ஹரே ராம்.; பிரபாஸை பாராட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ்.; ஏன் தெரியுமா.?

ஹரே ராம்.; பிரபாஸை பாராட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ்.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராமாயணக் கதையை மையப்படுத்தி ஓம் ராவத் இயக்கியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’.

இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது.

இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வரும் ஜூன் 16-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு திருப்பதியில் நடைபெற்றது.

இந்த நிலையில் ஆதி புருஷ் படத்திற்கும் பிரபாஸுக்கும் நடிகர் லாரன்ஸ் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

அதில்…

‘ஆதிபுருஷ்’ படக்குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஒரு பான் இந்திய நடிகராக இருந்துகொண்டு ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபாஸுக்கு என்னுடைய நன்றி. இன்றைய தலைமுறைக்கு ராமாயணத்தை கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சாதனை. படம் பிரம்மாண்ட வெற்றியடைய என்னுடைய பிரார்த்தனைகள். ஹரே ராம்.

My wishes to the entire #Adipurush team and Thanks to @PrabhasRaju for playing the role of Rama by being a pan-India star. Reaching out the epic Ramayana to today’s generation is the biggest achievement of all. My prayers for the movie’s massive success #HareRam.

Ragava Lawrence appreciates Adi Purush & Prabhas

I DONT CARE பாலைய்யாவின் அடுத்த அதிரடி.; வைரலாகும் மாஸ் ஃபர்ஸ்ட் லுக்

I DONT CARE பாலைய்யாவின் அடுத்த அதிரடி.; வைரலாகும் மாஸ் ஃபர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2023 ஜனவரியில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படம் வெளியானது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா நடித்து வரும் படம் ‘பகவந்த் கேசரி’.

இது பாலைய்யாவின் 108-வது படமாகும்.

இப்படத்தை அனில் ரவிபுடி இயக்க காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார்.

தமன் இசையமைக்க ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது டைட்டில் & பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இதில் ‘ஐ டோன் கேர்’ என்ற வாசகமும் இடம் பெற்றுளளன.

தசரா பண்டிகையை முன்னிட்டு ‘பகவந்த் கேசரி’ வெளியாகும் என கூறப்படுகிறது.

வழக்கம்போல பாலைய்யா ரசிகர்கள் மத்தியில் இந்த போஸ்டருக்கும் மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

பகவந்த் கேசரி

Big surprise from Balayya Bhagwant Kesari look goes viral

தளபதி 68 அப்டேட்: 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை

தளபதி 68 அப்டேட்: 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், ‘தளபதி 68’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

மேலும், விஜய் -ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த ‘குஷி’, ‘திருமலை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

20 வருடங்களுக்கு பிறகு விஜய் -ஜோதிகா காம்போ மீண்டும் காணப்படும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Venkat Prabhu to reunite Vijay, Jyotika for Thalapathy 68 going an negotiation

ஆகஸ்டில் ‘இறைவன்’ தரிசனம்.: ஜெயம்ரவி – அஹ்மத் அறிவிப்பு

ஆகஸ்டில் ‘இறைவன்’ தரிசனம்.: ஜெயம்ரவி – அஹ்மத் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

இதையடுத்து ‘இறைவன்’ படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது.

இந்நிலையில், ‘இறைவன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

மேலும், இயக்குனர் அஹமத் ஏற்கனவே ‘வாமனன், ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தத்தக்கது.

jayam ravi’s ‘iraivan’ release from augest 25

பாட்டிலுக்குள் மரம்.. அதற்குள் வாழ்க்கை.; பிரவீன் காந்தை வியக்க வைத்த ‘முகை’ படக்குழு

பாட்டிலுக்குள் மரம்.. அதற்குள் வாழ்க்கை.; பிரவீன் காந்தை வியக்க வைத்த ‘முகை’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்குமார் இயக்கத்தில் கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘முகை’.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் *இயக்குநர் பிரவீன் காந்த் பேசியதாவது…*

பாட்டிலுக்குள் மரம் இருக்கிறது, அதற்குள் வாழ்க்கை இருக்கிறது என மேடையிலேயே நிரூபித்து விட்டார்கள். இங்கு பரிசாக தந்த மரத்தை எல்லோரும் பாதுகாப்போம். ‘முகை’ மிகை இல்லாத அருமையான படைப்பாக தெரிகிறது.

இந்தப்படம் நிச்சயம் அனைவரும் கவனிக்கும் படமாக இருக்கும். கன்னடத்தில் இருந்து தமிழ் படம் எடுக்க வந்திருக்கிறார்கள். தமிழகம் எல்லோரையும் ஏற்கும். அவர்களுக்கு என் வாழ்த்துகள். இந்தப்படம் மிகப்பெரும் வெற்றி பெறும்.

*இயக்குநர் அஜித்குமார் பேசியதாவது…*

இது என் முதல் படம், என் குடும்பத்திற்கு என் நன்றி. என் தயாரிப்பாளருக்கு என்னுடைய மிகப்பெரும் நன்றி. நாயகி நடித்த ஒரு யூடியூப் விடியோ பார்த்து அவரை தேர்வு செய்தேன். மிக நன்றாக நடித்துள்ளார்.

ஒரே இடத்தில் நடக்கும் கதை. கிஷோர் குமார் சார் இப்படத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். என்னை நம்பி உழைத்த என் படக்குழுவிற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும், நன்றி.

தயாரிப்பாளர் சந்தோஷ் பேசியதாவது…*

என் வாழ்வின் முதல் மேடை இது. நாங்கள் அழைத்து இங்கு வந்து வாழ்த்திய திரை பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை தயாரிக்க ஆதரவாக இருந்த என் குடும்பத்திற்கு என் நன்றி.

லாக்டவுனில் தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அஜித்குமார் அப்போது தான் பழக்கமானார். சும்மா இருக்கிறோம் ஏதாவது கதை பண்ணு என்றேன். அவர் உருவாக்கிய கதை தான் இது. இந்தப்படத்திற்கு கிஷோர் குமார் பொருத்தமாக இருப்பார் என அவரை சந்தித்தோம். அவர் எங்கள் படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார்.

கிஷோர் குமார் சார் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை. நாயகி எங்களை நம்பி வந்து நடித்து தந்தார். படம் நன்றாக வரவேண்டுமென தொழில்நுட்ப கலைஞர்கள் மிகவும் உழைத்துள்ளனர். இப்படத்திற்காக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள், நன்றி.

Pravinkanth talks about Mugai movie team

விஜய்சேதுபதியை காண திரளும் மலேசியா இந்தோனேசியா தாய்லாந்து மக்கள்

விஜய்சேதுபதியை காண திரளும் மலேசியா இந்தோனேசியா தாய்லாந்து மக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பு நடைபெற்று வரும் தளத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை சந்திக்க மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

இவருடன் யோகி பாபு, ருக்மணி வசந்த், பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

பி. ஆறுமுக குமார்

படத்தொகுப்பு பணிகளை ஆர் கோவிந்தராஜ் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ. கே. முத்து மேற்கொண்டிருக்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைத்திருக்கிறார்.

ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில், இயக்குநரான பி. ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக மலேசிய நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு தினசரி உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

அவர்கள் படப்பிடிப்பனை பார்வையிடுவதுடன், படத்தின் நாயகனான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர், சுற்றுலா பயணிகளையும், விஜய் சேதுபதியின் ரசிகர்களையும் கட்டுப்படுத்த தெரியாமல் தவிக்கின்றனர்.

விஜய் சேதுபதி

Malaysia Indonesia Thailand peoples like to see Vijay Sethupathi

More Articles
Follows