தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரதீப் நாயகனாக நடித்து இயக்கிய ‘லவ் டுடே’ படம் மெகா ஹிட்டானது. ரசிகர்கள் முதல் திரையிலகினர் வரை படக்குழுவை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா பற்றி பிரதீப் தவறாக ஒரு பதிவிட்டதாக பதிவு வைரலானது.
இத்துடன் பல வருடங்களுக்கு முன் பிரதீப் சில பிரபலங்கள் பற்றி போட்ட பேஸ்புக் பதிவுகளை வைத்து அவரை சமூக வலைத்தளங்களில் ‘டிரோல்’ செய்து வந்தனர்.
எனவே தன்னுடைய பேஸ்புக் பக்கத்தையே நீக்கிவிட்டார் பிரதீப் ரங்கநாதன்.
இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில்…
“இணையத்தில் சுற்றி வரும் பதிவுகள் போட்டோஷாப் எடிட்டிங் செய்யப்பட்டவை.
பதிவுகளில் ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் என்னுடைய பேஸ்புக் பக்கத்தை டிஆக்டிவேட் செய்துட்டேன்.
மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
என்னுடைய சில பதிவுகள் உண்மையானவைதான். ஆனால், கடுமையான வார்த்தைகள் கொண்டவை போலியானவை.
ஒரு கட்டத்தில் நானும் தவறு செய்துள்ளேன். வயதுக்கு ஏற்ப நாமும் மாறுவோம், கற்றுக் கொள்வோம்,
இப்போது ஒவ்வொரு நாளும் சிறந்த மனிதனாக முயற்சி செய்கிறேன்,” என விளக்கம் கொடுத்துள்ளார் இந்த உத்தம பிரதீப்.