தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய்சேதுபதியும், அருண்பாண்டியனும் இணைந்து தயாரித்துள்ள படம் ’ஜுங்கா’.
கோகுல் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் சாயிஷா, மடோனா செபாஸ்டியன், சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, சுரேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
வருகிற 27-ம் தேதி ‘ஜுங்கா’ ரிலீஸாகிறது. இதனை முன்னிட்டு ‘ஜுங்கா’ படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது விஜய்சேதுபதி பேசினார். அவர் பேசியதாவது..
‘‘இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு. அவருடைய எண்ண அலைகள் எப்போதும் என்னை வசீகரிக்கும். அதனை என்னால் எளிதில் உட்கொள்ள முடியும். இது தான் ‘ஜுங்கா’வில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம்.
‘தென்மேற்கு பருவகாற்று’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் சரண்யா மேடத்துடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ஒரு கேரக்டரை எப்படி மேம்படுத்தி நடிக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
இந்த படத்தில் சாயிஷா, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். இவர்களில் மடோனாவுக்கு காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும் அவருக்கு வழங்கிய கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார்.
நான் சந்தித்த நடிகைகளில் ஆகச்சிறந்த நடிகை மடோனா! இதற்கு முன் நான் நடிகை காயத்ரியை அப்படி பலமுறை சொல்லியிருக்கிறேன். காயத்ரிக்கு அடுத்து இப்போது மடோனாவை திறமையான நடிகை என்று சொல்கிறேன்!
‘ஆண்டவன் கட்டளை’க்கு பிறகு யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கும் படம் ‘ஜுங்கா’. படப்பிடிப்பு தளத்தில் அந்த நேரத்துக்கு என்ன பஞ்ச் பேசமுடியுமோ அதை பேசி அசத்துவார் ‘யோகி’ பாபு. இதில் நாங்கள் ரசித்து ரசித்து செய்திருக்கிறோம்.’’ என்றார் விஜய்சேதுபதி.