தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாக உள்ள மேன் Vs வைல்ட் என்ற நிகழச்சிக்காக கர்நாடகாவில் உள்ள பந்திபூர் காட்டுக்கு ரஜினிகாந்த் சென்றிருந்தார்.
இந்த நிகழ்ச்சி பியர் கிரில்ஸ் எனப்படும் முன்னாள் பிரிட்டிஷ் பாதுகாப்பு படை வீரரால் நடத்தப்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரகாண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் இதன் சூட்டிங்குக்காக இன்று ஒரு நாள் மட்டும் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டுள்ளார்.
எம்ஜிஆர் போல பளபளப்பு இல்லாத ரஜினி எப்படி சாதித்தார்.?; திருமாவளவன் பேச்சு
அதற்குள் இன்று மாலையில் ரஜினிக்கு காயம் ஏற்பட்டுள்தாகவும் சூட்டிங் கேன்சல் ஆகிவிட்டதாகவும் முன்னணி டிவி சேனல்களில் பொய் செய்திகள் வெளியானது.
பிரபலமான ஒரு நபருக்கு என்னானது? என்ற விவரம் கூட முழுமையாக தெரியாமல் செய்திகளை உடனே கொடுப்பதாக நினைத்து வதந்திகளை பரப்புகின்றனர்.
இப்படியிருந்தால் நாளை மக்கள் எந்த செய்தியை நம்புவார்கள். இனியாவது தீர விசாரித்துவிட்டு செய்திகளை பதிவிடுங்கள் என ரஜினி ரசிகர்களும் பொதுமக்களும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சற்றுமுன் சென்னை திரும்பியுள்ளார் ரஜினிகாந்த்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது…
‘Man Vs Wild’ சூட்டிங் நல்லபடியாக முடிந்தது. டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகும்.
எனக்கு படப்பிடிப்பின் போது எந்த காயமும் ஏற்படவில்லை. காட்டில் நிறைய முட்கள் இருந்தன. அது குத்திவிட்டது. அவ்வளவுதான்.
இவ்வாறு ரஜினி பேசினார்.
குறிப்பு – பொய்யான செய்தியை போட்டதற்கு இன்னும் அவர்கள் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.
Rajini slams fake TV reports about Man Vs Wild event shoot