தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘பிக்பாஸ் 4’ தொடங்கி கிட்டதட்ட ஒரு மாதமாகிவிட்டது.
இந்த வீட்டில் நகரவாசி, கிராமவாசி டாஸ்க் நடைபெற்றது.
இதில் போட்டியாளர்கள் 2 அணிகளாக பிரிந்து டாஸ்க்கில் ஈடுபட்டனர்.
அப்போது சுரேஷ், அனிதாவை சுமங்கலி வாங்க என்று கூறி அவரை முதலில் தொடங்க வைத்தார்.
இதன் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு, நடனம் & பாடல் போட்டிகள் நடைபெற்றன.
பேச்சு போட்டியின் போது நகரத்தார் தலைப்பில் பேசிய அனிதா..
சுரேஷ் சார் என்னை சுமங்கலி வாங்க என்று அழைத்தார். சில கிராமங்களில் விதவைகளை தனித்து விடும் பழக்கம் இருக்கிறது.
இதுவே நான் சுமங்கலி இல்லை என்றால் என்னை முதலில் அழைத்திருக்க மாட்டார்கள் என ஒருவிதமாக பேசினார்.
இதனால் சில போட்டியாளர்கள் முகம் சுளித்தனர்.
ஷிவானி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் அதில் தவறு இல்லை என்றனர்.
மேலும் சுரேஷ் கோபமடைந்தார்.
பின்னர் அனிதா அவரிடம் மன்னிப்பு கேட்டாலும் சுரேஷ் பேச மறுத்துவிட்டார்.
இதன் பின்னர் “யாரை அதிகமாக மிஸ் பண்ணுறீங்க” என்ற ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டது.
அதில் போட்டியாளர்கள் பலரும் அழுதபடியே பேசினர்.
பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத அனிதா, தனிமையாக உணர்வதாகவும் தன் மீது தவறுகள் இருப்பதாக நினைப்பதாகவும் தன் கணவர் பிரபாவை ரொம்ப மிஸ் செய்வதாக பேசினார்.
அவர் எப்போதும் என்னை கன்னுக்குட்டி தான் அழைப்பார். உங்களுக்கு எல்லாம் இது ஜஸ்ட் வார்த்தை. ஆனால் எனக்கு அது செண்டிமென்ட் என எமோசனலாக பேசினார்.
இதனை சக போட்டியாளர்கள் கிண்டலடித்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் அனிதா கணவர் பிரபாகரன்.
அதில்..இது எல்லாம் சரியாகி விடும். கவலை வேண்டாம் செல்லம்மா.” என பதிவிட்டுள்ளார்.
Anitha husband Prabakaran’s reply to her crying