தினம் தினம் தற்கொலை..; ஆன்லைன் மோசடிகளை RAT மூலம் சொல்லும் ஆம்ரோ சினிமாஸ்

தினம் தினம் தற்கொலை..; ஆன்லைன் மோசடிகளை RAT மூலம் சொல்லும் ஆம்ரோ சினிமாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல துறைகளில் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆம்ரோ கிங்ஸ் நிறுவனம் முதன்முதலாக சினிமாத் துறையில் ஆம்ரோ சினிமா என்ற பெயரில் கால் தடம் பதிக்கிறது.

அதன் முதல் படைப்பாக டிஜிட்டல் கந்துவட்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக, பெரும் பொருட்செலவில் “RAT” என்கிற படம் உருவாகிறது.

விஞ்ஞான உலகத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல நன்மைகள் நடந்தாலும், சில தீமைகளும் அன்றாடம் நடந்தே வருகின்றன.

தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு மக்களை மூளைச்சலவை செய்து அவர்களை ஏமாற்றும் நபர்களும் அதிகமாக வளர்ந்து வருகிறார்கள். அப்படி ஏமாற்றப்பட்டவர்கள் அவமானத்தால் தற்கொலைக்குத் தூண்டப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தினமும் செய்திகளைக் கவனித்தாலே போதும் – எப்படியும் ஒவ்வொரு நாளும் ஓரிரண்டு நபர்களாவது இப்படிப் பாதிக்கப்பட்டுக் தற்கொலை செய்துகொள்வது தெரியவரும்.

இது உண்மையில் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகவே மாறிவருகிறது.

இப்படிப்பட்ட ஆன்லைன் மோசடியான டிஜிட்டல் கந்து வட்டி மூலம் மூன்று பெண்களுக்கு ஒரு பெரிய துரோகம் நடக்கிறது. அந்தத் துரோகம் அவர்களை எப்படிப் பாதிக்கிறது? அதன்பின் அவர்களுக்கு என்ன ஆனது? அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா ? இல்லையா? என்பதை விரிவாகச் சொல்லும் கதைதான் RAT.

ஆம்ரோ சினிமா நிறுவனம் முதல் படைப்பாக ஸ்ரீ பா.ராஜராஜன் வழங்கி அதை திருமதி முத்துலெட்சுமி ராஜராஜன் அவர்கள் தயாரிக்கிறார்.

இதை இயக்குபவர் அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக ரேஷ்மா வெங்கட் நடிக்கிறார். இவர் சசிகுமார் , அட்டகத்தி தினேஷ் நாயகியாக நெட்பிளிக்ஸ்காக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மற்றும் சாயா தேவி நடிக்கிறார். சாயா தேவி போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த கன்னிமாடம் படத்தின் நாயகி . இவர்களைத் தவிர கன்னிகா ரவி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சில பிரபல நடிகர் நடிகைகளும் நடிக்கின்றனர் .

படத்திற்கு ஒளிப்பதிவு சீனிவாஸ் தேவாம்சம் .இவர் பி.சி ஸ்ரீராம் பாசறையில் இருந்து வந்தவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் தொடர்ந்து பணிபுரிந்து வருபவர்.

வசனம் கருந்தேள் ராஜேஷ். இவர் திரைப்படத்துறை சார்ந்து பல நூல்களை எழுதியவர். இன்று நேற்று நாளை, அயலான், சூது கவ்வும் முதலிய பல வெற்றிகரமான திரைப்படங்களில் திரைக்கதையில் பணிபுரிந்தவர்.

இசை அஸ்வின் ஹேம்நாத். இவர் ‘ஆற்றல் ‘படத்தின் இசையமைப்பாளர். இப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுதுகிறார..

படத்தொகுப்பு இக்னேசியஸ் அஸ்வின். இவர் ‘கடைசீலபிரியாணி ‘ ,’ பீட்ஸா 3′ திரைப்படங்களின் படத்தொகுப்பாளர். . கலை இயக்கம் முஜிபுர் ரஹ்மான் . இவர் ‘உடன்பிறப்பே’ படத்திற்குக் கலை இயக்கம் செய்தவர். இணை தயாரிப்பாளர் நேரு தாஸ், நிர்வாக தயாரிப்பு கார்த்திக்

‘RAT’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் சென்னையின் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

New tamil movie RAT talks about digital frauds

திரையுலகில் இதுவே முதன்முறை… அதுவே எனக்கான ஆசீர்வாதம்.; ஆனந்தத்தில் அருண்விஜய்

திரையுலகில் இதுவே முதன்முறை… அதுவே எனக்கான ஆசீர்வாதம்.; ஆனந்தத்தில் அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஓ மை டாக்’ படத்தில் முதன்முறையாக தந்தை மற்றும் மகனுடன் இணைந்து பணியாற்றியதை ஆசீர்வாதமாக நினைத்து பெருமைப்படுகிறேன்” என நடிகர் அருண்விஜய் தெரிவித்திருக்கிறார்.

பிரைம் விடியோவில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஓ மை டாக்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

இந்த திரைப்படம் கோடை பருவத்தில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று வெளியாகிறது. ஒரு நாய் குட்டிக்கும், குழந்தைக்கும் இடையேயான நல்லதொரு புரிதலை அடிப்படையாகக்கொண்ட ஃபீல் குட் கதையாக தயாராகி இருக்கிறது.

இதனை அறிமுக இயக்குநர் சரோவ் சண்முகம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் திரைப்படத்துறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை ஒன்றிணைத்திருக்கிறது.

மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் அர்னவ் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் மூலம் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார். தாத்தா, தந்தை மற்றும் மகன் என்ற நிஜமான உறவை இவர்கள் திரையிலும் சித்தரித்திருக்கிறார்கள்.

விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஓ மை டாக்’ படத்தில் முதன்முறையாக நடிகர் அருண்விஜய், அவரது தந்தை மற்றும் மகனுடன் திரையில் இணைந்து தோன்றியிருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது,’…

“இது ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம். தமிழ் திரை உலகில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதன்முறை. நான் கடந்த காலத்தில் என் அப்பாவுடன் பணியாற்றி இருக்கிறேன்.

ஆனால் இது வித்தியாசமானது. தனது அப்பா மற்றும் தாத்தாவுடன் அறிமுகமாவது அர்னவவ்விற்கு இது மிகவும் சிறப்பு வாய்ந்த அனுபவமாக இருக்கும். இது எங்களால் மறக்க இயலாத ஒன்று.” என்றார்.

படப்பிடிப்பு அனுபவம் குறித்து பேசுகையில்,…

” மிகவும் அருமையாக இருந்தது. ஏனெனில் என் அப்பாவும் நானும் பிசியாக இருப்பதால் நாங்கள் ஒன்றிணைந்து உபயோகமாக நேரத்தை செலவிடுவது அரிது.

மேலும் நான் வீட்டில் இருக்கும் நேரத்தில் அர்னவ் உறங்கிக் கொண்டிருப்பான். எங்கள் மூவரையும் ஒன்றிணைத்ததற்காக இயக்குநர் சரோவ் சண்முகத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

ஊட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது என் தந்தை மற்றும் அர்னவ் ஆகியோருடன் செலவழித்த தருணங்கள் அனைத்தும் அழகானவை.

அந்த நினைவுகள் அனைத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன். என் அப்பாவிற்கும், அர்னவ்விற்கும் இடையே உள்ள தனித்துவமான பந்தத்தை நானும் கண்டேன். தாத்தாக்கள் தங்கள் பேரக் குழந்தைகளுடன் மிகவும் மென்மையாக நடந்து கொள்கிறார்கள்.

என் அப்பாவிடம் எனக்கு இல்லாத சுதந்திரம் அர்னவுக்கு இருந்தது. அவர்கள் மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள். ” என்றார்.

ஒவ்வொரு குழந்தைகளும் மற்றும் செல்லப்பிராணியை விரும்பும் மக்களும் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம் ‘ஓ மை டாக்’.

அர்ஜுன் மற்றும் அவரது செல்ல நாய் குட்டியான சிம்பா, இவர்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொள்ளும் அன்பு மற்றும் பாசம் பார்வையாளர்களின் இதயத்தை வருடும். அர்ஜுன் சிம்பாவை சந்திக்கிறார். அவர் சிம்பாவை காப்பாற்றுகிறார். பின்னர் சிம்பாவை தனது சொந்தம் என வளர்க்கிறார். அர்ஜுனும் சிம்பாவும் தடைகளை கடந்து சென்று, இறுதியில் அவர்களை சுற்றியுள்ள அனைவரும் இதயங்களுக்குள் சென்று தங்களின் வழியை கண்டறிகிறார்கள்.

‘ஓ மை டாக்: படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்துள்ளனர். இணை தயாரிப்பாளராக ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் பணியாற்றியிருக்கிறார்.

இவர்களுடன் ஆர் பி டாக்கீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் ரமேஷ் பாபுவும் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்திருக்கிறார்.

இந்த கோடை விடுமுறையில் ‘ஓ மை டாக்’ படத்தை பார்க்க தவறாதீர்கள்.

குடும்ப பொழுதுபோக்கு படங்களை பிரத்யேகமாக உலகளவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரைம் விடியோ இந்திய முழுவதும் மற்றும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று வெளியிடுகிறது.

Arun Vijay reacts to coming together with his father and son in Amazon Original Movie ‘Oh My Dog’

டாணாக்காரனுக்கு டன் கணக்கில் பாராட்டுக்களை வழங்கிய ரஜினிகாந்த்

டாணாக்காரனுக்கு டன் கணக்கில் பாராட்டுக்களை வழங்கிய ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெய்பீம்’ படத்தில் போலீசாக மிரட்டிய வில்லன் நடிகர் தமிழ் என்பவர் இயக்கிய படம் ‘டாணாக்காரன்’. இது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் கடந்த வாரம் வெளியானது.

இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். இவர்களுடன் லால், பாவல்நவகீதன், மதுசூதனன், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க எஸ்.ஆர் .பிரபு தயாரித்து இருந்தார்.

இந்த படம் முழுக்க முழுக்க காவலர் பயிற்சிப் பள்ளி நடக்கும் அவலங்களை காட்டியது.

காவலர் பயிற்சி பெறுபவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை அசலாக காட்டியிருந்தார் இயக்குனர் தமிழ்.

படத்தை பார்த்த விமர்சகர்கள் (FILMISTREET உட்பட) ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பாராட்டி இருந்தனர்.

இந்த நிலையில், டாணாக்காரன் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு செல்போனில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதனை விக்ரம் பிரபுவே உறுதிப்படுத்தி ட்வீட் செய்துள்ளார்.

” சூப்பர் ஸ்டார் அவர்களே அழைத்து என்னைப் பாராட்டியுள்ளார். நம் கனவை விடாப்பிடியாகப் பின்பற்றுவது வாழ்க்கையில் இதுபோன்ற அற்புதமான நிகழ்வுகளை உருவாக்கும் என்பது உண்மை.

மேலும் டாணாக்காரன் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார் விக்ரம் பிரபு.

Super Star wishes to Taanakkaran team

ஆணுறை விளம்பரத்தில் நடித்த சிம்பு – உதயநிதி பட நடிகை

ஆணுறை விளம்பரத்தில் நடித்த சிம்பு – உதயநிதி பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலம்பரசன் உடன் ‘ஈஸ்வரன்’ மற்றும் ஜெயம் ரவி உடன் ‘பூமி’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால்.

இந்த இரு படங்களும் 2021ல் பொங்கல் தினத்தில் வெளியானது. இதன் மூலம் ஒரே சமயத்தில் தமிழில் ஒரே நாளில் இரண்டு படங்களில் அறிமுகமானார்.

தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்

பிராந்தி விளம்பர சர்ச்சை..; சரக்கடிக்கும் சிம்பு-உதயநிதி பட நடிகை

மேலும் தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் நிதி.

இந்த நிலையில் தற்போது ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

இதுபற்றிய பிரமோஷன் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலவிதமான பலான கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

Simbu and Udhay film heroine to feature in condom ad

தமிழன்னையை கொச்சைப்படுத்திய ஏஆர்.ரஹ்மான் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

தமிழன்னையை கொச்சைப்படுத்திய ஏஆர்.ரஹ்மான் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன்பு “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசனின் பாடலை குறிப்பிட்டு, ‛ழ’ கரத்துடன் போட்டோவை பதிவிட்டு, தமிழணங்கு என பதிவிட்டார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்த நிலையில் ‘தமிழணங்கு’ டிசைன் குறித்து ரஹ்மான் குறித்து ஒருவர் வழக்கு போட்டுள்ளார்.

அதில்…

சென்னையில் வசிப்பவர் முத்து ரமேஷ். அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி நிர்வாகியான இவர், ‘ஆன்லைன்’ வாயிலாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பி இருக்கிறார்.

இந்த புகாரில்…

“உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழன்னைக்கு கோவில் கட்டி, சிலை அமைத்து தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தமிழறிஞர்கள் பலர், தமிழன்னை படங்களை அழகாக, தெய்வமாக வெளியிட்டுள்ளனர்.

அவற்றில், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேலை, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, வளையாபதி போன்ற நுால்கள், தமிழன்னையின் கரங்களில் செங்கோல்களாய் காட்சி அளிக்கின்றன.

ஆனால், இசையமைப்பாளர் ரஹ்மான், தலைவிரி கோலத்துடன் இருப்பது போன்ற படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இது, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயல்.

தமிழர்கள் தெய்வமாக வழிபடும், தமிழன்னையின் கொச்சையான படத்தை வெளியிட்ட இசையமைப்பாளர் ரஹ்மான் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Case filed against AR Rahman over Tamizhannai post issue

சினிமா & டிவி நிகழ்ச்சிக்கு முழுக்கு போடும் அமைச்சர் (நடிகை) ரோஜா.; ஏன்.?

சினிமா & டிவி நிகழ்ச்சிக்கு முழுக்கு போடும் அமைச்சர் (நடிகை) ரோஜா.; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மொத்த அமைச்சரவையும் மாற்றப்படும் என்று அறிவித்திருந்தது.

அதன்படி, அமைச்சரவை மாற்றப்பட்டது. 25 அமைச்சர்களில், முன்னரே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 11 அமைச்சர்களும், புதியதாக நியமிக்கப்பட்ட 14 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அப்படிப் புதிதாக நியமிக்கப்பட்ட 14 அமைச்சர்களில் நடிகை ரோஜாவும் இடம்பெற்றார்.

இந்த நிலையில் அமைச்சர் ரோஜா கூறியதாவது:

திரைப்படத்துறையில் இருந்து நான் அரசியலுக்கு வர ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் போன்றவர்கள் உத்வேகமாக இருந்தனர்.

முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தபோது சந்திரபாபு நாயுடு வெற்றிக்காக ‘நக்சல்’கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளிலும் உயிரை பணயம் வைத்து பிரசாரம் மேற்கொண்டேன்.

ஆனால் அவரோ அதை கருத்தில் கொள்ளாமல் என்னை வெளியேற்றுவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டார்.

சட்டசபைக்குள் நுழையும் வாய்ப்பை சந்திரபாபு நாயுடு வழங்கவில்லை.

பின், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கிய வாய்ப்பால் நகரி தொகுதியில் இரு முறை வெற்றி பெற்றேன்.

இப்போது அமைச்சராகும் வாய்ப்பை ஜெகன்மோகன் ரெட்டி வழங்கி உள்ளார்.

எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், வருமானத்திற்காக திரைப்படங்களில் நடித்ததுடன், ‘டிவி’ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றேன்.

இதையும் சிலர் விமர்சித்தனர். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி எதுவும் கேட்டதில்லை.

தற்போது அமைச்சராகி உள்ளதால் பொறுப்புகள் அதிகரித்து உள்ளன. எனவே, இனி திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடிக்க மாட்டேன்.

இவ்வாறு ரோஜா கூறினார்.

Actress Roja to quit TV and Movie industry ?

More Articles
Follows