தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லான், பிரபு நடிப்பில் 1996-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘காலபனி’.
தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் ரிலீஸானது.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைத்தார்.
தற்போது 22 வருடங்கள் பிறகு மீண்டும் மூவரும் இணைகின்றனர்.
பிரியதர்ஷனின் கனவுப்படமான ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் தான் இருவரும் இணைந்து நடிக்கப் போகின்றனர்.
16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். பிரிட்டிஷ்காரர்களைத் தீவிரமாக எதிர்த்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தில் பிரபல நடிகர், நடிகைகளை நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
Prabhu reunites with Mohanlal and Priyadarshan after 22 years