தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற பெயரில் அடுத்த படத்தை தயாரித்து வருகிறார் ரஞ்சித்.
இதனையடுத்து மும்பையைச் சேர்ந்த இயக்குநர் ஜோதிநிஷாவுடன் இணைந்து மற்றொரு படத்தை தயாரிக்கிறார் ரஞ்சித்.
இப்படத்தை கிரவுட் பண்டிங் மூலம் படத்தை தயாரிக்கிறார்களாம்.
இதற்காக 2 மாதங்களில் ரூ.60 லட்சத்தை திரட்ட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பா.ரஞ்சித் கூறியுள்ளதாவது…
“நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த கூட்டணியை அறிவிக்கிறோம் ஜோதிநிஷாவின் முதல் படமான ‘பி.ஆர்.அம்பேத்கர் நவ் அண்ட் தென்’ இப்படம் வரலாறு படைக்கும். இப்படத்தில் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.
Ranjith to collaborate with Bollywood director on film about BR Ambedkar