JAILER Update : தமன்னாவுடன் ரஜினி உற்சாகம்.; தியேட்டரில் சந்திப்போம் என நெல்சன் நெகிழ்ச்சி

JAILER Update : தமன்னாவுடன் ரஜினி உற்சாகம்.; தியேட்டரில் சந்திப்போம் என நெல்சன் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பல இந்திய பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

எனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

ஆனாலும் ரஜினியின் லுக் இன்னும் போதுமானதாக இல்லை என ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜெயிலர்

ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று ஜூன் 1ம் தேதி ‘ஜெயிலர்’ பட ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக பட குழுவினர் அறிவித்து புதிய போட்டோக்களை வெளியிட்டுள்ளனர்.

அதில் தமன்னா நெல்சன் ஆகியோருடன் ரஜினிகாந்த் கேக் வெட்டுகிறார்.

மேலும் படக்குழுவினர் மிகவும் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

ரஜினி படத்தை இயக்கிய நெகிழ்ச்சியில் நெல்சன் இருப்பதாக தெரிகிறது.

தியேட்டரில் சந்திப்போம் என அறிவித்து போட்டோக்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஜெயிலர்

rajini’s jailer shoot wrapped and rajini cake cutting

JUST IN ‘மாமன்னன்’ விழாவில் ‘தங்கலான்’ & ‘சார்பட்டா 2’ அப்டேட் கொடுத்த ரஞ்சித்

JUST IN ‘மாமன்னன்’ விழாவில் ‘தங்கலான்’ & ‘சார்பட்டா 2’ அப்டேட் கொடுத்த ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தயாரித்து நாயகனாக நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் திரளான கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கமல்ஹாசன், வெற்றிமாறன், விஜய் ஆண்டனி, ரஞ்சித், சிவகார்த்திகேயன், கவின், முருகதாஸ், சூரி, பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்று உதயநிதியை வாழ்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விழாவில் பங்கேற்ற ரஞ்சித் அவர்கள் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தில் அப்டேட் கொடுத்துள்ளார்.

அவர் ரெட் கார்பெட்டில் பேசும்போது..

“வருகிற ஜூன் 15ஆம் தேதி முதல் தங்கலான் பட ஷூட்டிங் மீண்டும் தொடங்கும். இன்னும் 10- 12 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மீதம் உள்ளது.

விக்ரம் விபத்துக்கு பிறகு குணமாகி இப்போ ஜாலியா இருக்கார்.

சார்பட்டா பரம்பரை 2 படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்கும்” என தெரிவித்தார் ரஞ்சித்.

Thangalaan and Sarpatta Parambarai 2 update given by Ranjith

JUST IN மக்கள் விரும்பினால் மீண்டும் நடிப்பேன்.. நடித்தால் அவருடன் இணைவேன் – உதயநிதி

JUST IN மக்கள் விரும்பினால் மீண்டும் நடிப்பேன்.. நடித்தால் அவருடன் இணைவேன் – உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ ஆர் ரஹ்மான் இசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று ஜூன் 1ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இந்த விழா தொடங்குவதற்கு முன் உதயநிதி ரெட் கார்பெட்டில் பேசும்போது..

“வரும் மூன்று ஆண்டுகளுக்கு நான் சினிமாவில் நடிக்க மாட்டேன்.

அதன் பிறகு சூழ்நிலையை பொறுத்து மக்கள் விரும்பினால் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பேன். அப்படி ஒருவேளை நடிக்க ஆரம்பித்தால் மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிப்பேன்” என தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

I will act again if people want I will join him if I act says Udayanidhi

BREAKING கஷ்டப்பட்டு தான் ‘மாமன்னன்’ இசை விழாவுக்கு வந்தேன்.; அமைச்சர் உதயநிதி பேச்சு

BREAKING கஷ்டப்பட்டு தான் ‘மாமன்னன்’ இசை விழாவுக்கு வந்தேன்.; அமைச்சர் உதயநிதி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தயாரித்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று ஜூன் 1ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக வந்த அமைச்சர் உதயநிதி அரங்கத்திற்குள் நுழைவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது…

“மாரி செல்வராஜ் படத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனையும் இந்த ‘மாமன்னன்’ படத்திலும் இருக்கும்.

இந்த படம் சமூக நீதி பற்றி பேசி இருக்கிறது. மாரி செல்வராஜ்க்கும் எனக்கும் ஒரு அரசியல் புரிதல் இருக்கிறது.

நான் பகத் கீர்த்தி உள்ளிட்ட பலர் இருக்கிறோம். ஆனால் எங்களை எல்லாம் தள்ளி வைத்து வடிவேலு ஒரு கேரக்டர் செய்து இருக்கிறார்.

இந்த படத்தை ஜூன் 29ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

எனக்கு முதல்வர் அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார். எனவே அதை பொறுப்புடன் செய்ய வேண்டும்.

அனேகமாக மாமன்னன் படம் தான் கடைசி படமாக இருக்கும். ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி இருக்கிறது.

கமல் சார் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருந்தேன். அதைக் கூட மறுத்து விட்டேன். மக்கள் பணி இருப்பதால் படங்களின் அடிப்பதில்லை

இப்போது கூட கடும் பணி சுமைகளுக்கு நடுவே இந்த இசை விழாவிற்கு வந்திருக்கிறேன். மேலும் டப்பிங் பணிகளையும் முடித்துக் கொடுத்திருக்கிறேன்.

ஆனால் மாரி செல்வராஜ் மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க கேட்டுக் கொண்டுள்ளார். சூழ்நிலை பொருத்து முடிவு எடுக்கலாம்.”

என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Udhayanidhi says I came to the ‘MAAMANNAN’ music festival only with difficulty

13 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டல் புதுப்பொலிவுடன் ரஜினியின் ‘எந்திரன்’; வெளியீட்டு தேதி இதோ..

13 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டல் புதுப்பொலிவுடன் ரஜினியின் ‘எந்திரன்’; வெளியீட்டு தேதி இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த்.

கடந்த 2010-ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.

இப்படத்தை ரஜினியின் ‘சிவாஜி: தி பாஸ்’, ‘எந்திரன் 2.0’ ஆகிய மூன்று சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவானது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க, சந்தானம், கருணாஸ், தேவ தர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படங்களின் வசூலை ‘எந்திரன்’ திரைப்படம் முறியடித்து சாதனை படைத்தது.

எந்திரன்’ திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகவுள்ளது.

அதாவது, முதல்முறையாக டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்து 4k அல்ட்ரா எச்.டி.தரத்தில் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷனில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது.

இந்நிலையில், பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் ‘எந்திரன்’ திரைப்படம் OTT இல் மறுவெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

மேலும், ‘எந்திரன்’ படம் ஜூன் 9-ல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்திரன்

Rajini’s ‘Enthiran’ digitally remastered on OTT

‘கைதி – மாஸ்டர்’ பட நடிகர் KPY தீனா திருமணம்.; Love or Arranged.?

‘கைதி – மாஸ்டர்’ பட நடிகர் KPY தீனா திருமணம்.; Love or Arranged.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தீனா.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீனா சினிமா அல்லது தொலைக்காட்சியில் எப்படியாவது பெரிய ஆளாக வர வேண்டும் என்கிற எண்ணத்தில் சென்னை கிளம்பி வந்தவர்.

இவர் ஆரம்பத்தில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது இவருடைய டைமிங் காமெடி பார்த்து பலர் பாராட்டி இருக்கிறார்கள்.

நம்பிக்கையுடன் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டேஜ் ஏற, அந்த நிகழ்ச்சியே தீனாவை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

இதன்பின்னர் சினிமா பக்கம் வந்த தீனா, தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’, ‘மாஸ்டர்’ படங்களில் நல்ல கேரக்டரில் நடித்திருந்தார்.

நடிகர் தீனா கடந்த மார்ச் மாதம் சொந்த ஊரில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டியிருந்தார்.

இந்நிலையில், தீனாவுக்கு இனிதே திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. கிராஃபிக் டிசைனராக பணியாற்றி வரும் பரமேஸ்வரி என்ற பெண் தான் தீனாவுக்கு மனைவியாக அமைந்துள்ளார்.

இந்த திருமணம் முழுக்க முழுக்க பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும்.

திருவாரூரில் நடக்கும் கல்யாணத்தில் பலர் கலந்து கொள்ள முடியவில்லை.

இதனால் நடிகர் தீனா சினிமா, சின்னத்திரை பிரபலங்களுக்காக சென்னையில் அடுத்த வாரம் திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தீனா

master fame kpy dheena gets married

More Articles
Follows