்டோரி.. உங்க பெயரில் அன்னதானம்.; விஜய்யை சந்தித்த விஷால் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் டீஸர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாக இருக்கிறது.

இதை தொடர்ந்து ‘தளபதி’ விஜய்யை சந்தித்து ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீஸரை காண்பிக்க படக்குழுவினர் அனுமதி கேட்டு தொடர்பு கொண்டபோது உடனே அழைப்பு விடுத்தார்.

இதை தொடர்ந்து நடைபெற்ற தளபதி விஜய், புரட்சி தளபதி விஷால் இருவரது சந்திப்பின்போது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீஸரை கண்டு மகிழ்ந்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார் தளபதி விஜய்.

அதற்காக நன்றி தெரிவித்த நடிகர் விஷாலிடம் “நண்பனுக்காக இதை செய்ய மாட்டேனா” என்று விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த சந்திப்பின்போது தளபதி விஜய் அவர்களுக்கு மார்க் ஆண்டனி படக்குழுவினர் பூங்கொத்து வழங்கினார்கள்.

ஆனால் நடிகர் விஷால் வழக்கம்போல் பூங்கொத்தை தவிர்த்து, தளபதி விஜய் அவர்களின் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதை அவரிடம் வழங்கினார்.

அதன்பிறகு தனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை ‘துப்பறிவாளன் 2’ மூலம் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய்யிடம் கூறினார் விஷால்.

மேலும் தொடர்ந்து திரைப்படங்களை இயக்க உள்ளதாகவும் உங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளேன் என நடிகர் விஜய்யிடம் கூறியபோது…

“நீ வா நண்பா.. நான் இருக்கிறேன்.. சேர்த்து பயணிப்போம்” என்று விஷாலிடம் கூறி மேலும் அவரை உற்சாகப்படுத்தினார் தளபதி விஜய்.

இந்த சந்திப்பின்போது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ‘மினி ஸ்டூடியோஸ்’ வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

2 stories for you. Vishal about meeting with Vijay

ரஜினியுடன் மோதுவது குறித்து வெளிப்படையாக பதில் அளித்த சிவகார்த்திகேயன்

ரஜினியுடன் மோதுவது குறித்து வெளிப்படையாக பதில் அளித்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது என்றும், அது ‘மாவீரன்’ படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதும் என்றும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் இன்று காலை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதல்வர் முக ஸ்டாலினின் அரிய புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். அப்போது ‘மாவீரன்’ vs ‘ஜெயிலர்’ பாக்ஸ் ஆபிஸ் மோதல் குறித்து கருத்து தெரிவிக்க சிவகார்த்திகேயனிடம் நேரு ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சிவா அந்த தேதியில் படம் திரைக்கு வருவதை ‘ஜெயிலர்’ படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்று பதிலளித்தார்.

Sivakarthikeyan’s open reply on ‘Maaveeran’ vs ‘Jailer’

JUST IN #ThalapathyVijayforMarkAntony. அட.. இது வேற லெவல் கூட்டணியாச்சே.!

JUST IN #ThalapathyVijayforMarkAntony. அட.. இது வேற லெவல் கூட்டணியாச்சே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘மார்க் ஆண்டனி’.

இதில் நாயகியாக ரித்து வர்மா நடிக்க, வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க, தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தை மினி ஸ்டுடியோ சார்பாக வினோத் பிரம்மாண்டாக தயாரித்துள்ளார்.

இந்த ‘மார்க் ஆண்டனி’ பட டீசர் இன்று ஏப்ரல் 27ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டரை வெளியிட்டு இருந்தனர்.

அதில் ஒரு போஸ்டரில்.. செம மாஸாக ஸ்டைலாக எஸ்.ஜே. சூர்யா போஸ் கொடுத்துள்ளார்.

மற்றொரு போஸ்டரில் நடிகர் விஷால் நீண்ட தலைமுடியுடன் தாடி மீசையை ஷேவிங் செய்த முகத்துடன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 27ஆம் தேதி தளபதி விஜய் ஃபார் மார்க் ஆண்டனி என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் ஒருவேளை மார்க் ஆண்டனி படத்தின் டீசரை நடிகர் விஜய் வெளியிடுகிறாரா? என சந்தேகம் எழுந்துள்ளது.

இதுவரை நடிகர் விஜய் தன்னுடைய twitter பக்கத்தில் அவருடைய பட டீசர் & போஸ்டர்கள் மட்டுமே வெளியிட்டுள்ளார். மற்றொரு நடிகரின் பட தகவல்களை வெளியிட்டதில்லை. எனவே இது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒருவேளை ‘மார்க் ஆண்டனி’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறாரா ? என்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

காத்திருப்போம் மக்களே…

#ThalapathyVijayforMarkAntony

Get ready for the fiery #MarkAntony Teaser releasing on April 27! 🔥😎

#MarkAntonyTeaserFromApril27

A @gvprakash Musical! 🎼

@iam_SJSuryah @VishalKOfficial @vinod_offl @Adhikravi
@riturv #SunilVerma #nizhalgalravi
@ministudiosllp #YGeeMahendran
@editorvijay @AbinandhanR

Vijay to launch the teaser of Vishal’s Mark Antony

போனிகபூர் மாமா நன்றி.. அருண்விஜய் ஹாலிவுட் லெவல்.. மிஷ்கின் ஒரு வியப்பு – உதய் கார்த்திக்

போனிகபூர் மாமா நன்றி.. அருண்விஜய் ஹாலிவுட் லெவல்.. மிஷ்கின் ஒரு வியப்பு – உதய் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில் எம்.ஆர். மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி ரித்விக், சாய் ப்ரியா, ஸ்ரீனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘டைனோசர்ஸ்’.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் புகழ் நடிகர் ரிஷி ரித்விக் பேசியதாவது…

அட்டு படத்திற்குப் பிறகு மீண்டும் நார்த் மெட்ராஸ் கதை. ஒரு நல்ல அனுபவம் இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி , உதய் கார்த்திக் அவர்களுக்கு இதற்குப் பின் சிறந்த எதிர்காலம் இருக்கும் , எங்கள் அனைவருக்கும் உங்கள் ஆதரவு தர வேண்டும்

நடிகை சாய் ப்ரியா தேவா பேசியதாவது…

மாதவன் சார் என்னிடம் கதை சொன்னதைவிட மிக அற்புதமாகப் படத்தை எடுத்துள்ளார். ஒவ்வொருவரும் மிகப்பெரும் உழைப்பைத் தந்துள்ளனர். எங்கள் குழுவினரின் உழைப்பு மிகப்பெரிய வெற்றியைத் தரும். அன்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவருக்கும் நன்றி.

திருமலை இயக்குநர் ரமணா பேசியதாவது..

பதினொரு வருடத்திற்குப் பிறகு என்னுடைய படம் வெளியானால் எனக்கு இருக்கும் மகிழ்ச்சி போன்று எனக்கு இன்று உள்ளது அதற்கு காரணம் மாதவன்.

இந்தப் படத்தில் நான் பணி செய்யக் காரணம் சென்னை நகரை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர், இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டும் அனைவரும் புதிது என்று சொன்னார்கள் அதற்காக இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று நான் கூறவில்லை.

படத்தின் கதை புதிது அதற்காக இப்படம் வெற்றி பெற வேண்டும் , பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் நன்றி.

நாயகன் உதய் கார்த்திக் பேசியதாவது..

முதலில் என் மாமா போனி கபூர் அவர்களுக்கு நன்றி, கோவிட் நேரங்களிலும் மூன்று படத்தை வெளியிட்டு பலரது வாழ்வில் வெளிச்சத்தை அளித்துள்ளார்.

அவருக்குப் பல பணிகள் உள்ளது இதற்கிடையில் எனக்காக இங்கு வந்ததற்கு நன்றி, இயக்குநர் மிஷ்கின் சார் நான் உங்களுடைய ரசிகன் அஞ்சாதே படம் முதல் இன்று வரை உங்களைப் பார்த்து வியந்து வருகிறேன்.

அருண் விஜய் அண்ணா ஒரு ஹாலிவுட் நடிகர் தன்னை செதுக்குவது போல் செதுக்கியவர், இயக்குநர் ரமணா சாருக்கு நன்றி, இங்கு வந்துள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு இந்த தருணம் பெருமையாக உள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சாருக்கு மிகப்பெரும் நன்றி. இந்தப்படம் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் அனைவருக்கும் நன்றி.

actor Udhay Karthick speech in dienosirs movie trailer luanch

143 தயாரிப்பாளரை அணுகினேன்.. சினிமா எட்டி உதைக்கிறது – மாதவன்

143 தயாரிப்பாளரை அணுகினேன்.. சினிமா எட்டி உதைக்கிறது – மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில் எம்.ஆர். மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி ரித்விக், சாய் ப்ரியா, ஸ்ரீனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘டைனோசர்ஸ்’.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் M R மாதவன் பேசியதாவது…

சினிமா கண்டிப்பாக அனைவரையும் எட்டி உதைக்கும்.. நாம் தான் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.. படம் வெற்றி பெறுவது எனக்கு முக்கியம் என்பதை விடப் படத்தில் பணி புரிந்துள்ள 100 பேருக்குத் தான் முக்கியம்.

இந்தப்படம் 33 கதாநாயகர்களிடம் சென்றது. ஆனால் கார்த்திக் இப்படத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார்.

பல நண்பர்களின் முயற்சியால் தான் நான் இங்கு வந்தேன், தயாரிப்பாளர் ஸ்ரீனி சார் என் தந்தை போன்றவர், நான் கேட்ட அனைத்தும் செய்து கொடுத்தார், நான் வாழ் நாள் வரை அவரை மறக்க மாட்டேன்,

143 தயாரிப்பாளரை நான் அணுகியுள்ளேன். ஆனால் இவர் தான் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார், என்னை இந்த தயாரிப்பாரிடம் அழைத்துச் சென்றது இயக்குநர் H வினோத் தான் அவருக்கு மிகவும் நன்றி. கதாநாயகன் உதய் கார்த்திக்பெரிய நடிகர்களான அஜித், விஜய் போன்று நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரவு பகல் பாராமல் பணி செய்துள்ளார்.

ரமணா சார் மிகவும் எளிமையானவர் அவரது எளிமை மிகவும் ஆச்சரியமாக உள்ளது. கதாநாயகி தமிழ் பேசும் நடிகையாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்தேன் அது போல அவர் அழகாக நடித்துள்ளார்.

ஸ்ரீனி நடிப்பு இந்த படத்தில் சிறப்பாகப் பேசப்படும், ஒளிப்பதிவாளர் என்னுடைய பாதி வேலையை அவரே செய்தார், இந்தப் படத்திற்கு இசையமைத்த போபோ சசி அதிக மெனக்கெடலுடன் உழைத்துள்ளார். இசை அருமையாக வந்துள்ளது.

இயக்குநர் மிஷ்கின் சாருடன் இணைந்து பணி செய்ய நீண்ட நாட்களாக முயற்சி செய்தேன் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் இங்கு அவர் வந்ததற்கு நன்றி. நடிகர் அருண் விஜய் சார் மற்றும் விஜய் குமார் சாருக்கு நன்றி.

இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குச் சிறந்த பொழுது போக்காக இருக்கும் நான் கலைப் படம் பண்ணவில்லை காலாய் படம் பண்ணியுள்ளேன். என் வளர்ச்சிக்கு முழுமுதல் காரணமாக இருக்கும் என் அம்மாவிற்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும், அனைவருக்கும் நன்றி.

director MR madhavan speech in dienosirs movie trailer luanch

More Articles
Follows