தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வாரம் அதாவது 2020 டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் ரத்த அழுத்தம் அதிகம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
அங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பல்வேறு நிபந்தனைகளுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ரஜினி.
கொரோனா சூழலில் சிக்காமல் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என் டாக்டர்கள் அட்வைஸ் கொடுத்தனர்.
இதனையடுத்து … நீண்ட விளக்கம் கொடுத்து டிசம்பர் 29ஆம் தேதி அன்று… “தான் அரசியலுக்கு வரமாட்டேன்” என ட்விட்டரில் அறிவித்தார்.
இந்த நிலையில் ஹைதராபாத் அப்பல்லோ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி பேசியுள்ளார்.
அதில்… அப்பல்லோ ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடவுள் அருளால் நன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்கள் சேவை சிறப்பானதாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.
எந்த மேடைகளில் ரஜினி ஏறினாலும்..”என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களே” என்பார்.
ஆனால் தன்னை காப்பாற்றிய டாக்டர் தெய்வங்களுக்கு மட்டும் புத்தாண்டு வாழ்த்துக்களை சொன்ன ரஜினி… ரசிக தெய்வங்களுக்கும் மக்களுக்கும் ஒரு புத்தாண்டு வாழ்த்து ட்வீட் கூட போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா வருடமும் வாழ்த்து சொன்ன ரஜினி… இவ்வருடம் 2021 கட்சி ஆரம்பம் என்று கூறி பின்னர் அரசியல் கிடையாது என அறிவித்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டதால் வாழ்த்து சொல்லவில்லை என கூறப்படுகிறது.
Rajinikanth new year wishes creates controversy