நான் சொல்றேன்யா.. நடிகர் சங்க தேர்தல் இப்போ நடக்காது.. ராதாரவி

நான் சொல்றேன்யா.. நடிகர் சங்க தேர்தல் இப்போ நடக்காது.. ராதாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)வருகிற ஜீன் 23-ந்தேதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில் விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் நடிகர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் ராதாரவி இதுகுறித்து கூறியதாவது…

‘கடந்த முறை எங்களுக்கு எதிராக போட்டியிட்ட விஷால் அணி மாற்றம் தேவை என்றார்கள். தற்போது விஷால் மீது ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

எங்களுக்கு எதிராக நின்றவர்கள் தற்போது விஷாலுக்கு எதிராக நிற்கிறார்கள்.

கடந்த முறை மூன்று ஆண்டுகளில் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னார் ரஜினிகாந்த்.

எதற்கெடுத்தாலும் விஷாலை முன்னிலைப்படுத்தி பேசினார்கள். இப்போது அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஜீன் 23-ந் தேதி கண்டிப்பாக தேர்தல் நடக்காது. அவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகளுக்கு முறையான கணக்கு தாக்கல் செய்யவில்லை.

நிறைய குளறுபடிகள் நடந்திருக்கிறது. இந்த தேர்தல் கண்டிப்பாக நடக்காது. வரும் 13-ந்தேதி நீதிமன்றம் மூலம் தேர்தல் நிறுத்தப்படும்’.

இவ்வாறு ராதாரவி பேசியுள்ளார்.

கடவுளை தின்னும் ஜாதி வெறியன் நான் என கூறிய ரஞ்சித் முன்ஜாமீன்

கடவுளை தின்னும் ஜாதி வெறியன் நான் என கூறிய ரஞ்சித் முன்ஜாமீன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)கும்பகோணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கபாலி, காலா பட இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார்.

‘அப்போது ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல.

நான் தலித் ஜாதி வெறியன் என்ற சொல்லிக் கொள்வதில் பெருமை தான்.

மாடு உங்களுக்கு கடவுள் என்றால் அதையும் நான் தின்பேன் என ஓவராக பேசினார்.

ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து இயக்குனர் ரஞ்சித் மீது மதச்சண்டையை தூண்டுவது, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்கள்.

தற்போது இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இயக்குனர் பா.ரஞ்சித் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே பேசினேன். எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். எனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல என்று ரஞ்சித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பூஜையுடன் துவங்கிய நடிகர் ஆதியின் “கிளாப் – தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்”

பூஜையுடன் துவங்கிய நடிகர் ஆதியின் “கிளாப் – தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)சினிமா மற்றும் விளையாட்டு ஆகியவை மட்டுமே வேற்றுமை கடந்து அனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்கும் விஷயங்கள். இவற்றில் மட்டும் தான் மக்கள் வேறுபாடுகள் மற்றும் பிரிவினை மறந்து, சிறப்பான தருணங்களை கொண்டாட ஒன்றாக இணைந்து வருகிறார்கள். விளையாட்டை மையப்படுத்திய படங்கள் ஏன, மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு மக்களை உச்சகட்ட உற்சாகத்தில் ஆழ்த்துகிறது என்பதற்கு இது ஒரு சரியான காரணம். இந்த சீசனில் தொடர்ச்சியாக விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் வெளிவருகின்றன. இந்த வரிசையில் பல விதிவிலக்குகளுடன் ஒரு திரைப்படம் இணைந்திருக்கிறது. அது ஆதி நடிப்பில் ‘க்ளாப் – தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்’ என்ற தலைப்பில் உருவாகும் படம். இந்த படத்தின் படப்பிடிப்பு 12-06-2019 காலை பூஜையுடன் துவங்கியது.

இது குறித்து இயக்குனர் பிரித்வி ஆதித்யா கூறும்போது, “ஆம், விளையாட்டை மையப்படுத்திய படங்கள் நிறைய வருகின்றன, சமகாலத்திய இயக்குனர்கள் இந்த வகையிலான படங்களில் உள்ள ஒரே மாதிரியான கூறுகளை உடைத்து, புதிய மற்றும் வேறுபட்ட பரிமாணங்களை கொண்ட படங்களை கொடுப்பதை பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது. அந்த வகையில், “CLAP” சில விதிவிலக்கான விஷயங்களை கொண்டுள்ளது. ஆதி சார் ஒரு தடகள வீரனுக்கு உண்டான மிகச்சரியான தோற்றத்தை கொண்டிருக்கிறார், ஆனாலும் அவர் இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய மெனக்கெட்டு கூடுதல் முயற்சிகள் எடுக்கிறார். மல்லீ ராவா போன்ற தெலுங்கு படங்களில் மிகச்சிறந்த நடிப்பிற்காகவும், ஸ்டார் பிளஸ் உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற அகான்ஷா சிங் நாயகியாக நடிக்கிறார். கிரிஷா குரூப் (கோலி சோடா 2, ஏஞ்சலினா புகழ்) இந்த படத்தில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில், தடகள வீராங்கணையாக நடிக்கிறார். படத்தில் நடிக்க கையெழுத்திட்ட உடனேயே, தன் சொந்த விருப்பத்தில் அந்த கதாபாத்திரத்திற்காக தயாராக, 2-3 மாத காலம் பயிற்சி பெற்றார். நாசர் சார் வில்லனாக நடிக்க, மைம் கோபி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முனிஷ்காந்த் படம் முழுக்க வருகிறார், நகைச்சுவை மற்றும் நடிப்பு என இரண்டிலும் கலக்க அவருக்கு வாய்ப்பு அமைந்திருக்கிறது. பிரகாஷ்ராஜ் சார் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் கதாப்பாத்திரம் தான் கதையை நகர்த்தி செல்லும் முக்கிய அம்சம்” என்றார்.

இசைஞானி இளையராஜா இந்த படத்துக்கு இசையமைப்பது குறித்து அவர் கூறும்போது, “எங்கள் மொத்த குழுவும் இசைஞானி இளையராஜா ஐயாவை இந்த படத்தில் கொண்டிருப்பதற்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். விளையாட்டை மையப்படுத்திய படம் தான் என்றாலும், அது கொண்டிருக்கும் ‘உணர்ச்சிபூர்வமான’ விஷயங்களுக்காக, நாங்கள் இசைஞானி இசையமைக்க மிகவும் விரும்பினோம். மேலும், அவர் தனது மந்திர இசை மூலம் அத்தகைய உணர்ச்சிகளைக் கொண்டுவரக்கூடிய ஒரு இசை மந்திரவாதி. இந்த படத்தில் 5 பாடல்கள் உள்ளன. அவை உணர்வு ரீதியான மற்றும் ஊக்கமளிக்கும் பாடல்கள். விரைவில் பாடல்கள் இசையமைக்க துவங்குவோம்” என்றார்.

ஜூன் இறுதியில் வெளியாகும் ஜீவி படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகிய மண்ணின் மைந்தர்கள் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். வைரபாலன் கலை இயக்குனராகவும், ராகுல் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கிறார். கட்ஸ் அண்ட் க்ளோரி ஸ்டுடியோஸ் சார்பில் ஜி.மனோஜ் மற்றும் ஜி.ஸ்ரீஹர்ஷா மற்றும் PMM ஃபிலிம்ஸ் சார்பில் பி.பிரபா பிரேம் இணை தயாரிப்பு செய்கிறார்கள்.

சுட்டுப்பிடிக்க உத்தரவில் என் கதா பாத்திரம் சஸ்பென்சாக இருக்கும் – அதுல்யா ரவி

சுட்டுப்பிடிக்க உத்தரவில் என் கதா பாத்திரம் சஸ்பென்சாக இருக்கும் – அதுல்யா ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)Instagramன் அழகான இளவரசி, அவரது பேரழகான தோற்றத்துக்காக ஒரு நம்ப முடியாத மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். ஆனால் அது மட்டுமே அவரை வழக்கமான ஒரு நடிகையாக வைத்திருக்கவில்லை. அவர் எப்போதும் உற்சாகமாக, தனித்துவமான கதாபாத்திரங்களை பரிசோதிக்கும் ஒரு நடிகையாகவும் இருக்கிறார். சுட்டு பிடிக்க உத்தரவு அதுல்யா ரவியின் முந்தைய திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொள்ள வைத்த திரைப்படம் என உறுதியாக கூறுகிறார்.

இது குறித்து அவர் கூறும்போது, “ஆம், என்னுடைய பகுதி என்று வரும்போது சுட்டுப் பிடிக்க உத்தரவு முற்றிலும் புதுமையானது. இந்த படத்தில் வழக்கமான கமெர்சியல் அம்சங்கள், பாடல்கள் மற்றும் காதல் காட்சிகள் இல்லை. கோயம்புத்தூர் சேரிகளில் வாழும் ஆசிரியர் பயிற்சிக்கு செல்லும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்” என்றார்.

படத்தைப் பற்றி மேலும் கூறும்போது, “இந்த கதை ஒரு பெண்ணுக்கு நிகழும் ஒரு எதிர்பாராத சம்பவத்தை பற்றியது. ஒரு கொள்ளைக்கார கும்பல் அவள் வாழும் பகுதியில் நுழையும் போது அவள் என்ன செய்கிறாள் என்பதை பற்றியது. இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா என்னிடம் இந்த கதையை சொன்ன போதே, வேகமாக போகும் இந்த திரில்லர் படத்தில் என் பகுதிகள் தான் ஆறுதலாக இருக்கும் என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிட்டார். இந்த படத்தில் என் கதாபாத்திரம் சஸ்பென்ஸாக இருக்கும் என்பதை மட்டும் என்னால் இப்போது சொல்ல முடியும். இந்த படத்தில் ஒரு சேரி பெண்ணாக நடிக்க எந்தவிதமான சிறப்பு பயிற்சியையும் நான் எடுக்கவில்லை. உண்மையில், என் கதாபாத்திரம் அத்தகைய முயற்சிகளை கோரவில்லை. நான் கோயம்புத்தூர் பெண்ணாக நடிப்பதால், அதற்கேற்றவாறு வட்டார வழக்கில் மட்டும் பேச வேண்டியிருந்தது” என்றார்.

விக்ராந்த், அதுல்யா ரவி, மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்திருகிறார். சுஜீத் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த சுட்டுப்பிடிக்க உத்தரவு வரும் ஜூன் 14, 2019 அன்று உலகெங்கிலும் வெளியாகிறது.

தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ சர்வதேச அளவில் தனது வெற்றிப் பயணத்தை தொடர்கிறது

தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ சர்வதேச அளவில் தனது வெற்றிப் பயணத்தை தொடர்கிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஎதிர்வரும் ஜூன் 27 முதல் ஜூலை 07ம் தேதி வரை கொரியாவின் போய்ஷன் நகரில் நடைபெறவிருக்கும், பிரசித்தி பெற்ற 23வது
‘போய்ஷன் சர்வதேச ஃபெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில்’ (BIFAN), ‘சூப்பர் டீலக்ஸ்’ திரையிடப்பட இருக்கிறது.

தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ போய்ஷன் ஃபெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில், ‘வர்ல்ட் ஃபெண்டாஸ்டிக் ப்ளூ’ பிரிவில் திரையிடப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ‘அந்தாதுன், கல்லி பாய் மற்றும் மணிகாமிகா’ ஆகிய பிற இந்திய மொழி படங்களும் திரையிடப்பட இருக்கிறது.

அரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா

அரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் “ராட்சசி”. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. “நல்ல விமர்சனமும் கமர்சியல் ரீதியிலான வெற்றியும்” என்ற பார்முலாவில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அவரின் அடுத்த படமான ராட்சசி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விரைவில் படம் திரைக்கும் வர இருக்கும் நிலையில் அதனை இயக்கியுள்ள இயக்குநர் சை.கௌதம்ராஜ் அவர்களிடம் படத்தைப் பற்றிக் கேட்ட போது,

ஒவ்வொரு பையனோட முதல் ஹீரோயினும் ஒரு டீச்சராத் தான் இருப்பாங்க.. எனக்கு என்னோட நாலாங்கிளாஸ் “நிர்மலா டீச்சர்”, ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு டீச்சரோ பேர் கட்டாயம் மனசில இருக்கும். நம்மளோட அந்த டீச்சர் பள்ளிக்கூடத்துல நடக்குற நடக்க வேண்டிய விசயங்களை எனக்கென்னன்னு இல்லாம எதிர்த்து நின்னு அத்தனை பேருக்கு முன்னாடி கம்பீரமா கேள்வி கேட்கும் போது, மனசுல தோணும்.. “இவங்கதான் என்னோட சூப்பர் ஹீரோயினி”- ன்னு அவங்கதான் இந்த டீச்சர் “ராட்சசி” கீதாராணி.

உங்களப் பொண்ணுப் பார்க்க வரட்டுமான்னு எந்த சூதுவாதும் இல்லாம டிரைலர்ல கேட்குற அந்த குட்டிப் பையனாத் தான் நாம எல்லோரும் இந்த கீதா டீச்சரைப் இருப்போம். காலேஜ் கூட எத்தனை வயசானாலும் எதாவது ஒரு வகையில படிக்க முடியும் ஆனா, ஸ்கூல் லைப் ஒருதடவைதான், தியேட்டரவிட்டு வெளிய வரும் போது அந்த நினைவுகள தரும் இந்தப் படம்.

கேள்வி கேட்டுட்டு அப்படியே நிக்கிறவங்கள நாட்கள் நகர நகர மக்கள் மறந்துடுவாங்க. ஆனா யாரு செயல்ல அதைக் காட்டுறாங்களோ அவங்கள தான் வரலாறு பேசும். கட்டாயமா இந்த ராட்சசியையும் பேசும்.

அரசுப்பள்ளியில மாற்றம் உருவாக்கப்படணும்ங்கிறது மாற்றுக் கருத்தே இல்லாம தமிழ்நாட்டுல உள்ள ஒவ்வொருத்தரோட எண்ணமும், என்னோடதும் அதேதான். அதை திரை வடிவமா மாத்தியிருக்கேன்.

இதுல ராட்சசியா ஜோதிகா மேடமத் தவிர வேற யாரும் இவ்வளவு கச்சிதமா பண்ணிரமுடியாது, அது படம் பாக்கும் போது உங்களுக்கும் தெரியும். ஒரு கதைய தேர்ந்தெடுக்கும் போதும், அதை நடிக்கும் போதும் தனக்கு சமுதாயத்துல பொறுப்புணர்வு இருக்குன்னு முழுமையா நம்புறாங்க, அவங்க எப்பவும் ஜெயிச்சிட்டே தான் இருப்பாங்க. ராட்சசி கதைய கேட்டதுல இருந்து நிறைய ஹோம் ஒர்க் பண்ணாங்க, நிறைய டீச்சர்கிட்ட பேசுனாங்க. அவங்க டிரஸ்ஸிங், மேக்கப் சேஞ்ச், பாடிலாங்குவேஜ்னு அவ்வளவு டெடிகேசன், “ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி.”

வியாபார நோக்கத்துல கல்விய விக்க ஆரம்பிச்சவங்க, அரசுப் பள்ளிய மக்களோட பொதுப் புத்தியில வேற மாதிரியா உருவாக்கிட்டாங்க.

இப்ப தமிழ்நாட்டில இருக்குற பெரிய பெரிய சாதனையாளர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் பெரும்பாலானவர்களை உருவாக்குனது அரசுப் பள்ளிதான்னு அழுத்தம் திருத்தமா சொல்லமுடியும். கடந்த பத்து வருடங்கள்ள உருவான அடுத்த தலைமுறை பிரைவேட் ஸ்கூல்ல இருந்து அதிகமா வெளிய வந்தாங்க. தனியார் பள்ளி – அரசுப்பள்ளிங்கிற ஏற்றத்தாழ்வு உருவாகியிருக்கவேக் கூடாது, அந்த எண்ணத்தை மாத்தணும்னு போராடுறவங்க தான் இந்த “ராட்சசி” கீதா ராணி.

இந்த நோக்கத்தோட எத்தனையோ ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுக்க தனி ஆட்களா, அரசுப் பள்ளிய உயர்த்த போராடிகிட்டு இருக்காங்க, அவங்களுக்கு சல்யூட். இந்தப் படத்தோட ஹீரோ அவங்க தான்.

அரசுப்பள்ளிகளோட தரம் உயரணுங்கிறது அரசுப்பள்ளியில படிக்கிற பசங்களோட தரம் உயரணுங்கிறதுக்காகத்தான், அதை வலிமையாக பேச இந்த மாதிரி ராட்சசிங்க வந்தே ஆகணும்.

More Articles
Follows