சசிகுமாரின் உறவினர் தற்கொலைக்கு காரணமான அன்பு செழியன் யார்?

சசிகுமாரின் உறவினர் தற்கொலைக்கு காரணமான அன்பு செழியன் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer GN AnbuChezhiyan background news updatesதற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் குறிப்பிட்டுள்ள மதுரை அன்பு செழியன் யார்? என்பது பற்றிய ஒரு பார்வை இதோ…

பைனான்சியர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் மதுரை அன்பு செழியன்.

இன்றைய ஆட்சிப் பொறுப்பில் அதிமுகவின் ஒரு சில முக்கிய அமைச்சர்களுக்கு மிக நெருக்கமானவர். ஒன்றுபட்ட அதிமுகவில் மதுரை நகர் மாவட்டத்தில் பொறுப்பில் இருந்தவர்.

கடந்த தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் மதுரை கிழக்கு, வடக்கு சட்டமன்ற தொகுதியில் சீட் வாங்க கடும் முயற்சி செய்தார். உளவுத் துறை குற்றப் பின்ணனி உள்ளளவர் அன்பு செழியன் என்று இவர் பற்றி கொடுத்த தகவலை ஆய்வு செய்த அன்றைய அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா அன்பு செழியனுக்கு சீட் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை செய்துக் கொண்ட அசோக்குமார் அவர்களும் அன்பு செழியனின் அரசியல் பலம் குறித்து தன் வாக்குமூல கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

Producer GN AnbuChezhiyan background news updates

கந்துவட்டி கொடுமையால் நடிகர் சசிகுமார் உறவினர் அசோக் தற்கொலை

கந்துவட்டி கொடுமையால் நடிகர் சசிகுமார் உறவினர் அசோக் தற்கொலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasikumarசசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகியான அசோக் குமார், கடன் பிரச்னை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பைனான்சியர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் மதுரை ஜிஎன் அன்புச் செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததாலேயே தற்கொலை செய்து கொள்வதாக அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தை இங்கே அப்படியே பதிவிட்டுள்ளோம்.

‘என்னை கோழை, சுயநலக்காரன் என்று எதுவேனும் சொல்வீர்கள். எனக்கு இரண்டு வழிதான் இருந்தது. 1. கொலை, 2. தற்கொலை. கொலைகாரன் ஆகும் தைரியம் இருந்தாலும், கொலை செய்யப்படுபவர் குடும்பம் பாவம். நல்ல பெற்றோர், நல்ல உடன்பிறந்தோர், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் இருந்தும், நான் அவர்களுக்கு நல்ல மகனாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ, தகப்பனாகவோ இல்லை.

எனக்கு, சசிகுமார் கடவுளைவிட நல்ல முதலாளியாக இருந்தான். எனக்கு எல்லா சுதந்திரமும், அதிகாரமும் கொடுத்தான். நான் கம்பெனியை கடனில் நிறுத்தியுள்ளேன். சசிக்கு நல்லது மட்டுமே செய்யத் தெரியும். ஆனால், அவனுக்கு யாரும் நல்லது செய்யவில்லை.

இதுவரை பத்து ஆண்டுகளில் எங்கள் எல்லா தயாரிப்பு படத்தையும் சரியான தேதியில் வெளியிட்டோம். நாங்கள் செய்த பெரிய பாவம், ஜி.என்.அன்புச்செழியனிடம் கடன் வாங்கியது.

வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த ஏழு வருடங்கள் வாங்கியவர். கடந்த ஆறு மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தார். வேற்று ஆட்களை வைத்துக்கொண்டு என் வீட்டுப் பெண்கள், பெரியவர்களைத் தூக்கி வருவேன் என்றார்.

யாரிடம் உதவி கேட்பது? அதிகார வர்க்கம் (காவல்துறை), அரசாங்கம் ஆள்வோரின் பெரும்புள்ளிகள், சினிமா பெடரேஷன் தலைவர் செல்வின் ராஜ் என சகலமும் அவர் கையில். அவரை ஒன்றும் செய்ய முடியாது. கடவுளுக்கு, அவரைத் தண்டிப்பது மட்டும் வேலை இல்லையே…

எனது உயிரினும் மேலான சசிகுமாரா… என்னால், உன்னை இவர்கள் எல்லாம் சித்ரவதை பண்ணுவதை என்னால் சகிக்க முடியவில்லை. உன்னை அவர்களிடம் இருந்து மீட்பதற்குத் திராணி இல்லாததால்தான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்.

என்னை மன்னித்துவிடு. நீ ரொம்ப நல்லவன், நீ நல்லா இருக்கணும். என் சாவை வைராக்கியமாக எடுத்துக்கொள். என்னைப்போல் நீ கோழை ஆகிவிடாதே.

எத்தனையோ பேரை வாழவைத்த நீ, கண்டிப்பாக நல்லபடியாக வாழவேண்டும். இந்த சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னை விட்டுப் போகிறேன். மன்னித்துவிடு சசி, என்னை நினைத்துப் பார்க்காதே.

நீ நிறைய உழைத்திருக்கிறாய். நீ சுயம்பு. என்னைக் காப்பாத்தாத கடவுள், உன்னையும், நமது குடும்பத்தையும் காப்பாற்றுவான். என்னால் அன்புச்செழியன் போன்ற சூழ்ச்சிக்காரர்களையும், ஈவு இரக்கமற்றவர்களையும் எதிர்கொள்ள முடியவில்லை.

எனக்கு வாழத் தகுதி இல்லையா? வாழ வழி இல்லையா? என்று தெரியவில்லை. அதனால், எனது சாவை நானே தற்கொலை மூலம் தேடிக்கொள்கிறேன்.

அப்பா, அம்மா, சின்னத்தாயி, ராஜப்பா, வனிதா, அர்ச்சனா, சக்தி, ப்ரார்த்தனா, சித்து, சாத்விக் நீங்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டாம். சட்டென்று மறந்துவிடுங்கள், இதுவரை உங்களுக்கு எதுவும் செய்யாத என்னை, உங்கள் நினைப்பில் இருந்து தூக்கி எறியுங்கள். 43 வருஷம் யாருக்கும் பயன் இல்லாத ஒரு ஜந்து போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். சசியை பார்த்துக் கொள்ளுங்கள். அவன் பாவம், அவன் குழந்தை.

எதிலும் ஜெயிக்காத நான், எனது தற்கொலையில் தோற்க மாட்டேன் என்று நம்புகிறேன்’ இப்படிக்கு பா. அசோக் குமார் என்று கையெழுத்திட்டு, அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் முழுப்பெயரையும் எழுதியுள்ளார்.

பின்னர், முக்கியக்குறி போட்டு பின்வருபனவற்றை எழுதியிருக்கிறார் அசோக் குமார். ‘யாரேனும் ஜி.என்.அன்புச்செழியனுக்கு சொல்லுங்கள். அதிகாரம், அரசு எல்லாவற்றையும் அவர் சமாளிக்கலாம். தனியே இருக்கையில் என்றேனும் தனது மனசாட்சியுடன் பேசச் சொல்லுங்கள். (இந்தக் கடிதம் கூட வெளியே தெரியாமல் அழிக்கும் வித்தை அவருக்குத் தெரியும். நீடூழி வாழ்ந்துவிட்டு அவர் மட்டும் இருக்கட்டும்)’ என்று எழுதி, மறுபடியும் கையெழுத்திட்டுள்ளார்.

அதற்கு கீழே, (என் உடம்பில் உள்ள தழும்புகள் கடந்த சில காலமாய் எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்டது) என்று குறிப்பிட்டு, அதன் கீழும் தமிழில் கையெழுத்திட்டுள்ளார் அசோக் குமார்.

இந்தக் கடிதம், படிப்பவர்கள் மனதை கலங்கடிக்க வைக்கிறது.

தற்போது அன்பு செழியன் மீது நடிகர் சசிகுமார் வழக்கு பதிவு செய்துள்ளார். எனவே அன்பு செழியன் தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்டுகிறது.

இதனையடுத்து சென்னை போலீஸ் மதுரைக்கு சென்று அவரை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Actor Sasikumars Cousin Commits Suicide Blames Loanshark

ashok kumar anbu cheziyan

Breaking: மகாகவி பாரதியார் உருவத்தில் உலகநாயகன் அவதாரம்

Breaking: மகாகவி பாரதியார் உருவத்தில் உலகநாயகன் அவதாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal bharathiyarஉலகநாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் விரைவில் அரசியல் நாயகனாக வலம் வரவிருக்கிறார்.

அவர் ஆரம்பித்துள்ள மையம் விசில் என்ற செயலிலை அடுத்த ஆண்டு முழுமைப்படுத்தி, கட்சி பெயரையும் அறிவித்து அரசியல் களம் காணவிருக்கிறார்.

இதனிடையில் அவர் கூறிவரும் அரசியல் கருத்துக்கள் தமிழக அமைச்சர்களிடையே பல்வேறு எதிர்ப்புகளை உருவாக்கி வருகிறது.

கமலை கைது செய்ய தயங்கமாட்டோம் என அமைச்சர்கள் அவருக்கு எச்சரிக்கை கொடுத்து வரும் நிலையில் கமலுக்கு ஆதரவாக பேசியிருந்தார் சாருஹாசன்.

இந்நிலையில் சில நொடிகளுக்கு முன்னர் ட்விட்டரில் தன் புகைப்படத்தை மாற்றியுள்ளார் கமல்ஹாசன்.

அதில் மகாகவி பாரதியாரைப் போல தலையில் முண்டாசு கட்டி ஆவேசமாக பார்ப்பது போல் வரைந்திருக்கிறார்.

இப்படம் நிச்சயம் பரபரப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம்.

Kamal chaged his twitter profile pic as Bharathiyar with Kamal face

ஜெயா வழி லஞ்ச வழிதானே; கமலை எதிர்த்த அமைச்சரை சாடும் சாருஹாசன்

ஜெயா வழி லஞ்ச வழிதானே; கமலை எதிர்த்த அமைச்சரை சாடும் சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Charuhasan supports his brother Kamalhassan in TN Minister warning issueஓரிரு தினங்களுக்கு முன் தமிழக அரசை விமர்சித்து.. “ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். அதை கண்டுபிடித்தபின் நிரூபிக்காமல் போவதும் குற்றம்தான். குற்றவாளிகள் நாடாளக்கூடாது” என்று கமல்ஹாசன் தன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து கமலுக்கு தமிழக அமைச்சர்கள் சார்பில் எதிர்ப்பு குரல் கிளம்பியது.

“அரசு மீது அபாண்டமான குற்றங்களை சுமத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது. எந்தவித ஆதாரம் இல்லாமல் அரசின் மீது குற்றங்களை சுமத்தி வரும் கமல் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது.” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

எனவே இதனையடுத்து அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலளிக்கும் விதமாக கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அமைச்சர் ஜெயக்குமார், ‘ஜெயலலிதா வழி’ என்று சொன்னால் லஞ்ச வழி என்றுதான் தெரிகிறது, நான் சொல்கிறேன் ’ஜெயலலிதா வழி’ என்பது 60 கோடிக்கு குறையாமல் கொள்ளை அடித்தது. உங்கள் அரசின் நடவடிக்கையை நான் எதிர்க்கத் தயார்.

வழக்கைப் போடுங்கள். தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நான் வாழ்பவன், உங்கள் வழக்கை கணினி மூலம் தொடங்கலாம். நீங்கள் ஜெயலலிதா வழியை விடும் வரை நான் விடப்போவதில்லை.

எனக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் தெரிந்த ஜெயலலிதா வழி 60 கோடி கொள்ளை?
இவ்வாறு சாருஹாசன் தெரிவித்திருக்கிறார்.

மேலும், “கமல் சொல்வது புரியவில்லை என்று சொல்பவர்கள் பொய்யர்கள். பிடிக்கவில்லை என்று சொல்வதற்குப் பதிலாக புரியவில்லை என்கிறார்கள். ஜெயலலிதாவை உயர் நீதிமன்றம் குற்றவாளி என்றது புரியவில்லையா?அல்லது பிடிக்கவில்லையா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் சாருஹாசன்.

Charuhasan supports his brother Kamalhassan in TN Minister warning issue

யுவன் தயாரிப்பில் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி-சீனுராமசாமி

யுவன் தயாரிப்பில் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி-சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yuvan stillsதேசிய விருது பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படத்தால் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தவர்கள் இயக்குனர் சீனுராமசாமி மற்றும் நடிகர் விஜய்சேதுபதி.

இதனையடுத்து இந்த கூட்டணி அடிக்கடி இணைய ஆரம்பித்து நல்ல தரமான படங்கள் கொடுத்து வருகின்றனர்.

தர்மதுரை மற்றும் இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் இணைந்தனர்.

இதில் இடம் பொருள் ஏவல் படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் மாமனிதன் என்ற புதிய படத்திற்காக இணைகின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பது மட்டுமல்லாது படத்தை தயாரிக்கவும் செய்கிறார் யுவன் சங்கர் ராஜா.

இதன் சூட்டிங்கை 2018 ஜனவரியில் தொடங்கவிருக்கிறார்களாம்.

Seenu Ramasamy and Vijay Sethupathi teams up for Maamanithan Produced by Yuvan

மந்த்ராலயத்தில் ரஜினி தரிசனம்; விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பு.?

மந்த்ராலயத்தில் ரஜினி தரிசனம்; விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini visited Mantralayam today So he may announce his political entry soonசில மாதங்களுக்கு முன், ரசிகர்களை சந்திக்கும்போது போர் வரும்போது சந்திப்போம் என தன் அரசியல் பிரவேசத்தை மறைமுகமாக தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இதனையடுத்து அவரது அரசியல் பிரவேசம் எப்போது? என மீடியாக்கள் ஆராய்ந்து அலச தொடங்கின.

இதனிடையில் வருகிற டிசம்பர் 12ஆம் தன் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என கணிப்புகள் வரத் தொடங்கின.

இந்நிலையில் இன்று ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்ராலயத்தில் தனது ஆஸ்தான தெய்வமான ராகவேந்திரரை தரிசிக்க சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

அவரது இந்த பயணம் ஆன்மிகம் மட்டுமல்லாமல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

காரணம் தனது இஷ்ட தெய்வமான ராகவேந்திரரிடம் ஆசி வாங்கவே அவர் அங்கு சென்றதாகவும், விரைவில் அரசியல் அறிவிப்பு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Rajini visited Mantralayam today So he may announce his political entry soon

rajini mantralaya

More Articles
Follows