தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘பாரிஜாதம்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண்.
அதன்பின்னர் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிம்பு மற்றும் வரலட்சுமி இணைந்து நடித்த ‘போடா போடி’ படத்திற்கு இசையமைத்தார்.
இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் சிம்பு பற்றி இவர் கூறியுள்ளதாவது-..
“நான் இசையமைத்த என் முதல் படத்திற்கு பிறகு என் பெற்றோர் இறந்துவிட்டனர்.
அப்போது சிலர் உறுதுணையாக நின்றார்கள். அவர்களுக்கு நன்றி.
அதன்பின்னர் சிலர் என்னை விட்டு விலகி சென்றனர்.
ஆனால் இப்போது வரை என்னை கைவிடாமல் சகோதரர் போல இருப்பவர் எஸ்.டி.ஆர். மட்டுமே” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.