நாய்க்கு பிரபாகரன் பெயர்; விளக்கமளித்து மன்னிப்பு கேட்ட துல்கர்

நாய்க்கு பிரபாகரன் பெயர்; விளக்கமளித்து மன்னிப்பு கேட்ட துல்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dulquer apologises for Prabhakara dog name in Varane Avashyamundஅனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’.

இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டது.

இந்த படத்தில் மும்பையை சேர்ந்த பெண் பத்திரிகையாளரின் புகைப்படத்தை அவர் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது தொடர்பாக துல்கர் மன்னிப்பு கேட்டார்.

சில நாட்களுக்கு முன்பு இந்தப் படம் டிஜிட்டலில் இணையத்தில் வெளியானது.

தற்போது மீண்டும் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்ற பெயர் வைக்கப்பட்டு இருந்தது. அத்துடன் ஒரு காமெடி காட்சியும் இருக்கிறது.

இதனையடுத்து இந்த காட்சியை பார்த்த தமிழர்கள் காட்சியை நீக்க வேண்டும் எனவும் படத்தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையறிந்த நடிகர் துல்கர் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது தரப்பு நியாயத்தை விளக்கியும் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

வரனே அவஷ்முண்டு படக்குழு மற்றும் என் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வரனே அவஷ்யமுண்டு படத்தில் வந்த பிரபாகரன் ஜோக் தமிழ் மக்களை அவமதிப்பதாக உள்ளது என்று பலர் என்னிடம் தெரிவித்தார்கள். அது வேண்டும் என்றே செய்யவில்லை.

அந்த ஜோக் பழைய மலையாள படமான பட்டன பிரவேஷம் பற்றியது, மேலும் அது கேரளாவில் பிரபலமான மீம் ஆகும். அந்த பெயர் கேரளாவிலும் பொதுவான பெயர். அதனால் உயிருடன் இருப்பவர்கள் அல்லது இறந்தவர்கள் யாரையும் குறிப்பது அல்ல.

இந்த காட்சிக்கு ரியாக்ட் செய்பவர்களில் பலர் படத்தை பார்க்காமல் பேசுகிறார்கள், வெறுப்பை பரப்ப முயற்சி செய்கிறார்கள்.

என்னையோ, இயக்குநர் அனுப்பையோ வெறுப்பதை ஏற்க முடியும். இதை நம் அளவில் வைத்துக் கொள்வோம்.
ஆனால் தந்தை அல்லது சீனியர் நடிகர்களை தொடர்புபடுத்த வேண்டாம். அன்பான தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

யாரையும் அவமதிக்க வேண்டும் என எப்பொழுதும் நினைத்தது இல்லை. இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

உங்களில் சிலர் மோசமாக பேசுவதுடன் மிரட்டவும் செய்கிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சர்ச்சையான அந்த காமெடி காட்சியின் வீடியோவை துல்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Dulquer apologises for Prabhakara dog name in Varane Avashyamund

 

https://twitter.com/dulQuer/status/1254404061735997440

https://twitter.com/dulQuer/status/1254404555338481664

dulquer statement prabhakara dog name

ஆன்லைனில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்.?; அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!

ஆன்லைனில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்.?; அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Whether Vijays Master will be released in OTT platformஜோதிகா நடிப்பில் தான் தயாரித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக ஆன்லைனில் (OTT) ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் சூர்யா.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த முடிவில் இருந்து சூர்யா பின்வாங்காவிட்டால் இனி சூர்யா தயாரிக்கும் படங்களை திரையிட போவதில்லை என தியேட்டர்கள் அறிவித்துள்ளன.

தமிழைப் போல இந்தியில் அக்‌ஷய் குமாரின் லக்ஷ்மி பாம், ரன்வீர் சிங்கின் 83 போன் டாப் ஹீரோக்களின் படங்களையும் ஆன்லைனில் வெளியிட OTT நிறுவனங்கள் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டதாம்.

இந்த நிலையில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தையும் நேரடியாக ஆன்லைனில் வெளியிட ஆன்லைன் நிறுவனம் முயற்சித்து வருகிறதாம்.

மாஸ்டர் பட சூட்டிங் சமயத்திலேயே கிட்டத்தட்ட ரூ.200 கோடிக்கு வியாபாரம் ஆனது.

இதன் தமிழக உரிமம் ரூ.70 கோடி, வெளிநாட்டு உரிமம் ரூ.30 கோடி, பிற மாநிலங்களின் உரிமம் ரூ.25 கோடி என கோலிவுட்டையே ஆச்சரியப்படுத்தியது.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாஸ்டர் ரிலீஸ் எப்போது என கேள்வி எழுந்துள்ளது.

மேலும் கொரோனா ஊரடங்கு பல நாடுகளில் ஆகஸ்ட் மாதம் வரை கூட நீடிக்க வாய்ப்புள்ளது.

இதனால் வெளிநாட்டு உரிமையை வாங்கிய நிறுவனங்கள் பட வெளியீட்டில் இருந்து பின்வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் மாஸ்டர் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால் திருட்டுத்தனமாக இணையத்தில் லீக்காகி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறதாம்.

ஆனால் மாஸ்டர் படம் எப்போது வெளியானாலும் அது திருவிழா கொண்டாட்டம்தான் என பட இயக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் படத்தை திரையரங்குகளில் பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

எனவே கொரோனா தொற்று முற்றிலும் நீங்கிய பிறகு மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிட வே காத்திருக்கிறதாம் படக்குழு.

Whether Vijays Master will be released in OTT platform

பட விற்பனையில் சூர்யாவுக்கே முழு உரிமை; 30 தயாரிப்பாளர்கள் ஆதரவு.?

பட விற்பனையில் சூர்யாவுக்கே முழு உரிமை; 30 தயாரிப்பாளர்கள் ஆதரவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

30 Tamil producers supports Suriya in OTT movie release ஜோதிகா நடிக்க அவரது கணவரும் நடிகருமான சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’.

கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் படம் OTT ஆன்லைன் தளங்கள் மூலம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் எதிர்ப்புகள் உருவானது.

ஒருவேளை அவர்கள் ஓடிடியில் வெளியிட்டால் இனி சூர்யா தயாரிக்கும் படங்களை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவை சார்ந்த 30 தயாரிப்பாளர்கள் ஒன்றாக சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

“திரைப்பட தயாரிப்பு அதிகம் ரிஸ்க் உள்ள ஒரு துறை. அதில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். அவர்களில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்.

அவர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்தாலும் அப்படத்தை வெளியிட யாரும் முன் வருவதில்லை.

அப்படியே வெளியிட்டாலும் அப்படங்களுக்கு திரையரங்கு மற்றும் ஷோ கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இத்தகைய பிரச்சனைகள் பெரிய நடிகர்கள்-இயக்குனர்கள் படங்களுக்கு அதிகம் இல்லை.

மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும் வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்துவரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்து கொள்கிறோம்.

தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறோம்.

இந்த கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்தாலோசித்து, விவாதித்து, இதற்கான (OTT படங்கள்) வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாக செயல்பட, சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டு கொள்கிறோம்.

இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் டி.ஜி. தியாகராஜன், கே.முரளிதரன், டி.சிவா, கே.எஸ். ஸ்ரீனிவாசன், கே. ராஜன், ஞானவேல்ராஜா, ஹெச். முரளி, பெப்சி சிவா, தனஞ்செயன், சஷிகாந்த், சுரேஷ் காமாட்சி, மனோபாலா உட்பட 30-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

30 Tamil producers supports Suriya in OTT movie release

கொரோனா நிவாரணம் : 750 தயாரிப்பாளருக்கு உதவ ரஜினி முடிவு

கொரோனா நிவாரணம் : 750 தயாரிப்பாளருக்கு உதவ ரஜினி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini plans to help 750 producers in Corona Crisis கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் கடந்த ஒரு மாதமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

காய்கறி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் செல்லும் நிலை உள்ளது.

இதனால் தினக்கூலிகள், வணிகர்கள் முதல் பலரும் தங்கள் வருமானத்தை இழந்து உள்ளனர்.

இவர்களை போல பெப்சி உள்ளிட்ட சினிமா சார்ந்த தொழிலாளர்களும் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு வசதியான நடிகர்கள், கலைஞர்கள் பலரும் உதவி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் பெப்சி தொழிலாளர்களுக்கு 50 லட்சம் வழங்கியிருந்தார்.

மேலும் நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம் என பல சங்கத்தினருக்கும் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தினருக்கும் உதவ முன்வந்துள்ளார் ரஜினிகாந்த்.

நலிவடைந்த 750 தயாரிப்பாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை மே முதல் வாரத்தில் வழங்கவுள்ளார் ரஜினி.

இந்த தகவலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் துணைத் தலைவர் கே. ராஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Rajini plans to help 750 producers in Corona Crisis

rajini corona help 750 producers

நடன கலைஞர்களின் பசியை போக்க முதல்வருக்கு மன்சூரலிகான் கோரிக்கை

நடன கலைஞர்களின் பசியை போக்க முதல்வருக்கு மன்சூரலிகான் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mansoor Ali Khans request to TN CM for Stage Artistsகொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்க அரசு மேற்கொண்டிருக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையால், தமிழகம் பெரிய பாதிப்பில் இருந்து தப்பித்தாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கும், கூலித்தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கி வரும் நிலையில், மேடை நடன கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும், என்று நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான மன்சூரலிகான், கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வருக்கு நடிகர் மன்சூரலிகான் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா காலத்தில் திறம்பட செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு என் பாராட்டுகளும், நன்றிகளும்.

தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் மேலான மேடை நடன கலைஞர்கள் இருக்கிறார்கள். தற்போதைய ஊரடங்கினால், இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதோடு, உணவுக்கே வழியின்று தவித்து வருகிறார்கள். இவர்கள் மட்டும் அல்லாமல், மேடை நாடக நடிகர்கள், சினிமா துணை நடிகர்கள் உள்ளிட்ட சினிமா துறையில் உள்ள தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு பொதுமக்களுக்கும் மற்றும் கூலித்தொழிலாளர்களுக்கு வழங்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் போல, மேடை நடன கலைஞர்கள் மற்றும் துணை நடிகர்களுக்கும் வழங்க வேண்டும், என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இவ்வாறு தனது கோரிக்கையில் நடிகர் மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

Mansoor Ali Khans request to TN CM for Stage Artists

விஜய்சேதுபதியுடன் கூட்டணி.; மீண்டும் இயக்குனராகும் (கி)ராமராஜன்

விஜய்சேதுபதியுடன் கூட்டணி.; மீண்டும் இயக்குனராகும் (கி)ராமராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Ramarajan to direct Vijay Sethupathis nextமதுரையில் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் பையனாக சினிமா ஆசையை வளர்த்து கொண்டர் ராமராஜன்.

பின்னர் சென்னைக்கு வந்து டைரக்டர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார்.

சில ஆண்டுகளில் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தை இயக்கி டைரக்டர் ஆனார்.

பின்னர் ‘மருதாணி,’ ‘மறக்கமாட்டேன்,’ ‘ஹலோ யார் பேசுறது’ உள்பட பல படங்களை டைரக்டு செய்தார்.

‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். முதல் படமே 100 நாட்கள் ஓடி மாபெரும் ஹிட்டானது.

அதன்பின் ராமராஜன் நடிப்பில் உருவான எங்க ஊரு பாட்டுக்காரன், ‘கரகாட்டக்காரன்’ உள்ளிட்ட நிறைய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.

இளையராஜா மற்றும் ராமராஜன் கூட்டணி என்றாலே தியேட்டர்களில் திருவிழா தான். எனவே கிராமத்து ரசிகர்களின் ஆஸ்தான நாயகனாக உயர்ந்தார் கி-ராம ராஜா.

கிட்டதட்ட 45 படங்களில் நாயகனாக நடித்திருக்கிறாராம் ராமராஜன்.

அதன்பின்னர் மெல்ல மெல்ல அவரது மார்க்கெட்டை இழந்தார்.

பின்னர் அண்ணன், அப்பா, மாமா, வில்லன் கேரக்டர்கள் என பல வந்தாலும் இனி நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் நீண்ண்ணட இடைவெளிக்குப்பின், ராமராஜன் மீண்டும் இயக்கத்தில் இறங்கவிருக்கிறாராம்.

நடிகர் விஜய்சேதுபதியிடம் ஒரு கதை சொல்லி அவரின் சம்மதம் பெற்று விட்டாராம்.

எனவே கொரோனா ஊரடங்குக்கு பின்னர் மக்கள் செல்வன் மற்றும் கி-ராமராஜன் கூட்டணி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

Actor Ramarajan to direct Vijay Sethupathis next

More Articles
Follows