தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அரியலூர் மாவட்டத்தில் இன்று புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது…்”லஞ்சம் ஊழலில் அரசு எவ்வழியோ அதிகாரிகள் அவ்வழி’ என கமல் போட்ட ட்வீட் குறித்து முதல்வரிடம் கேள்விகள் கேட்டனர் செய்தியாளர்கள்.
“’கமல் சினிமாவில் ரிட்டையர்ட் ஆகி அரசியலுக்கு வந்துள்ளார்.
கமல் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதாக இல்லை. நல்லாயிருக்கும் குடும்பத்தை கெடுப்பதுதான் அவர் வேலை.
பிக்பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படியிருக்கும்?
பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை கெட்டுப் போவார்கள்.
எம்.ஜி.ஆர் நாட்டு மக்களுக்காக பாடல்கள் பாடியிருக்கிறார். ஆனால் மக்களுக்காக ஆக்கப்பூர்வமான ஒரு பாடலையாவது பாடியிருக்கிறாரா?
அவருடைய படத்தை பார்த்தால் அதோடு அந்தக் குடும்பம் காலி.
எனவே கமல் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை’’ என கடுமையாக பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
CM Edappaadi Palanisamy slams Kamal Haasan