தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்த மாதம் பிப்ரவரி முதல் தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.
இந்த நிலையிலும் விஜய் நடித்த மாஸ்டர் படம் ஓடிடியில் ஓடிக் கொண்டிருப்பதால் தியேட்டர் வசூல் பாதிப்படைந்துள்ளது.
இந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளதாவது..
‘மாஸ்டர்’ பட லைசென்ஸ் பிப்ரவரி 4ம் தேதி வரை மட்டுமே உள்ளது.
ஆகையால் 5ம் தேதி முதல் யாரெல்லாம் படத்தை திரையிட விரும்புகிறீர்களோ அவர்கள் அந்தந்த மாவட்ட விநியோகஸ்தர்களிடம் பேசி புதிய ஒப்பந்தம் போட்டு கொள்ள வேண்டும்.
‘கபடதாரி’ படத்தை 30 நாள் கழித்துத்தான் ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார்.
சின்ன பட்ஜெட் படங்கள் 30 நாட்களுக்கு பிறகும், பெரிய பட்ஜெட் படங்கள் 50 நாட்களுக்கு பிறகு மட்டுமே ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளோம்.
எனவே இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துடன் விரைவில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்”
இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் பேசியிருக்கிறார்.
Theatre owners to discuss with film producers council regarding OTT license