தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் குறிப்பிட்டுள்ள மதுரை அன்பு செழியன் யார்? என்பது பற்றிய ஒரு பார்வை இதோ…
பைனான்சியர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் மதுரை அன்பு செழியன்.
இன்றைய ஆட்சிப் பொறுப்பில் அதிமுகவின் ஒரு சில முக்கிய அமைச்சர்களுக்கு மிக நெருக்கமானவர். ஒன்றுபட்ட அதிமுகவில் மதுரை நகர் மாவட்டத்தில் பொறுப்பில் இருந்தவர்.
கடந்த தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் மதுரை கிழக்கு, வடக்கு சட்டமன்ற தொகுதியில் சீட் வாங்க கடும் முயற்சி செய்தார். உளவுத் துறை குற்றப் பின்ணனி உள்ளளவர் அன்பு செழியன் என்று இவர் பற்றி கொடுத்த தகவலை ஆய்வு செய்த அன்றைய அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா அன்பு செழியனுக்கு சீட் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை செய்துக் கொண்ட அசோக்குமார் அவர்களும் அன்பு செழியனின் அரசியல் பலம் குறித்து தன் வாக்குமூல கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
Producer GN AnbuChezhiyan background news updates