ஷங்கர் மகளை தொடர்ந்து பிரபல இயக்குநரின் மகளும் ஹீரோயினாகிறார்

ஷங்கர் மகளை தொடர்ந்து பிரபல இயக்குநரின் மகளும் ஹீரோயினாகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் நடிக்கிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி.

முத்தையா இயக்கும் இந்தப் படம் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் அதிதி.

தற்போது இவரை போல பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி என்பவரும் நாயகியாக நடிக்கவுள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சரஸ்வதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது-

ஏற்கனவே ராஜீவ்மேனன் இயக்கிய ஜிவி. பிரகாஷின் ’சர்வம் தாள மயம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார் சரஸ்வதி என்பது குறிப்பிடத்தக்கது.

Rajiv Menon daughter Saraswathi entry in kollywood

விஜய்க்கு நாயகியாக நடித்ததை விட ரஜினிக்கு தங்கையாக நடிக்க கீர்த்திக்கு கொடுக்கப்பட்ட அதிகப்பட்ச சம்பளம் இதோ

விஜய்க்கு நாயகியாக நடித்ததை விட ரஜினிக்கு தங்கையாக நடிக்க கீர்த்திக்கு கொடுக்கப்பட்ட அதிகப்பட்ச சம்பளம் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.

தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அண்மையில் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

தற்போது போலா சங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார்.

மேலும் தன் அக்கா ரேவதி தயாரிப்பில் உருவாகும் வாஷி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தற்கு கீர்த்திக்கு வழங்கப்பட்ட சம்பளம் 2 கோடி என தெரிய வந்துள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது.

இதற்குமுன் 2018ல் சன் பிக்சர்ஸ் தயாரித்த விஜய்யின் சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருத்தார் கீர்த்தி. அப்போது கீர்த்தியின் சம்பளம் கிட்டத்தட்ட ரூ. 1 கோடி அளவில் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது.

Keerthy Suresh salary revealed for Annaatthe

பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ பட ரிலீஸ் தேதி அப்டேட்

பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ பட ரிலீஸ் தேதி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் இயக்கம்.. மறு பக்கம் நடிப்பு என பிஸியாக வலம் வருபவர் பிரபுதேவா.

தமிழில் மட்டும் இவரது கைவசம் அதாவது இவரது நடிப்பில் ‘பொன் மாணிக்கவேல்’, ‘தேள்’, ‘யங் மங் சங்’, ‘ஊமை விழிகள்’, ‘பஹீரா’ ஆகிய படங்கள் உள்ளன.

தற்போது இந்த படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி 4 நாயகிகளுடன் பிரபுதேவா நடித்த ‘பஹீரா’ படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பல கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ள படம் ‛பொன்மாணிக்க வேல்’.

ஏ.சி.முகில் இயக்கியுள்ள இந்த படத்தில நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க. இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் சூட்டிங் முடித்து பல மாதங்கள் ஆனநிலையில் கொரோனா பிரச்னையால் ரிலீஸ் தள்ளிப்போனது.

தற்போது தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் பொன் மாணிக்கவேல் தியேட்டர்களில் ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 19ல் ரிலீஸ் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இத்துடன் படத்தின் புதிய டிரைலர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

Prabhu Deva’s Pon Manickavel release date announced

‘அண்ணாத்த’ இயக்குனருடன் இணையும் சூர்யா.; மீண்டும் டபுள் ரோல்

‘அண்ணாத்த’ இயக்குனருடன் இணையும் சூர்யா.; மீண்டும் டபுள் ரோல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தை முடித்துவிட்டு சிவா இயக்கவிருந்த அடுத்த படத்தில் நடிக்க காத்திருந்தார் சூர்யா.

இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பும் வெளியானது.

ஆனால் ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் சிவா. இதனால் சூர்யாவும் .. “ரஜினி சார் படத்தை முடித்துவிட்டு வாருங்கள் காத்திருக்கிறேன்” என தெரிவித்தார்.

தற்போது நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டியும் ரஜினியின் அண்ணாத்த படம் வசூல் வேட்டையாடி வருவதால் சிவா தரப்பினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இதனையடுத்து விஜய் நடிக்கவுள்ள படத்தை சிவா இயக்குவார் என தகவல்கள் பறந்தன. (நம் தளத்தில் அப்படியொரு செய்தி பதிவிடவில்லை)

இந்த நிலையில் ஏற்கெனவே சூர்யாவிடம் சொல்லி ஒப்புதல் பெற்ற படத்தை தற்போது இயக்கவுள்ளாராம் சிவா.

இந்த படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம் என தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே பேரழகன், வேல், மாற்றான், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் சூர்யா.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இன்றோடு முடித்துக் கொடுத்துவிட்டார் சூர்யா என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Suriya joins with Annaatthe director ?

ரஜினி வழியில் கார்த்தி..; தல-தளபதிக்கு கிடைக்காதது இவருக்கு கிடைக்குமா.?

ரஜினி வழியில் கார்த்தி..; தல-தளபதிக்கு கிடைக்காதது இவருக்கு கிடைக்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவை உலகளவில் சேர்த்தவர்களில் பெருமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தான் சாரும்.

இவரது படங்களுக்கு தமிழ்நாடு இந்தியாவை போல உலக நாடுகளிலும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

ஜப்பானில் தர்பார் படம் வசூல் வேட்டையாடியது. அண்மையில் வெளியான அண்ணாத்த படமும் உலகளவில் 200 கோடியை நெருங்கியுள்ளது.

இதற்கு எல்லாம் பிள்ளையார் சுழி போட்ட படம் என்றால் அது ரஜினிகாந்த் மீனா நடித்த ‘முத்து’ படம் தான்/

முத்து படம் ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு அந்த நாட்டில் வெளியாகி மாபெரும் வரவேற்றை பெற்றது.

தற்போது வரை அங்குள்ள ரசிகர்கள் ரஜினியை டான்சிங் மகராஜா என்றும் மீனாவை டான்சிங் மகாராணி என்றுதான் அழைப்பார்கள். “தில்லானா தில்லானா…” பாடலுக்கு அப்படியொரு வரவேற்பு கிடைத்தது.

இந்திய பிரதமராக மன்மோகன் சிங் இருந்த காலத்தில் ரஜினி பற்றி ஜப்பான் பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார். தன் நாட்டு நடிகருக்கு இங்கு இப்படியொரு வரவேற்பா? என வியந்து பேசியிருக்கிறார்.

அன்றிலிருந்து இன்று வரை ரஜினி படங்களுக்கென்றே ஜப்பானில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில் ரஜினி படங்களைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்து சூப்பர் ஹிட்டான கைதி படமும் ஜப்பான் மொழியில் வெளியாகவுள்ளது.

இந்த படம் வருகிற நவம்பர் 19-ந்தேதி கைதி டில்லி என்ற பெயரில் அங்கு ரிலீசாகிறது.

ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் விஜய் அஜித் படங்களுக்கு எடுக்காத முயற்சியை கார்த்தி படத்திற்கு எடுத்துள்ளனர்.

நம் நடிகர்கள் ஜப்பானில் கொடி நாட்டினால் நமக்கு பெருமைதானே… கைதி பட வரவேற்பை பொறுத்திருந்து பார்ப்போம்.

Karthi’s super hit film to release in Japan

நிறைவு பெற்றான் ‘எதற்கும் துணிந்தவன்’..; விஜய்-சூர்யா சந்திப்பு எப்படி.?

நிறைவு பெற்றான் ‘எதற்கும் துணிந்தவன்’..; விஜய்-சூர்யா சந்திப்பு எப்படி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்து வருகிறார்

இவர்களுடன் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இப்படம் அடுத்தாண்டு 2022 ஜனவரியில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து விட்டதாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் நடிகர்கள் விஜய்யும் சூர்யாவும் இந்த சூட்டிங் செட்டுக்குள் சந்தித்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சென்னை பெருங்குடி என்ற பகுதியிலுள்ள ஒரு பிரபல ஸ்டூடியோவில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ மற்றும் சூர்யா நடித்து வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்புகள் நடைபெற்று வந்துள்ளது.

இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.

இந்த படங்களில் சூட்டிங்கில் கிடைத்த ஓய்வு நேரத்தில் விஜய்யும் சூர்யாவும் சந்தித்து பேசிக் கொண்டுள்ளனர்.

Reason behind Vijay Suriya sudden meet?

More Articles
Follows