தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா.
இவர் நேற்று மதுரையில் நடைபெற்ற வீகேர் 32-வது கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
இவரது வருகைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் சமந்தாவை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர்.
இதனால் ரசிகர்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, விழா மேடை சரிந்தது.
விழாவை முடித்துக் கொண்டு சமந்தா உடனே சென்றுவிடுவார் என்பதால் யாரோ ஒரு நபர் சமந்தாவின் கார் டயரையும் பஞ்சராக்கி விட்டார்.
அதன்பின்னர் தடியடி நடத்திய போலீசார் கூட்டத்தை கலைத்து சமந்தாவை வேறு காரில் தங்கும் ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தனர்.
வீ கேர் இருக்கட்டும் சமந்தா. பர்ஸ்ட் யு கேர்.
அண்மையில் கூட ஐதராபாத்தில் உள்ள ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்கு சமந்தா சென்றபோது இதுபோன்ற மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.