பிரபாகரன் மகன் பாலசந்திரன்; பாடகி இசைப்ரியா ஆகியோரை பற்றிய படம் : சாட்சிகள் சொர்க்கத்தில்

பிரபாகரன் மகன் பாலசந்திரன்; பாடகி இசைப்ரியா ஆகியோரை பற்றிய படம் : சாட்சிகள் சொர்க்கத்தில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

saatchigal sorkaththilஆஸ்திரேலியாவில், ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான, ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

நீண்ட காலமாகக் காத்திருந்த இத்திரைப்படத்தின், இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி, மாசி மாதம் 2018 அன்று ஆஸ்திரேலியாவில், பெண்டில்ஹில்லில் உள்ள யாழ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ ஒரு நடப்பியலுக்கு மாறுபட்ட தன்மையுடைய கதை பாணியில் அமைக்கப்பட்ட, இலங்கை அரச படையினரால் துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட தமிழர்களினதும், அகதிகளாய் அயல் நாடுகளில் தமிழர் படும் அவலங்களையும், உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு உருவான படம்.

பாதிப் படம் தமிழில் துணையுரையுடன் ஆங்கிலத்திலும், மீதி ஆங்கில துணையுரையுடன் தமிழிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் துணைக் கதைகள், குறும்படங்களாக பல சர்வதேச விருதுகளை தட்டிச்சென்ற கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம், 2009ல் இலங்கை அரச படையினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தலைவர் பிரபாகரனின் புதல்வன் பாலச்சந்திரனுக்கும், பாடகியும் உடகவியளாளரும், நடிகையுமான சகோதரி இசைப்ரியாவுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, அவர்களின் இழப்பை கருவாக கொண்டு உருவான கதைதான் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’.

பாலச்சந்திரனின் வேடத்தில் இயக்குநர் ஈழன் இளங்கோவின் மகன் சத்யா இளங்கோ நடித்துள்ளார்.

ஈழத்தில் நடந்த கற்பழிப்பு கட்சிகளோ, கொலை கட்சிகளோ துன்புறுத்தல் கட்சிகளோ இத்திரைப்படத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இருப்பினும், அதைவிட ஆழமான உணர்வுகளையும் வலியையும் அடக்கியுள்ளது இத்திரைப்படம்.

ஆஸ்திரேலியாவிலும், பிரான்ஸ் நாட்டிலும் படமாக்கப்பட்ட இப்படத்தின் தொழில்நுட்ப வேலைப்பாடுகள் தமிழ் நாட்டு திரைக் கலைஞர்களால் செய்யப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்கு சென்னையில் பிரபலமான சதிஷ் வர்ஷன் இசையமைத்துள்ளார். சதீஷ் வர்ஷனின் குரலில் இரு பாடல்களும், தேசிய விருது பெற்ற பிரபல பாடகி சுர்முகியின் குரலின் ஒரு பாடலும் அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தில், ஆஸ்திரேலிய தமிழ், ஆங்கில நடிகர்களுடன் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழ் நடிகர்களும், அவர்களோடு ஐம்பது வருட திரையுலக அனுபவமுள்ள ஈழத்து பிரபல நடிகர் ஏ ரகுநாதன் அவர்களும் நடித்துள்ளார்.

‘சாட்சிகள் சொர்கத்தில்’ ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய திரைப்படம். பார்ப்பது மட்டும் அல்ல, இத்திரைப்படத்தை வேற்றுமொழி இனத்தவருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும்.

மொழி, உரையாடல், கதை அனைத்தும் அதற்கேற்பவே அமைக்கப்பட்டுள்ளது. திரையுலக வரலாற்றில், முக்கியமாக, ஈழத்தமிழரின் திரையுலக வரலாற்றில், இப்படம் வேறு ஒரு பரிமாணம் எடுத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஈழத் தமிழர்களின் வலிகள் இதுவரை கூறப்படாத வேறொரு வடிவில், வேறொரு அணுகுமுறையில், வேறொரு பரிமாணத்தில் கூறப்பட்டிருக்கிறது.

வேற்றுமொழி பேசுபவர்களுக்குக்கூட ஈழத் தமிழரின் வலிகள் இலகுவாய் புரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை வெற்றியடைய செய்வது ஒவ்வொரு தமிழனுடைய கடமை என்று உரிமையுடன் கூறலாம்.

Breaking: ரஜினி-தனுஷ் கூட்டணியின் காலா ரிலீஸ் குறித்த அறிவிப்பு

Breaking: ரஜினி-தனுஷ் கூட்டணியின் காலா ரிலீஸ் குறித்த அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala movie stillsகபாலியை தொடர்ந்து ரஜினியின் காலா படத்தையும் ரஞ்சித்தே இயக்கியுள்ளார்.

ரஜினியுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை நடிகர் தனுஷ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இதனிடையில் ரஜினியின் மற்றொரு படமான 2.ஓ படமும் தயாராகி வருகிறது.

ஆனால் அந்த பட வெளியீடு தாமதமாகி வருவதால் காலா படத்தை முதலில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இதுபற்றிய அறிவிப்பை இன்று மாலை 7 மணிக்கு ஒரு மாஸான போஸ்டருடன் அறிவிக்க உள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

Wunderbar films, Superstar Rajinikanth’s #kaalaa release date will be announced by 7 pm today with a #mass + #style = #RAJINI poster .. Thalaivar fans, get ready to CELEBRATE

ஷாம் உடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி

ஷாம் உடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Athmiyaஷாம் தற்போது “ 2M cinemas ” K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார்.

ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் “ கா-வியன் “ என்றும் தெலுங்கில் “ வாடு ஒஸ்தாடு “ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஷாம் ஜோடியாக சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – N.S.ராஜேஷ் குமார்
இசை – ஷ்யாம் மோகன்
பாடல்கள் – மோகன்ராஜ்
ஸ்டன்ட் – ஸ்டன்ட் சிவா
கலை – T.N கபிலன்
நடனம் – விஷ்ணுதேவா
எடிட்டிங் – அருண்தாமஸ்
தயாரிப்பு – 2M cinemas ” K.V. சபரீஷ்
எழுத்து இயக்கம் – சாரதி

முழுக்க முழுக்க அமெரிக்காவிலுள்ள லாஸ்வேஹாசில் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம் இது .

சண்டைக் காட்சிகளும், திரைக்கதையும் தொடக்கம் முதல் இறுதிவரை பிரமிக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளத்தில் டிரெண்டாகியுள்ளது.

விஜய்-சூர்யா படங்களில் நடித்தவருக்கு தலையில் பயங்கர அடி..!

விஜய்-சூர்யா படங்களில் நடித்தவருக்கு தலையில் பயங்கர அடி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vidyut jammwalவிஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் அஞ்சான் போன்ற படங்களில் நடித்தவர் வித்யூத் ஜம்மால்.

இவர் தற்போது ஜங்கி என்ற அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென எதிர்பாராமல் அவரது தலையில் பலத்த அடி விழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியான படக்குழு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

தற்போது அவர் குணமாகி வருவதாக கூறப்படுகிறது.

லைகாவுடன் இணைந்த சிம்பு-விஜய்சேதுபதி; பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் மணிரத்னம்

லைகாவுடன் இணைந்த சிம்பு-விஜய்சேதுபதி; பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் மணிரத்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and mani ratnamமணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி, அருண்விஜய் ஆகிய 4 ஹீரோக்கள் ஒரே படத்தில் இணைகின்றனர்.

இதில் நாயகிகளாக ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் நடிக்கின்றனர் என்பதை பார்த்தோம்.

இப்படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசை அமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஸ்ரீகர்பிரசாத் எடிட்டிங் செய்ய மணிரத்னமே தன் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக தயாரிக்கிறார்.

இத்துடன் லைக்கா நிறுவனமும் இணைந்துள்ளது.

இந்நிலையில் செக்கச் சிவந்த வானம் என்று இப்படத்திற்கு தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

காதலர் தினத்தில் விஜய்சேதுபதியின் ஜுங்கா விருந்து

காதலர் தினத்தில் விஜய்சேதுபதியின் ஜுங்கா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

junga stillsகோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் ‘ஜுங்கா’.

இந்த படத்தின் ஆடியோ விநியோக உரிமையை பிரபல திங்க் மியூசிக் நிறுவனம் கைபற்றியுள்ளது.

இயக்குனர் கோகுலும், விஜய் சேதுபதியும் இணைந்த ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கு இசை அமைத்த சித்தார்த் விபின் தான் இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.

இவரது இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் சிங்கிள் டிராக் காதலர் தினமான ஃபிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மற்ற பாடல்கள் விரைவில் வெளியாகும்

இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் சாயிஷா, மடோனா செபாஸ்டியன் இருவரும்
நாயகிகளாக நடிக்கின்றனர்.

More Articles
Follows