தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று விஜயவாடாவில் நடைபெற்ற என் டி ஆர் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
அப்போது அதில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் பாலையா ஆகியோரை புகழ்ந்து பேசினார் ரஜினிகாந்த்.
பாலையா பற்றி குறிப்பிட்டு பேசும் போது.. “ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோரால் செய்ய முடியாததை பாலையா செய்வார். அவர் எதை செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்” என புகழ்ந்து பேசினார்.
அதன் பின்னர் சந்திரபாபு நாயுடு குறித்து பேசும் போது.. “சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்கு பார்வை கொண்டவர். ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக உருவெடுக்கு காரணமே சந்திரபாபுவின் தொலைநோக்கு பார்வை தான். நியூயார்க் நகரம் போல் அபிவிருத்தி அடைந்துள்ளது” என பேசியிருந்தார்.
ரஜினியின் இந்த பேச்சை கலாய்க்கும் வகையில் அவருடன் நடித்த நடிகையும் தற்போதைய அமைச்சருமான ரோஜா கருத்து தெரிவித்துள்ளார்.
ரஜினியுடன் ‘வீரா’ மற்றும் ‘உழைப்பாளி’ படங்களில் ஜோடியாக நடித்தவர் ரோஜா என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆந்திர சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா பேசியதாவது…,
“ஒரு நடிகராக ரஜினிகாந்த் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், அவருக்கு தெலுங்கு மாநில அரசியல் பற்றி தெரியவில்லை.
விஷன் 2047 என்று தொலைநோக்கு பார்வையில் சிந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு என ரஜினி குறிப்பிட்டு இருந்தார்.
சந்திரபாபுவின் விஷன் 2020 காரணமாக தான் தெலுங்கு தேசம் கட்சிக்கு 23 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
அப்படியானால் 2047-ல் சந்திரபாபு எங்கே இருப்பார் என்று யாருக்கும் தெரியும்.
சந்திரபாபு நாயுடு மீது என் டி ராமராவ் ஆசிகளை பொழிகிறார் என பேசினார் ரஜினி.
என்டிஆர் மரணத்திற்கு காரணமே சந்திரபாபு நாயுடு தான். தன் கடைசி காலத்தில் சந்திரபாபு நாயுடு பற்றி பேசிய என்டி ராமராவ்.. அவருடைய மருமகன் ஒரு திருடன்.. யாரும் நம்பாதீர்கள் என்று சொன்னார்.
ரஜினிக்கு இது தெரியல. என்டி ராமராவ் பேச்சு அடங்கிய CDயை அவருக்கு அனுப்பி வைக்கிறேன். அந்த சிடியை போட்டு பார்த்து ஆந்திர அரசியல் பற்றி ரஜினிகாந்த் தெரிந்து கொள்ளட்டும்” என கலாய்க்கும் வகையில் ரோஜா தெரிவித்துள்ளார்.
Minister Roja trolls Rajinikanths knowledge in politics