தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவில் நடிப்புக்கென்று பெயர் பெற்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர். மேலும் படங்களை தயாரித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது 1953 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அதன் மூலம் பெற்ற தொகையை முழுவதும் நன்கொடையாக கொடுத்து யாழ்ப்பாணத்தில் முலாய் என்ற ஊரில் ஒரு மருத்துவமனை கட்ட உதவி புரிந்துள்ளார்.
அந்த சமயம் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒரு மாமரத்தையும் நட்டு உள்ளார். தற்போது அந்த மாமரத்திற்கு 70 வயது ஆகிறது.
இந்த மரத்தின் நிழல் அடியில் நடிகரும் தயாரிப்பாளருமான ராம்குமார் அமர்ந்து தன்னுடைய ஆனந்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
Reason behind Sivaji’s son Ram Kumar happiness