ரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் ஆடும் அசோக்செல்வன் சாந்தனு கீர்த்தி திவ்யா

ரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் ஆடும் அசோக்செல்வன் சாந்தனு கீர்த்தி திவ்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும்
படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட இந்தபடத்தில்
அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

O2 , தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

அரக்கோணம் சுற்றுவட்டாரபகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. தமிழகத்தின் நகரங்கள் , ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும் , நட்பு , கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும் படியான கதையமைப்பில் உருவாக்கி இன்று முதல் படப்பிடிப்பை துங்குகிறார்கள்.

திரைக்கதை வசனம், – தமிழ்பிரபா மற்றும் ஜெய்குமார்..

இயக்கம் – ஜெய்குமார்.

தயாரிப்பு-
லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி,
நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித்.

கலை – ரகு
எடிட்டிங் – செல்வா RK
உடைகள்- ஏகாம்பரம் .
ஸ்டில்ஸ் – ராஜா

பி ஆர் ஓ – குணா

ரஞ்சித்

Neelam Productions Ranjith presents new movie based on cricket

நடிகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் கைது.; பிடிப்பட்டது எப்படி.?

நடிகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் கைது.; பிடிப்பட்டது எப்படி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீரங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டை பயிற்சியாளரும் நடிருமான கனல் கண்ணன் பங்கேற்றார்.

அவர் பேசும்போது.. “கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்’ என்று பேசியிருந்தார் கனல் கண்ணன்.

அவர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று புகார்கள் போலீசில் வந்தன.

மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலர் குமரன் புகார் அளித்தார்.

எனவே இரு பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனால் தலைமறைவான கனல் கண்ணனை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் தங்கியிருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வரவே அங்கு விரைந்து சென்ற போலீசார் கனல் கண்ணனை கைது செய்தனர்.

இந்து முன்னணி நிர்வாகியும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனுக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்றக் காவல் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.

Periyar remark Actor Stunt director Kanal Kannan arrested

தேசிய கொடி ஏற்றிய சூரி.; அடுத்த சர்ச்சையில் சிக்கினார்.. நெட்டிசன்கள் விளாசல்

தேசிய கொடி ஏற்றிய சூரி.; அடுத்த சர்ச்சையில் சிக்கினார்.. நெட்டிசன்கள் விளாசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் ‘விருமன்’ பட இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடித்திருந்த சூரி அந்த விழா மேடையில் பேசும்போது… ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட பள்ளிக்கூடங்கள் கட்டலாம் என நடிகர் சூர்யாவின் கல்வி சேவையை பாராட்டி பேசி இருந்தார்.

இது இந்துக்களிடையே சில பிரிவினர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எப்போதும் கோயில்களை கூறி வைத்தே சிலர் பேசி வருகின்றனர். ஆனால் மசூதி & சர்ச்சைகளைப் பற்றி யாரும் பேசுவது இல்லை என கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து மற்றொரு பிரஸ்மீட்டில் அதற்கு மன்னிப்பு கேட்டார் சூரி.

நான் இந்து கடவுளை வணங்குபவன் என பேசி இருந்தார்.

இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பாரத பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் விஜய் ஆகியோரது வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூரி தன் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றி உள்ளார். ஆனால் அது இப்போது சர்ச்சையாகி உள்ளது.

வீடுகளை துடைக்கும் மாப்பிள் இருக்கும் கம்பை கழற்றி அதில் தேசியக் கொடியை ஏற்றி இருக்கிறார்.

இந்திய தேசியக்கொடி ஏற்றிய புகைப்படத்தை நடிகர் சூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீட்டை சுத்தம் செய்யும் குச்சியில் தேசிய கொடியை கட்டுவது தேசியக்கொடியை அவமதிப்பதாகும் என நெட்டிசன்கள் சூரியை விளாசி வருகின்றனர்.

தற்போது அடுத்த சர்ச்சையில் சிக்கி விட்டார் சூரி.

Actor Soori hoists National flag at home made controversy

இணைவதற்கு முன்பே முட்டி மோதும் நடிகர் விக்ரம் & இயக்குனர் ரஞ்சித்

இணைவதற்கு முன்பே முட்டி மோதும் நடிகர் விக்ரம் & இயக்குனர் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சீயான் விக்ரம் & இயக்குனர் ரஞ்சித் இணைகின்றனர்.

எனவே இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் இந்த கூட்டணிக்கு முன்பே இவர்களின் 2 படங்கள் ஒரே நாளில் ரிலீசாகி மோதவுள்ளன.

அதுபற்றிய விவரம் வருமாறு…

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘கோப்ரா’.

இந்த படத்தில் மதியழகன், கோப்ரா, பிளாக் ஹோப்ரா உள்ளிட்ட வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கிறாராம் விகரம்.

கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்க பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைகின்றனர்.

இவர்களுடன் மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, பத்மபிரியா, முகமது அலி பெய்க், கனிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக கே எஸ் எஸ் லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகிறது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதுபோல…

பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமன் நடித்துள்ள படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

இந்தப் படத்தில் நாயகியாக துஷாரா விஜயன், ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர், கலையரசன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

கிஷோர் குமார் ஒளிப்பதிவில் டென்மா இசையமைத்துள்ளார். இப்படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படமும் ஆகஸ்ட் 31-ம் தேதியான விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ‘பிசாசு 2’ படமும் இதே ஆகஸ்ட் 31ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Vikram and Director Ranjith Clash

‘தடை உடை’-க்க வரும் பாபி சிம்ஹா.; ரோகிணிக்கு கேக் வெட்டிய படக்குழு

‘தடை உடை’-க்க வரும் பாபி சிம்ஹா.; ரோகிணிக்கு கேக் வெட்டிய படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் பாபி சிம்ஹாவின் புதிய திரைப்படமான ‘தடை உடை’ எனும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவிருக்கும் சூழலில், இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ரோகிணி, தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘தடை உடை’.

இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நரங்க் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நடிகர் பிரபு, செந்தில், நடிகை ரோகிணி, மணிகண்ட பிரபு, சரத் ரவி, ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹதீஃப் இசையமைத்திருக்கிறார்.

ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முழுமையாக நிறைவு பெறவிருக்கிறது.

இந்நிலையில் நடிகை ரோகிணி தொடர்புடைய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு, படக் குழுவினர் நடிகை ரோகிணியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

 தடை உடை

Bobby Simha in next movie Thadai Udai

அப்போ கீர்த்தி.. இப்போ அதிதி.. எப்பவுமே காமெடியன்தான்.; எனக்கு ‘விருமன்’ டிக்கெட் கிடைக்கல – சூரி

அப்போ கீர்த்தி.. இப்போ அதிதி.. எப்பவுமே காமெடியன்தான்.; எனக்கு ‘விருமன்’ டிக்கெட் கிடைக்கல – சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆகஸ்ட் 15, 2022, இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக கொடியேற்றி உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் சார்பாக கொடி ஏற்றி விழாவை சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சூரி-க்கு சங்கம் சார்பாக பொன்னாடை போற்றி நினைவு பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

நடிகர் சூரி பேசுகையில்,

“அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இந்த நாளில் என்னை விழாவிற்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக தலைவி கவிதா அழைத்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

நாம் இந்த நிமிடம் இந்த நொடி கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் சாதாரணமாக கிடைத்தது அல்ல.
இதற்கு பின்னால் பலரது உழைப்பும் தியாகமும் அடங்கி இருக்கிறது. எப்படி ஊரில் எல்லையில் இருக்கும் எல்லைச்சாமி நம்மை பாதுகாக்கிறதோ அதைப்போல நாட்டின் எல்லையில் இன்றளவும் நம்மை பாதுகாக்க உயிரைக் கொடுத்து போராடிக் கொண்டிருக்கின்றனர் ராணுவ வீரர்கள்.

சமீபத்தில் கூட எனது அருமை தம்பி மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் தற்கொலை படை மூலம் தனது இன்னுயிர் கொடுத்துள்ளார். அவரது தியாகம் சாதாரண தியாகம் அல்ல அவரது குடும்பத்தாருக்கும் அவரது அப்பா அம்மாவிற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் நீங்கள் வானுயர தலை நிமிர்ந்து நடக்கக் கூடிய அளவிற்கு அருமையான புதல்வனை பெற்றெடுத்துள்ளீர்கள்.

உருக்கமாக தொடர்ந்து பேசிய சூரி தனது அடுத்த படம் மற்றும் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் விருமன் குறித்தும் ஒரு சில வார்த்தைகள் பேசினார்.

எனக்கும் என் குடும்பத்தாருக்குமே விருமன் படத்திற்கு டிக்கெட் இருக்கின்றனவா என கேட்டேன் அதற்கு இல்லை என திரை அரங்கில் இருந்து பதில் வந்தது, எனில் இதைவிட ஒரு படத்திற்கு ஆரோக்கியம் என்ன இருக்க முடியும். அந்த அளவிற்கு அமோக வெற்றி படத்திற்கு கிடைத்திருக்கிறது.

தொடர்ந்து விடுதலை படம் குறித்து பத்திரிகையாளர்கள் சார்பாக கேள்விகள் கேட்கப்பட்டபோது பதிலளித்தார் சூரி.

ஒரு காமெடி நடிகனாக இருந்து இப்போது இந்த நிலைவரை வந்து இருக்கிறேன் எனில் அதற்கு என்னுடன் பயணித்த அத்தனை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தான் காரணம். முதன்முதலில் விடுதலை படத்தின் கதையை என்னிடம் வெற்றிமாறன் சார் சொல்லும்பொழுது இந்த கேரக்டரில் நிறைய சீன்கள் உள்ளன எப்படி இன்னும் இந்த கேரக்டரை வாங்கிவிடலாம் அல்லது அந்த கேரக்டர் நன்றாக இருக்கிறது என ஒவ்வொரு கேரக்டராக என் மனதுக்குள் யோசித்துக் கொண்டிருக்கையில் வெற்றிமாறன் சார் ‘நீங்க தான் மெயின் லீட் ‘ என்றார். அவர் கண் முன்பு என்னால் காட்டிக் கொள்ள முடியவில்லை.

என்னை வெளியே விட்டிருந்தால் வானத்தில் பறந்திருப்பேன். சாதாரண காமெடியனாக இருந்தவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் என்று கூறிய சூரி தான் கடந்து வந்த பாதை மூலம் தான் கற்றுக் கொண்ட அனுபவம் என்ன என்று மேலும் தொடர்ந்தார்.

எந்தத் துறை ஆனாலும் சரி முதலில் தன்னை தயார் செய்து கொள் உன் உடலை உன் ஆரோக்கியத்தை நீ முதலில் விரும்பு உன்னை நேசி அதைத்தான் என் அனுபவம் மூலம் கற்றுக் கொண்டேன். நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை அத்தனை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என்னை நம்பி எனக்காக கொடுத்த வாய்ப்பு. மேலும் காமெடியனாக இருந்து சொல்ல வேண்டிய கருத்துக்கள் விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன என்னதான் நான் மெயின் கேரக்டராக நடித்தாலும் அதையும் நான் ஹீரோவாக பார்க்கவில்லை படத்தின் கேரக்டர் ஆக மட்டுமே பார்க்கிறேன்.

காமெடியன் சூரி என்பதே எனது அடையாளம் அதை எக்காலத்திலும் விடமாட்டேன். அதேபோல் எனது கேரக்டர் இப்படி மாறிவிட்டது நான் இத்தனை பேருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன் என சம்பளத்திலும் நான் எப்போதும் தீர்மானம் செய்ய மாட்டேன். அவர்கள் பார்த்து எனக்கு இப்போது வரை என்ன நியமித்தார்களோ என்ன கொடுக்கிறார்களோ அதைக் கொண்டுதான் என்னுடைய வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கிறது. அவர்கள் கொடுக்கும் சம்பளம் அளவிற்கு என்னை நான் எப்படி தயார் செய்து கொள்ள முடியும் அதற்கு தகுதியானவனாக எப்படி மாற்றிக் கொள்ள முடியும் என்பதை மட்டுமே யோசிப்பேன். என்றவர்

மேலும் விருமன் படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த அதிதி சங்கர் குறித்தும் சில வார்த்தைகள் பேசினார்.

தங்கை கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் அதிகமாக பிடிக்கும் . மற்ற ஹீரோயின்களையும் பிடிக்கும். தற்போது விருமன் பட நாயகி அதிதி. அவரது பெயரை சரியாக உச்சரிக்கவே பலவிதமாக பயிற்சி எடுத்துக் கொண்டேன்.

ஒரு கூட்டத்திற்குள் நுழைந்தால் இருக்கும் அத்தனை பேரின் பெயர்களையும் மிகச் சரியாக மனதில் ஏற்றி விடும் அளவிற்கு திறமையானவர் . கேரக்டரை உள்வாங்கி நடிப்பதில் திறமைசாலி. நிச்சயம் அதிதி சங்கருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. மிகப்பெரிய நடிகையாகும் அத்தனை வாய்ப்புகளும் உள்ளன.

ஒரு நாளில் 30 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு ஒதுக்குங்கள் 30 சதவீதம் உடற்பயிற்சி எனில் 70 சதவீதம் நாம் உண்ணும் உணவுதான். எதை சாப்பிட்டாலும் அளவாக சரியான நேரத்தில் சாப்பிட கற்றுக் கொள்ளுங்கள். மிக்ஸி போல மேல மேல அரைக்காதீர்கள் என அழுத்தமாகவே உடல் ஆரோக்கியம் குறித்து பேசினார்.

சூரி பேசி முடிக்க அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி விழா இனிதே நிறைவடைந்தது..

Actor Soori talks about Keerthy Suresh and Aditi Shankar

More Articles
Follows