தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ மத நல்லிணக்க விழாவில் விஜய்யின் தந்தையுடம் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்துக் கொண்டார்.
அப்போது அவரிடம் இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கேட்பது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அப்போது அவர் கூறியதாவது:-
என்ஜினீயர், மேஸ்திரி, கொத்தனார், கையாள், கார்பெண்டர், பெயிண்டர், என பலரும் சேர்ந்து வீட்டை உருவாக்கினாலும் வேலை முடிந்தவுடன் அந்த வீடு உரிமையாளருக்கு சொந்தமாகும்.
இது எல்லா தொழிலுக்கும் பொருந்தும்.
படம் தயாரிப்பது கடினமான தொழில். அதிக படங்கள் தோல்வி அடைந்து விடுகின்றன.
அத்தனை இன்னல்களையும் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்குதான் பாடல் உரிமை சென்றடைய வேண்டும்.
படத்தில் பணிபுரியும் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இயக்குனர், நடிகர், நடிகைகள், எல்லோரும் சம்பளம் வாங்கி கொண்டுதான் வேலை செய்கிறார்கள். இவர்கள் யாருமே ராயல்டி கேட்பதில்லை.
அதுபோல்தான் இசையமைப்பாளரும் கேட்பது தவறு. அவருடைய வேலைக்கு என்ன சம்பளமோ அதை வாங்கி விடுகின்றனர்.
எனவே பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும். தயாரிப்பாளர்கள் இந்த ராயல்டியை பெற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்”
இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.