தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாசர் தலைமையிலான நிர்வாகிகள் பதவியேற்ற உடன் நடிகர் சங்கம் கட்டிடம் விரைவில் கட்டப்படும் என்று உறுதியளித்தனர்.
இந்த கட்டிடத்திற்கான அனுமதி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் இருந்து தற்போதுதான் கிடைத்துள்ளதாம்.
அதன்படி மார்ச் 31ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்கான அவசர செயற்குழு கூட்டத்தில் நாசர், விஷால், பொன்வண்ணன், பிரசன்னா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்துக் கொண்டு முதல் செங்கல்லை எடுத்து வைக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் திரைத்துறை சார்ந்த 23 திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது.
Rajini Kamal will participate in Nadigar Sangam Building function