தலைமை வெற்றிடத்தை ரஜினி-கமலால் திடீரென நிரப்ப முடியாது.. : கௌதமி

தலைமை வெற்றிடத்தை ரஜினி-கமலால் திடீரென நிரப்ப முடியாது.. : கௌதமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Magalae song release stills (5)இன்று மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, நடிகை கவுதமி இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சொன்னது…

நான் நடித்துள்ள மகளே படத்தின் பாடலை இங்கு வெளியிடுகிறேன்.

உலகத்தில் உள்ள எல்லா தாய்மார்களுக்கும், பெண்களுக்கும் இதை சமர்ப்பிக்கிறேன்.

தமிழக அரசியல் தொடர்பாகவும், ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்தும் கேட்டபோது..

“முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவக்குப் பின் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது உண்மைதான்.

கமல் மற்றும் ரஜினி திடீரென அரசியலுக்கு வந்து தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடைமுறையில் சாத்தியம் இல்லை.

இந்த வெற்றிடத்தை ஒரே நாளில் யாராலும் நிரப்ப முடியாது’ என்றார்.

நாங்க போராட கமல் சொல்ல தேவையில்லை…; கடுப்பான வைகோ

நாங்க போராட கமல் சொல்ல தேவையில்லை…; கடுப்பான வைகோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vaiko condemns Kamals new tweet about Periyar Statue issueதிரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி அடைந்தது.

அங்கு பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியுள்து.

இதனையடுத்து பாஜக.வினரால் லெனின் சிலை அதிரடியாக அகற்றப்பட்டது.

இதுபற்றி தமிழக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிடும் போது… ‘லெனின் யார், அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என பதிவிட்டிருந்தார்.

பெரியார் சிலை உடைக்கப்படும் என எச்.ராஜா கூறியதால் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் உருவாகின.

முக.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்டோரும் தங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

அதன்பின்னர்.. அந்த பதிவை நான் பதிவிடவில்லை. தனது பேஸ்புக் அட்மின்தான் பதிவிட்டார் எனக் கூறி எச்.ராஜா அந்த பதிவை நீக்கவிட்டார்.

இந்த சர்ச்சை குறித்து கமல் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

`அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம்.

எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம். வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு’ என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் வைகோ.விடம் கேட்டபோது அவர் அவரது பாணியில் அனலாக பேசினார்.

கமல்ஹாசனுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் என் நண்பர்கள், ஊடகத்துறையினர் இது குறித்து கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு அரசியலுக்கு வந்த கமல் நாங்கள் எப்படி போராட வேண்டும் என சொல்ல தேவையில்லை.

விழலுக்கிரைக்கவேண்டாம் என கூறியிருக்கிறார். அப்படி என்றால் வீணாக போராட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

54 ஆண்டுகாலமாக போராடி, சிறை சென்று அரசியல் செய்து வருகிறோம். எங்களுக்கு அவர் சொல்ல தேவையில்லை” என கடுமையாக பேசினார்.

Vaiko condemns Kamals new tweet about Periyar Statue issue

பெரியார் சிலை குறித்து எச்.ராஜா பேசியது மத்திய அரசு தூண்டுதல்..? : கமல் கேள்வி

பெரியார் சிலை குறித்து எச்.ராஜா பேசியது மத்திய அரசு தூண்டுதல்..? : கமல் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanநடிகர் கமல்ஹாசன் திடீரென இன்று செய்தியாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது பெரியார் சிலை விவகாரம், எச் ராஜாவின் பேச்சு, காவரி நீர் பிரச்சினை குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சி நடந்து வருகிறது. ஆனால் அந்த முயற்சியை திசை திருப்பும் வகையில் இந்த பெரியார் சிலை விவகாரத்தை எழுப்பியுள்ளனர்.

பெரியார் சிலையை உடைப்போம் என கூறிய எச்.ராஜா வருத்தம் தெரிவித்து இருப்பதை தற்போது என்னால் ஏற்க முடியாது.

அவர் சொன்ன வார்த்தையை திருப்பி எடுத்தாலும் அது காயம்தானே.

இது மத்திய அரசின் தூண்டுதலாக கூட இருக்கலாம். இப்போது அவர்கள் அதற்கும், எங்களுக்கும் சம்பந்தமும் இல்லை என்கிறார்கள்.

அவர் மீது பா.ஜனதா கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெரியார் பற்றி சிலர் கலக வார்த்தைகள் சொல்கிறார்கள்.

பெரியார் சிலையை யாரும் தொட்டு விட முடியாது. பெரியாரை தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு தேவையில்லை. பெரியார் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்குதான் பாதுகாப்பு தேவை.” என தெரிவித்தார்.

என் மகன் மகிழ்வன்; தமிழ் சினிமாவில் முதல் ஹோமோ செக்ஸ் படம்

என் மகன் மகிழ்வன்; தமிழ் சினிமாவில் முதல் ஹோமோ செக்ஸ் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

My son is gay is first tamil movie about Homo sexதமிழ் சினிமாவில் முதன்முறையாக ஆண் ஓரின சேர்க்கை பற்றிய படம் ஒன்று உருவாகியுள்ளது.

‘என் மகன் மகிழ்வன்’ (MY SON IS GAY) என இப்படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.

லோகேஷ் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் அனுபமா, குமார், அபிஷேக் ஜோசப், அஸ்வின்ஜித், கிஷோர், ஜெயப்பிரகாஷ் என பலர் நடித்துள்ளனர்.

ரத்தின குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சாந்தன் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஏற்கெனவே மெல்போர்னில் நடைபெற்ற இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல், நியூயார்க்கில் நடைபெற்ற நியூபெஸ்ட் எல்.ஜி.பி.டி. ஃபிலிம் ஃபெஸ்டிவல், கல்கத்தா இண்டர்நேஷனல் எல்.ஜி.பி.டி. ஃபிலிம் மற்றும் வீடியோ ஃபெஸ்டிவல், கோவா ஃபிலிம் பஜார், சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் திரையிடப்பட்டுள்ளது.

வருகிற மார்ச் மாதம் 20ஆம் தேதி., கன்னெல்லி ஆடிட்டோரியத்தில் திரையிடப்பட உள்ளது.

இந்த புதிய முயற்சிக்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

கோடை விடுமுறையாக இப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி பாம் நடிகை ஷகீலாவின் வாழ்க்கை படமாகிறது

கவர்ச்சி பாம் நடிகை ஷகீலாவின் வாழ்க்கை படமாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shakeelaதமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி ரசிகர்களை தன் கவர்ச்சியால் கிறங்கடித்தவர் ஷகீலா.

இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது படங்களின் வரவேற்பால் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களே தடுமாறிய காலம் உண்டு.

தற்போது இவரது வாழ்க்கை படமாக உருவாகவுள்ளது.

இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இந்த படத்தை இயக்க, ஷகீலா கேரக்டரில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறாராம்.

இப்படம் குறித்து படக்குழு கூறியதாவது…

ஷகீலாவுக்கு ஆசியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக இந்த படம் உருவாகிறது.

படத்தின் முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பை துவங்க இருக்கிறோம்” என்றனர்.

தனுஷின் வடசென்னை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

தனுஷின் வடசென்னை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Ameer character updates from Vada Chennaiபொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் வடசென்னை.

இப்படத்தை தனுஷ் உடன் இணைந்து லைக்கா நிறுவனம் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரும் தயாரிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை 3 பாகங்களாக உருவாக்கி வருகின்றனர்.

இதன் பர்ஸ்ட் லுக் நாளை மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தில் வெளியாகவுள்ளது.

35 வருட காலத்தில் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பங்களை கதையாக கொண்டு இப்படம் உருவாகிறது.

இதில் கேரம் போர்ட்டு சாம்பியனாக தனுஷ் நடிக்கிறார். அத்துடன் அதில் அரசியல் கலந்து அதிரடியாக வெற்றிமாறன் கொடுத்திருக்கிறாராம்.

இதில் அன்பு கேரக்டரில் தனுஷ், குணா கேரக்டரில் சமுத்திரக்கனி, ராஜன் கேரக்டரில் அமீர், பத்மா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ், சந்திரா கேரக்டரில் ஆண்ட்ரியா நடித்துள்ளனர்.

இப்படம் ஜீன் மாதம் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகும் எனத் தெரிகிறது.

Dhanush Ameer character updates from Vada Chennai

More Articles
Follows