தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
ரஜினியை தலைவர் என சொல்லி வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி.
இதோ அவரது ட்வீட்…
Popular across generations, a body of work few can boast of, diverse roles and an endearing personality…that’s Shri @rajinikanth Ji for you.
It is a matter of immense joy that Thalaiva has been conferred with the Dadasaheb Phalke Award. Congratulations to him.
தமிழக முதல்வர் பழனிச்சாமி தன் ட்வீட்டில்..
தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன்.
திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது.
தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
திமுக தலைவர் ஸ்டாலின் தன் ட்வீட்டில்…
இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் @rajinikanth-க்கு, #DadasahebPhalkeAward கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது!
நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்! https://t.co/VFYsXWoAhC
கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து:
“தாதா சாகேப் பால்கே விருதுபெறும் ரஜினிக்கு என் வாழ்த்துக்கள்
அவரது கலைப்பயணத்தின்
முற்றுப்புள்ளி என்று கருதிவிடமுடியாது.
அடுத்த சிகரம் அடைவதற்கான
ஆக்சிஜன் என்று கருத வேண்டும்;
அவர் கருதுவார்…” என வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழருவி மணியன் தன் ட்விட்டரில்…
இந்தியத் திரைத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் திருமிகு. ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள்
– காந்திய மக்கள் இயக்கம்.
பாரதிராஜா தன் வாழ்த்து செய்தியில்…
மூன்று தலைமுறைகளின் முடிசூடா மன்னனாகத் திகழும் எனதருமை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்துக்கு “தாதா சாகேப் பால்கே விருது” கிடைத்தமைக்கு உண்மையிலேயே பெருமை கொள்கிறேன்.
கலைஞன் என்பவன் மக்களை தன் பக்கம் ஈர்க்கும் திறன் கொண்டவனாக இருப்பது முக்கியம்.
எத்தனை கால கட்டங்களைக் கடந்தாலும், தன்னை இன்னமும் உச்ச நாற்காலியில் இருத்தி வைக்க எத்துணை உழைப்பு வேண்டுமோ அத்தனை உழைப்பையும் கொடுத்து மக்களை தன் பக்கமே ஈர்த்து வைத்திருக்கும் இந்திய நாயகன், என் நண்பன், சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்திற்கு ஏற்புடைய விருதாகவே எண்ணி மகிழ்கிறேன்.
திரு. ரஜினிகாந்த் மேலும் எத்தனை உயரம் உண்டோ அத்தனை உயரத்தையும் அடைய அன்பின் வாழ்த்துகள்.
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் சார்பாகவும் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன். இந்திய சினிமாவின் இந்த உயரிய விருதை உரிய நேரத்தில் வழங்கிய மத்திய அரசிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாசத்திற்குரிய இயக்குநர்,
பாரதிராஜா
தலைவர்
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.
PM Modi wishes to Super Star Rajinikanth on #DadasahebPhalkeAward