’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது!

’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabadathaariநடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும்
அளவுக்கு தரமான படங்களை தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். திரை விமர்சகராக தேசிய விருது
பெற்றதோடு, சினிமாவின் விளம்பர நுணுக்கங்களையும் நன்கு அறிந்த தயாரிப்பாளராக திகழும் தனஞ்செயன்,
‘கொலைகாரன்’ வெற்றியை தொடர்ந்து ‘கபடதாரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

சிபிராஜ், நந்திதா ஸ்வேதா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட
பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, பிரபல கன்னட நடிகை சுமன் ரங்கநாதன் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில்
நடிக்கிறார்.

வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா
பிரச்சினையால் பின்னணி வேலைகள் தொடங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளுக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று (மே
11) ‘கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது. அதன்படி, ’கபடதாரி’ படத்தின் டப்பிங் பணிகள்
பாதுகாப்பு அம்சங்களுடன், இன்று தொடங்கியது. விரைவில் படத்தின் அனைத்து பின்னணி வேலைகளும் நிறைவுப்பெற்று
படம் விரைவில் வெளியாக உள்ளது.

ஹேமந்த் ராவ் இப்படத்தின் கதை எழுத, ஜான் மகேந்திரன் மற்றும் ஜி.தனஞ்செயன் இருவரும் இணைந்து
திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்கள். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ்
மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்.

ராசாமதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தில் விதேஷ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சைமன் கே.கிங்
இசையமைக்கும் இப்படத்திற்கு பிரவீன் கே.எல்.படத்தொகுப்பு செய்கிறார்.

வணிகத் தலைமையை எஸ்.சரவணன் ஏற்க, நிர்வாக தயாரிப்பை என்.சுப்ரமணியன் கவனிக்கிறார். தயாரிப்பு உருவாக்கத்தை
ஜி.தனஞ்செயன் கவனிக்கிறார்.

நிஜ கதாநாயகர்களான காவல் துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி

நிஜ கதாநாயகர்களான காவல் துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sooriகொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.

“கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த வேலையில்,கொரோனா வைரஸ் பரவலிலிருந்து நமது உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளைத் தினந்தோறும் கூறி
மக்களை காப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் காவல் துறையினர்.

தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் நமது உயிர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழி நடத்திய அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள். எங்கள் ஊரில் அய்யனார் சாமி தான் எல்லை சாமி, அது போல் தற்போது காவல் துறையினர் நாம் எல்லோருக்கும் எல்லை சாமி போல் இருந்து நம்மைக் காத்து வருகின்றனர்.

தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல்,24 மணி நேரமும் நமது உயிர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழி நடத்திய அவர்களுக்குகோடி கோடி நன்றிகள். எங்கள் ஊரில் அய்யனார் சாமி தான் எல்லை சாமி, அது போல் காக்கி சட்டை போட்ட எல்லைசாமிபோல் தற்போது காவல் துறையினர் நம்மைக் காத்து வருகின்றனர்.

கடவுளை அன்றாடம் வணங்கும் நாம் அனைவரும், சமீப காலங்களாக காவல் துறையினையறையும் வணங்க ஆரம்பித்து விட்டோம்.

ஆனால் இந்த கொரோனாவை காவல் துறை நண்பர்களையும் விட்டு வைக்கவில்லை. இது வரை 60 காவல் துறையினர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.

சினிமாவில் தான் நாங்கள் கதாநாயகர்கள், ஆனால் நிஜத்தில் காவல் துறையினர், மருத்துவர்கள், தீயனைப்பு வீரர்கள், செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள் ஆகிய நீங்கள் தான் உண்மையான கதாநாயகர்கள். எனவே நிஜ கதாநாயகர்களான இவர்களைச் சந்தித்து நன்றி கூறி, அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கியதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த நாள் என் வாழ் நாளில் மிக முக்கியமான நாளாக நினைக்கிறேன். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு என்றென்றும் எனது மனதில் நிலைத்திருக்கும்.

நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம், நம்மை பாதுகாப்பவர்களுக்கு துணை நிற்போம்” என்று நடிகர் சூரி கூறினார்.

இலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்!

இலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

abi saravananஊரடங்கு எதிரொலியாக வறுமையில் வாடிய இலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு 13 வகையான காய்கறிகளை வழங்கிய நடிகர் அபி சரவணனுக்கு குவியும் பாராட்டு.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை ஆனையூர் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் வறுமையில் வாடுவதாக நடிகர் அபி சரவணனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனை தொடர்ந்து அபி சரவணன் அவருடைய நண்பருடன் இணைந்து முதல்கட்டமாக கடந்த வாரம் 600 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பு உள்ளிட்ட வற்றை வழங்கினார்.

இந்நிலையில் இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு தேவையான 13 வகையான காய்கறிகள் அடங்கிய சிறப்பு தொகுப்பு இன்று வழங்கினார்.

இது மட்டுமல்லாமல் அந்த பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கும் மற்றும் திருநங்கைகளுக்கும் உதவி பொருட்களை நடிகர் அபி சரவணன் வழங்கினார்.

வறுமைப் பிடியில் சிக்கித் தவிக்கும் ஏழை மக்களுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக உதவி பொருட்களை வழங்கிய அபி சரவணனை செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

ஊரடங்கு நேரத்தில் நடைபெற்ற ‘Quarantine Queen’ அழகிப் போட்டி!

ஊரடங்கு நேரத்தில் நடைபெற்ற ‘Quarantine Queen’ அழகிப் போட்டி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Covid-19 கிருமி இப்போது உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் உலகில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் இறுதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் ஒரு அழகிப்போட்டி நடந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின் பற்றி வரும் இந்நிலையில் இது எப்படி சாத்தியம். இப்பொழுது இந்த ஊரடங்கு நேரத்தில் Madras institute of hotel management வழங்கிய ‘Quarantine Queen’ என்னும் அழகிப் போட்டியை FFace Creators நிறுவனம் நடத்தியுள்ளது. இந்த போட்டியின் சிறப்பு என்னவென்றால் இந்தப் போட்டி முற்றிலும் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இந்த அழகிப் போட்டியில் அனைவரும் வீட்டிலிருந்தபடியே கலந்து கொண்டனர்.

Quarantine Queen முற்றிலும் பெண்களுக்கானது. இந்தப்போட்டியில் சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, ஹரியானா, மும்பை என பல்வேறு இடங்களிலிருந்து பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டி ஏப்ரல் மாதம் 22 துவக்கப்பட்டது. இந்த அழகிப்போட்டி பல்வேறு சுற்றுகளை உள்ளடக்கியது.

“தன்னைத்தானே அறிமுகப்படுத்துதல்”(Self introduction)
“கலாச்சார உடை சுற்று” (Traditional)
“பெண்ணுக்குள் ஆண் சுற்று”(Women in Men)
” உடல் பயிற்சி சுற்று”(Workout Shape up)
” நவரசம் சுற்று”(Navarasam)
” திறமை வெளிப்படுத்துதல் சுற்று”(Talent)
” இருதி சுற்று”

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் மே மாதம் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

கோயம்புத்தூரை சேர்ந்த காவியா சௌந்தர்ராஜன் Quarantine Queen பட்டத்தை தட்டிச் சென்றார். அஸ்வினி இரண்டாம் இடத்திலும், கீர்த்தனா கிருஷ்ணன் மூன்றாவது இடத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டிக்கு திரைத்துறை சார்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

F Face Creators இன்னும் இதுபோன்று போட்டிகளை நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

https://drive.google.com/file/d/1_T2aeEsCbv6pS_MLcITkO2g-wfdow638/view?usp=drivesdk

image 01

image 02

image 03

கீர்த்தி சுரேஷ் படத்தை ஆன்லைனில் வெளியிட கார்த்திக் சுப்பராஜ் திட்டம்

கீர்த்தி சுரேஷ் படத்தை ஆன்லைனில் வெளியிட கார்த்திக் சுப்பராஜ் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthik Subbaraj plans to release Keerthy Suresh Penguin in OTT platforms கொரோனா ஊரடங்கால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளது.

திரைத்துறையும் முடங்கியுள்ள நிலையில் சில தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை நேரடியாக OTT தளத்தில் அதாவது ஆன்லைனில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு படம் ரிலீசாகி 100 நாட்கள் ஆன பின்னரே ஆன்லைனில் வெளியிட அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது அடுத்த ஜீன் மாதம் இது வெளியாகலாம் என கூறப்படுகிறது.

ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார். இப்பட பர்ஸ்ட் லுக் வெளியான போது பரபரப்பை ஏற்படுத்தியது.

சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Karthik Subbaraj plans to release Keerthy Suresh Penguin in OTT platforms

திரையுலகில் தீயசக்திகள்..; விஜய்சேதுபதியை கைது செய்ய H ராஜா வலியிறுத்தல்

திரையுலகில் தீயசக்திகள்..; விஜய்சேதுபதியை கைது செய்ய H ராஜா வலியிறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BJP National Secretary H Raja said Vijay Sethupathi should be arrestedநம்ம ஊரு ஹீரோ என்ற தனியார் டிவி நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசினார். அப்போது ஒரு குட்டி கதை சொன்னார்…

“சாமிக்கு அபிஷேகம் செய்வதை காட்டுவார்கள். பின்னர் துணி போட்டு மூடிவிடுவார்கள். அப்போது ஏன் துணி போட்டு மறைத்துவிட்டார்கள் என்று குழந்தை தாத்தாவிடம் கேட்டது.

அதற்கு தாத்தா, குளித்து முடித்த சாமி இப்போது உடைமாற்றப் போகிறது என்றார்.

உடனே அந்தக் குழந்தை என்ன தாத்தா குளித்ததையே காட்டினார்கள். ஆனால் உடை மாற்றுவதை மூடிவிட்டார்கள்” என்று பேசினார் விஜய்சேதுபதி.

இதனையடுத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக விஜய்சேதுபதி மீது பல புகார்கள் கூறப்பட்டன.

காவல் துறையில் இந்து மகா சார்பில் புகாரளிக்கப்பட்டது என்பதையும் நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தன் ட்விட்டரில் விஜய்சேதுபதியை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.

அதில்…. தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் தீயசக்திகளின் எண்ணிக்கை திரையுலகில் அதிகரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்துமத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்திய விஜய் சேதுபதியை மாநில அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.

என பதிவிட்டுள்ளார்.

BJP National Secretary H Raja said Vijay Sethupathi should be arrested

More Articles
Follows