தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலிவுட் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விவரத்தை பார்ப்போம்.
கடந்த 1998-ம் ஆண்டு, ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு சினிமா சூட்டிங்கில் கலந்துக் கொண்டார் பாலிவுட் நடிகர் சல்மான்கான்.
அப்போது பாகாவாத் வனப் பகுதியில், சிங்காரா, பிளாக் பக் என்ற அரிய வகை மான்களை சல்மான்கான் வேட்டையாடியதாகவும், அவருடன் நடிகர் சாயிஃப் அலிகான் நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் உடனிருந்ததாகவும் இவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து இவர்கள் 5 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
பல வருடங்களாக நடந்துவந்த இந்த வழக்கில், கடந்த 2007-ம் வருடம் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜோத்பூர் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டது,
அதன்பின்னர் சல்மான்கான் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஆனாலும் இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது.
கடந்த ஜனவரி மாதம், நடிகர்கள் தங்கள் தரப்பின் வாதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து, சென்ற மாதம் 28 -ம் தேதி, இந்த வழக்கின் முழு விசாரணையும் முடிக்கப்பட்டு, தீர்ப்பு ஏப்ரல் 5- ம் தேதி வழங்கப்படும் என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று காலை கூடிய ஜோத்பூர் நீதிமன்றத்தில், நடிகர்கள் அனைவரும் நேரில் வந்து ஆஜராகினர்.
அப்போது நடிகர் சல்மான்கான் குற்றவாளி என அறிவித்தார் நீதிபதி.
அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டையும் 10,000 ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நடிகர் சயிஃப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Salman khan convicted Blackbuck poaching case