தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, நடிகை கவுதமி இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சொன்னது…
நான் நடித்துள்ள மகளே படத்தின் பாடலை இங்கு வெளியிடுகிறேன்.
உலகத்தில் உள்ள எல்லா தாய்மார்களுக்கும், பெண்களுக்கும் இதை சமர்ப்பிக்கிறேன்.
தமிழக அரசியல் தொடர்பாகவும், ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்தும் கேட்டபோது..
“முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவக்குப் பின் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது உண்மைதான்.
கமல் மற்றும் ரஜினி திடீரென அரசியலுக்கு வந்து தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடைமுறையில் சாத்தியம் இல்லை.
இந்த வெற்றிடத்தை ஒரே நாளில் யாராலும் நிரப்ப முடியாது’ என்றார்.