தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2021ல் டிசம்பர் மாதம் பான் இந்தியா படமாக பல மொழிகளில் உலகமெங்கும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் ‘புஷ்பா’.
சுகுமார் இயக்கிய இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் பட்டைய கிளப்பியது. ‘யே.. சாமி… சாமி…’ மற்றும் ‘ஊ.. சொல்றீயா மாமா..’ என்ற பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த பாடல்களாக உள்ளன.
இந்த படம் வெளியாகி 20 நாட்களில் ரூ.200 கோடி வரை வசூலித்தது.
முதல் படம் ரிலீசாகும் போது ‘புஷ்பா பார்ட் 2’ பட பணிகளையும் கவனித்து வந்தார் இயக்குனர் சுகுமார்.
எனவே விரைவில் ‘புஷ்பா 2’ படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் பான்-இந்தியா படத்தை இயக்கவுள்ளாராம். அதில் நாயகனாக சிரஞ்சீவி நடிப்பார் என சொல்லப்படுகிறது.
இவையில்லாமல் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் ஒன்றையும் ‘புஷ்பா’ இயக்குநர் சுகுமார் இயக்கவுள்ளதாக தெலுங்கு சினிமாவுலகில் பேசப்படுகிறது.
Pushpa director’s next with Chiranjeevi and Vijay Devarakonda