துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ படத்தின் புதிய அப்டேட்

துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ படத்தின் புதிய அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சீதா ராமம்’ எனும் படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார்.

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.

இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘சீதா ராமம்’ எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்குகிறார்.

இதனை ஸ்வப்னா சினிமா எனும் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணுக்குள்ளே…’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார்.

காதல் உணர்வு ததும்பும் இந்த பாடலில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் ஆகிய இருவரும் காஷ்மீரின் பனி படர்ந்த பிரதேசத்தின் பின்னணியில் பயணித்துக் கொண்டே தங்களின் அன்பை பகிர்ந்து கொள்வது இளம் பார்வையாளர்களை வசீகரித்திருக்கிறது.

துல்கர் சல்மான், ரஷ்மிகா மந்தானா ஆகியோர் நடித்திருப்பதால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘ சீதா ராமம்’ திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

New Update of Dulquer Salmaan’s ‘Seetha Ramam’

முதன்முறையாக விஜய் உடன் இணையும் அருண் விஜய்

முதன்முறையாக விஜய் உடன் இணையும் அருண் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண்விஜய் நடிப்பில் உருவான ‘ஓ மை டாக்’ மற்றும் ‘யானை’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. முதல் படம் குழந்தைகளுக்கான படம்.. இரண்டாவது படம் ஆக்ஷன் பிரியர்களுக்கான படம்.

இவை இரண்டும் வெற்றி அடைந்தது.

தற்போது அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘தமிழ் ராக்கர்ஸ்’ படம் விரைவில் வெளியாகியுள்ளது.

மேலும் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அக்னிச்சிறகுகள், பாக்ஸர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இந்த நிலையில் விரைவில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கிரீடம், தலைவா, சைவம், தெய்வத் திருமகள், தலைவி உட்பட பல படங்களை இயக்கியவர் விஜய்.

அடுத்த மாதம் ஆகஸ்டில் இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்- நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்த்து காத்திருக்கலாம்.

Arun Vijay’s next with director Vijay

மீண்டும் கமலுடன் இணையும் பகத் பாசில்.; ஆனால் இயக்குனர் லோகேஷ் இல்ல!

மீண்டும் கமலுடன் இணையும் பகத் பாசில்.; ஆனால் இயக்குனர் லோகேஷ் இல்ல!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் மாதம் இந்தியாவை கலக்கிய திரைப்படங்களில் ஒன்று என்று சொன்னால் அது ‘விக்ரம்’ படம் தான்.

கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ரிலீசான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனால் தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் என அனைத்து தரப்பினரும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

கடந்த சில மாதங்களில் கேஜிஎப், புஷ்பா, ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

ஆனால் தமிழில் ஒரு பான் இந்தியா படம் வரவில்லையே என்ற ஏக்கம் தமிழக ரசிகர்களிடையே இருந்தது.

ஆனால் விக்ரம் படம் வந்த பிறகு தமிழக ரசிகர்களின் கேள்விகளுக்கு விடையாக அமைந்தது.

‘விக்ரம்’ படத்தின் கிளைமாக்ஸ் இல் அடுத்த பாகத்திற்கான காட்சிகள் இருந்தன.

எனவே விரைவில் மீண்டும் கமல் பகத் ஆகியோர் லோகேஷ் இயக்கத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது உறுதியாகி உள்ளது. ஆனால் இயக்குனர் லோகேஷ் அல்ல. என்ன புரியலையா? சரி விஷயத்துக்கு வருவோம்.

கமலின் புதிய படத்தை மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்குகிறார்.

இவர் கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர்.

மேலும் மலையாளத்தில் டேக் ஆப், சி யூ சீன் போன்ற சூப்பர் ஹிட் படங்களையும் இயக்கி உள்ளார்.

கமலை வைத்து மகேஷ் இயக்கும் புதிய படத்தில் பகத் பாசில் நடிக்கக்கூடும் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முடித்துவிட்டு மகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என்பது தெரிய வந்துள்ளது.

கூடுதல் தகவல்..

நான் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்றால் நானே ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு சென்று அந்த நிறுவனம் சார்பாக படத்தை தயாரிப்பேன். அந்தளவிற்கு கமல் சார் எனக்கு நெருக்கமானவர் என சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார் பகத் பாசில் என்பது குறிப்பிடத்தக்கது.

Fahadh Faasil reunites with Kamal a new movie.

‘திரௌபதி’ இயக்குனருடன் செல்வராகவன்-நட்டி இணைந்த படத்தின் ரிலீஸ் அப்டேட்

‘திரௌபதி’ இயக்குனருடன் செல்வராகவன்-நட்டி இணைந்த படத்தின் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G.

அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்கும் படத்திற்கு ” பகாசூரன்” என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா ஆகியோர் நடித்துள்ளனர்.

கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தமக்கென தனியிடத்தை தக்கவைத்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துவரும் சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ரதாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக் இந்த படத்தின் மூலம் இயக்குனர் மோகன் G யுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 18 ம் தேதி சேலம் முத்துமலை முருகன் கோவிலில் பூஜையுடன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

நேற்று ஜூலை 18 ஆம் தேதியயோடு முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது என்பதை படக்குழுவினர் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.

படத்தின் காட்சிகள் வெகு சிறப்பாக வந்துள்ளதாகவும், இதுவரை யாரும் பயணிக்காத கதைக்களத்தில் கதை இருக்கும். இந்த படம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இயக்குனர் மோகன் G. தெரிவித்துள்ளார்.

படத்தை பற்றியும் இந்த படத்தில் தங்கள் நடித்த அனுபவத்தை பற்றியும், இயக்குநர் மோகன்.Gயை பற்றியும் செல்வராகவன் மற்றும் நட்டி இருவரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர்.

இது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே மேலும் தூண்டியுள்ளது.

படம் செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமட்டுள்ளனர்.

Release update of ‘Draupathi’ directors next film is here

நிலாவுல இருந்திருப்பேன்.; ‘மஹா’ சூட்டிங்ல சிம்பு அடித்த மகா ஜோக்

நிலாவுல இருந்திருப்பேன்.; ‘மஹா’ சூட்டிங்ல சிம்பு அடித்த மகா ஜோக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மஹா.

இது நடிகை ஹன்சிகாவின் 50 வது படமாக உருவாகியுள்ளது.

ஹன்சிகா மற்றும் சிம்புவுடன் ஸ்ரீகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர்களுடன் தம்பிராமையா, கருணாகரன், பேபி மனஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த வாரம் ஜூலை 22, 2002 அன்று உலகெங்கும் வெளியாகவிருக்கும் இந்த “மகா” திரைப்படத்திற்கு லெக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்க, ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பு செய்ய,

‘Etcetera Entertainment’ சார்பாக மதியழகன் மற்றும் ‘மாலிக் ஸ்ட்ரீம்ஸ்’ இனைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் சிம்பு, ‘மாலிக்’ என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘மகா’ படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது.

அதில் வில்லன்களுடன் மோதும் சிம்புவின் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்திற்கான கார் சேசிங் காட்சிகள் எடுக்கும் போது, சிம்பு ஓட்டிச்சென்ற காரின் பிரேக் சரியாக இல்லையாம்.

இதனால் பட குழுவினர் பதறி போய்விட்டார்கள்.

ஆனால் கார் ஓட்டுவதை வாடிக்கையாக கொண்ட சிம்பு, பிரேக் பிடிக்காத காரை லாவகமாக நிறுத்தியுள்ளார்.

இந்த சேசிங் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த படக்குழு & மக்கள் சிம்புவின் சாமர்த்தியத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.

மற்றொரு காட்சியில் பேபி மானஸ்வியை தூக்கிக்கொண்டு படியில் சிம்பு ஓடவேண்டி இருந்ததாம்.

ஆனால் ஏதோ தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த காட்சியில் சிம்பு பலமுறை நடிக்கவேண்டி இருந்துள்ளது.

படப்பிடிப்பு குழுவினரின் சிரமத்தை அறிந்த சிம்பு…

“ஆர்ட் டைரக்டர் படிக்கட்டை வளைத்து போட்டார்.., நேரா போட்டு இருந்தானா இப்ப நான் நிலாவில இருந்திருப்பேன்” என்று கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளார் சிம்பு.

சிம்புவின் இந்த மகா ஜோக்கை கேட்டவர்கள் அனைவரும் சிரித்துள்ளனர்.

A great joke played by Simbu in shooting ‘Maha’

அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு.; ஏன்.?

அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு.; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விளையாட்டு கலை இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.

அந்த வகையில் சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இளையராஜா உள்ளிட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்திருந்தார்.

நேற்று ஜூலை 18 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் டெல்லியில் தொடங்கியது. அப்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பதவி ஏற்க அழைக்கப்பட்டனர்.

அப்போது, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு இளையராஜாவை அழைத்தார். அனைவரும் கைத்தட்டி வரவேற்றாலும் இளையராஜா வரவில்லை.

ஏனென்றால் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்து இருந்தார் இறளையராஜா.

எனவே அவரால் பதவி ஏற்பு விழாவில் கலந்துக் கொள்ள முடியவில்லை. விரைவில் அவர் மாநிலங்களவை சென்று பதவி ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை இளையராஜா அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் அவர் சென்னை வந்தடைந்தார்.

எம்பி என அறிவிக்கப்பட்ட பின்னர் தற்போதுதான் முதன்முறையாக அவர் தமிழகத்திற்கு வருகிறார்.

எனவே அவருக்கு இசையமைப்பாளர்கள் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் பாஜகவை சேர்ந்த பல அரசியல் பிரபலங்களும் இந்த வரவேற்பு விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic welcome to Ilayaraja who came from America to Chennai.; Why?

More Articles
Follows