ஸ்டாலின்-அன்புமணி-திருமாவளவன்-சீமான் பற்றி ரஜினி பேச்சு

ஸ்டாலின்-அன்புமணி-திருமாவளவன்-சீமான் பற்றி ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

stalin thirumavalavan seeman anbumaniஇன்று மே 19ஆம் தேதி 5வது நாளாக ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார்.

சந்திப்புக்கு முன் ரஜினிகாந்த் மேடையில் பேசினார்.

அப்போது அவர் ஸ்டாலின்-அன்புமணி-திருமாவளவன்-சீமான் ஆகியோர் பற்றி கூறியதாவது…

தளபதி முக. ஸ்டாலின் என் நெருங்கிய நண்பர். நல்ல திறமையான நிர்வாகி. சோ சொல்வார், அவர்கிட்ட சுதந்திரமா செயல்பட விட்டா நல்லா செயல்படுவார்னு சொல்வாங்க.

அன்புமணி ராமதாஸ் நன்றாக படித்தவர். மாற்றத்தை கொண்டு வர நினைப்பவர். நல்ல கருத்துகள் வச்சிருக்கவர். மாடர்னா சிந்திக்கிறவர்.

திருமாவளன் தலித்துக்கு ஆதரவா குரல் கொடுத்து உழைச்சிட்டிருக்கார்.

சீமான் கடும் போராளி. அவர் கருத்துகள் கேட்டு நானே பலமுறை பிரமிச்சுப் போயிருக்கேன்.

அவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை.” என்று பேசினார் ரஜினிகாந்த்.

Rajini talks about Stalin Anbumani Thirumavalavan Seeman

‘எதிர்ப்பே அரசியல் மூலதனம்; எதிரிகளே வளர்த்து விடுறாங்க’ – ரஜினி

‘எதிர்ப்பே அரசியல் மூலதனம்; எதிரிகளே வளர்த்து விடுறாங்க’ – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth stillsகடந்த 4 நாட்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இன்று இறுதிநாளாக அவர் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து வருகிறார்.

அதற்கு முன்பு அவர் பேசியதாவது…

“நான் முதல் நாள் பேசும்போது, நான் அரசியல் பற்றி பேசினேன்.

ஒருவேளை அரசியலுக்கு வரலாம்னு நான் சொன்னது இவ்வளவு பெரிய வாதமா ஆகும்னு நினைக்கல.

நான் அரசியலுக்கு வந்தால், என் ரசிகர்கள் எப்படி இருக்கனும்னு சொன்னேன்.

வாதவிவாதங்கள் இருக்கலாம். உலகத்தில் எல்லாத்துக்கும் எதிர்ப்பு இருக்கும்.

எதிர்ப்பு இல்லாம வளரவே முடியாது. அரசியலுக்கு எதிர்ப்புதான் மூலதனம்.

ஒரு செடியை நட்டு வச்சி வளர்க்கிறோம். அதற்கு முன் மண்ணைத் தோண்டி, உரம்போட்டு, சிலவற்றை செய்ய வேண்டும்.

அப்போது அந்த செடி மரமாக வளரும். அதுபோலதான். நமக்கு எதிரான அவமானங்கள் போல எதிர்ப்பு விஷயங்களையும் போட்டு புதைத்து வளரவேண்டும்.

ஒரு சித்தர் இருந்தார். அவரைப் பார்த்து எல்லாரும் அசிங்கமாக திட்டி சென்றார்கள்.

அப்போது அருகில் இருந்த சீடர்கள் கேட்டார்கள். உங்கள இப்படி திட்டுறாங்களே..? என்று கேட்டார்.

அதற்கு சித்தர் சொன்னார். அவங்க கொட்டி தீர்த்துட்டாங்க. போய்ட்டாங்க. ஆனா நான் எதையுமே எடுத்துக்கல. என்றார்” என்று உதாரணங்களுடன் தம்மை எதிர்ப்பவர்கள் பற்றி பேசினார் ரஜினிகாந்த்.

Opposition is investment of Politics says Superstar Rajini

மீம்ஸ் போட்டு திட்டும் விமர்சகர்களுக்கு ரஜினியின் சூப்பர் பதிலடி

மீம்ஸ் போட்டு திட்டும் விமர்சகர்களுக்கு ரஜினியின் சூப்பர் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth reaction to his political entry memesஇன்று 5வது நாளாக ரஜினி ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

அப்போது அவர் சோஷியல் மீடியாவில் மீம்ஸ் மற்றும் விமர்சிக்கும் நபர்களுக்கு தன் பதிலை அதிரடியாக கொடுத்துள்ளார்.

அவர் பேசியதாவது….

சோஷியல் மீடியாவுல சிலர் திட்டி எழுதுவதை பார்ப்பேன். அது எனக்கு கஷ்டமில்ல.

ஆனால், ஏன் தமிழ்மக்கள் இப்படி கீழ்த்தரமா போயிட்டாங்க. இப்படி எழுதுறாங்க நினைப்பேன்.

அந்த மாதிரி வார்த்தைகளை பயன்படுத்துறாங்களே அப்படின்னு வருத்தம் தோணுது.

உலகத்துல எல்லாத்துக்கும் எதிர்ப்பு இருக்கு. எதிர்ப்பு இல்லாம வளர முடியாது.

அதுவும் அரசியலுக்கு எதிர்ப்புதான் மூலதனம். ஒருவிதத்துல அவங்களே நமக்கு உதவி பண்றாங்க”

என்று மீம்ஸ் போட்டு விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார்.

‘கடமையை செய்யுங்கள்; போர் வரும்போது சந்திப்போம்.’ – ரஜினி பேச்சு

‘கடமையை செய்யுங்கள்; போர் வரும்போது சந்திப்போம்.’ – ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini welcomeரஜினிகாந்த் இன்று 5வது நாளாக சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து வருகிறார்.

அப்போது ஒரு சின்ன கதையை கூறி தன் அரசியல் பிரவேசத்தை சூசகமாக தெரிவித்தார்.

பழைய காலங்களில் அரசர்கள் இருப்பார்கள். படைபலம் இருக்கும். ஆனால் ஆட்கள் குறைவாக இருப்பார்கள்.

ஆனா, போர் என்று வரும்போது எல்லா ஆண்களும் சேர்ந்து போரிடுவாங்க.

மத்த நேரம் உழைச்சுட்டே இருப்பாங்க. வீர விளையாட்டுகள் எல்லாம வச்சது, அவங்க உடலை பலப்படுத்தணும்னுதான்.

அவங்க கடமையை செஞ்சுட்டே இருப்பாங்க. போர்னு வரும்போது மண்ணுக்காக, மானத்துக்காக போராடுவாங்க. அது போல எனக்கும் கடமை, இருக்கு. தொழில் இருக்கு.

அதுபோல் ரசிகர்கள், நீங்க ஊருக்கு போங்க, கடமையை செய்யுங்க. எனக்கும் வேலை இருக்கு. நான் என் வேலையை பார்க்குறேன்.

ஆனால் போர்னு வரும்போது நாம கண்டிப்பா பார்த்துப்போம். ஆண்டவன் எப்போதும் நம்முடன் இருப்பான். நன்றி.” என கூறினார் ரஜினிகாந்த்.

Rajinikanth again confirmed his political entry by telling King Story

‘நான் பச்சை தமிழன்; தூக்கியெறிந்தால் இமயமலையில் விழுவேன்..’ ரஜினி

‘நான் பச்சை தமிழன்; தூக்கியெறிந்தால் இமயமலையில் விழுவேன்..’ ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகடந்த ஒரு வாரமாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று 5வது நாளாக ரசிகர்களை சந்தித்து ரஜினி பேசி வருகிறார்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது…

நான் தமிழனாங்கற கேள்வி அடிக்கடி வருது. இப்போ எனக்கு 67 வயசு ஆகுது.

23 ஆண்டுகள் மட்டும்தான் கர்நாடகத்துல இருந்தேன். 44 ஆண்டுகள் இங்க, உங்க கூடவே வளர்ந்தேன்.

கர்நாடகத்துல இருந்து ஒரு மராட்டிக்காரனாகவோ, கர்நாடகக்காரனாவோ வந்தாலும் எனக்கு பணத்தையும் புகழையும் அள்ளிக்கொடுத்து நீங்க என்னை தமிழனாகவே ஆக்கிட்டாங்க.

இப்ப நான் பச்சைத்தமிழன். என் மூததையர்கள் கிருஷ்ணகிரில இருந்தவங்கன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன்.

என்னைய தமிழக மக்கள் வீசி எறிந்தால், நான் இமயமலையில போய்தான் விழுவேன். வேற எங்கயும் போய் விழமாட்டேன்.

ஏன்னா, நல்ல மனசுள்ள தமிழ்மக்கள் இருக்கிற இங்க இருக்கணும்,

இல்லைன்னா, இமயமலைலதான் இருக்கணும்.

என்னை நல்லா வாழ வச்சீங்க. என்னை வாழ வைச்ச தெய்வங்கள் நீங்கள்.

நீங்க நல்லா இருக்கணும்னு நான் நினைக்கறதுல என்ன தப்பு இருக்கு. இதற்கு ஏன் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க.” என்று ஆவேசமாக பேசினார் ரஜினி.

முதன்முறையாக ரஜினியுடன் இணையும் சமுத்திரக்கனி

முதன்முறையாக ரஜினியுடன் இணையும் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Samuthirakaniகடந்த நான்கு தினங்களாக தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு, தான் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் போட்டோ சூட்டில் கலந்துக் கொண்டார் ரஜினிகாந்த்.

ரஞ்சித் இயக்கவுள்ள இதன் படப்பிடிப்பு வருகிற மே 28ஆம் தேதி தொடங்கவுள்ளது.

நாயகியாக ஹீமா குரோஷிமா நடிக்க, தனுஷ் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இவர் ரஜினிகாந்துடன் இணைவது இதுதான் முதன்முறையாகும்.

தனுஷின் தயாரித்த விசாரணை, விஐபி, விஐபி 2 உள்ளிட்ட படங்களில் சமுத்திரக்கனி நடித்திருந்தார் என்பது இங்கே கவனித்தக்கது.

Samuthirakani to play an important role in Rajinis Thalaivar161

More Articles
Follows