புனித் ராஜ்குமாருக்கு அரசு விருது.; ரஜினி ஜூனியர் என்டிஆருக்கு அழைப்பு

புனித் ராஜ்குமாருக்கு அரசு விருது.; ரஜினி ஜூனியர் என்டிஆருக்கு அழைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட சினிமாவில் மிக பிரபலமான நடிகர் புனித் ராஜ்குமார்.

45 வயதான இவர் சில மாதங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

இவரது மரணம் இந்திய திரை உலகை அதிர்ச்சி அடைய செய்தது.

இந்த நிலையில் கர்நாடகா அரசு அவரை கௌரவிக்கும் வகையில் கர்நாடக ரத்னா என்ற விருதை புனித் ராஜ்குமாருக்கு வழங்க உள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த், ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Punith Rajkumar will be awarded as Kartanaka Ratna Rajini will guest at Event

ரசிகனின் கலைக்கும் மரியாதை கொடுக்கும் நடிகர் விஜய்

ரசிகனின் கலைக்கும் மரியாதை கொடுக்கும் நடிகர் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்யை டிவிட்டரில் 4 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்த நிலையில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே!’ என்று சொல்வதோடு நிறுத்தாமல் அதனை நடைமுறைப்படுத்தும் விதமாக, தன் ரசிகன் உருவாக்கிய ஒரு டிஜிட்டல் புகைப்படத்தினை தனது பிராஃபெயில் படமாக பதிவேற்றம் செய்துள்ளார் விஜய்.

தன் ரசிகனுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் தளபதி என்றும் தவறியதில்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்று.

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பரிசாக ‘வாரிசு’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தளபதியின் இந்த செயல் அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்து வருகிறது.

விஜய்

Actor Vijay updated his fans art as profile picture

ஆசைப்பட்ட ஐசரி கணேஷ்.; ஓகே சொல்வாரா டைரக்டர் பிரபு சாலமன்.?

ஆசைப்பட்ட ஐசரி கணேஷ்.; ஓகே சொல்வாரா டைரக்டர் பிரபு சாலமன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின்குமார், தம்பி ராமையா நடித்துள்ள படம் ‘செம்பி’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கமல்ஹாசன் தலைமையில் பிரபலங்கள் கலந்துக்கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

*இதில் Dr.ஐசரி K கணேஷ் பேசியதாவது…*

“பிரபு சாலமன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர். அவரை வைத்து என் தயாரிப்பு நிறுவனத்தில் படம் செய்ய ஆசைப்பட்டேன். அது வரும் காலத்தில் நடக்கும் என நம்புகிறேன். கோவை சரளா மேடம் இந்தப்படத்தில் அசத்தியிருக்கிறார். டிரெய்லரே படம் நன்றாக இருக்குமென்பதை சொல்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்று பேசினார்.

Will Prabu Solomon work with Producer Isari K Ganesh

கமல் வந்தால் படம் ஜெயிக்கும்.. அந்த ராசி எனக்கும் இருக்கு.. – பாக்யராஜ்

கமல் வந்தால் படம் ஜெயிக்கும்.. அந்த ராசி எனக்கும் இருக்கு.. – பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின்குமார், தம்பி ராமையா நடித்துள்ள படம் ‘செம்பி’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கமல்ஹாசன் தலைமையில் பிரபலங்கள் கலந்துக்கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

*இதில் கே.பாக்யராஜ் பேசியதாவது…

“கமல் விழாவுக்கு வந்தால் படம் ஜெயிக்கும் என்று இங்கு சொன்னார்கள். அந்த ராசி எனக்கும் இருக்கு. அவர் நடித்த 16 வயதினிலே தான் எனக்கும் ஆரம்பம்.

அந்தப்படத்தில் அவரது திறமையை பிரமித்து பார்த்திருக்கிறேன். அதே போல் கோவை சரளா அவர்களை எட்டு வயதிலிருந்தே எனக்கு தெரியும். முந்தானை முடிச்சு படத்தில் என்னிடம் அடம்பிடித்து நடித்தார். அவரை மனோரமா போல் என்றார்கள் அது உண்மையான கருத்து.

இந்தப்படத்தில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். பிரபு சாலமன் மிகச்சிறந்த இயக்குநர். கும்கி படத்தில் அவரை பார்த்து பிரமித்தேன். இந்தப்படம் டிரெய்லரே அற்புதமாக இருக்கிறது படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

Director cum Actor Bhagyaraj talks about Kamal sentiment

நடிக்க கேட்டார்கள்.. நடிக்க வையுங்கள் என்றேன்.; ‘செம்பி’ விழாவில் பழ. கருப்பையா பன்ச்

நடிக்க கேட்டார்கள்.. நடிக்க வையுங்கள் என்றேன்.; ‘செம்பி’ விழாவில் பழ. கருப்பையா பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின்குமார், தம்பி ராமையா நடித்துள்ள படம் ‘செம்பி’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கமல்ஹாசன் தலைமையில் பிரபலங்கள் கலந்துக்கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

*இதில் பழ கருப்பையா பேசியதாவது…*

“ஒரு நாள் போன் செய்து இப்படத்தில் நடிக்க வேண்டும். என்றார். நடிக்க வையுங்கள் நான் நடிக்கிறேன் என்றேன்.

ஒரு காட்சிக்கு ஒரே வசனத்தை பல வடிவங்களில் சொல்லி நடிக்க வைப்பார். அது சரியான வடிவம் பெறும் வரை விட மாட்டார். மிகச்சிறந்த இயக்குநர். படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

Politician and Actor Pazha Karuppaiya speech at Sembi Audio launch

கோவை சரளா வாழும் மனோரமா அல்ல.; ஆளும் மனோரமா – நாஞ்சில் சம்பத்

கோவை சரளா வாழும் மனோரமா அல்ல.; ஆளும் மனோரமா – நாஞ்சில் சம்பத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின்குமார், தம்பி ராமையா நடித்துள்ள படம் ‘செம்பி’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கமல்ஹாசன் தலைமையில் பிரபலங்கள் கலந்துக்கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

*இதில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது..*

“இந்தப்படம் ஒரு இயற்கை நாட்டியம், இந்தப்படத்தில் எதிர்க்கட்சிக்காரனாக ஒரு பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றார் பிரபு சாலமன். அதுவே தான் எனது விருப்பமும்.

நான் நன்றாக நடித்ததாக கோவை சரளா சொன்னார். அவரை வாழும் மனோரமா என்றார்கள். அவர் ஆளும் மனோரமா. இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

Nanjil Sampath compares Actress Manorama and Kovai Sarala

More Articles
Follows