JUST IN ரஜினிகாந்தை சந்தித்த நாசர் கார்த்தி பூச்சி முருகன்.; விஷயம் இதுதானா.?

JUST IN ரஜினிகாந்தை சந்தித்த நாசர் கார்த்தி பூச்சி முருகன்.; விஷயம் இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஜூன் 2ஆம் தேதி… சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சென்றனர்.

அப்போது அவர்களை வரவேற்ற ரஜினிகாந்த் அவர்களுடன் 45 நிமிடங்கள் பேசினார்.

இந்த சந்திப்பில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி ஆகியோர் இருந்தனர்.

இந்த சந்திப்பு, சுமார் 55 நிமிடங்கள் வரை நீடித்தது.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் சங்கத் தலைவர் நாசர்.

நடிகர் சங்கம் சார்பாக மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.

நடிகர் சங்கத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை ரஜினிகாந்த் வழங்கியதாக தெரிவித்தார் நாசர்.

சில வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய நடிகர் சங்க பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்ற ரஜினிகாந்த் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nasser Karthi Poochi Murugan meets Rajinikanth

ஹரீஷ் கல்யாணின் புதிய படத்தை இயக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ பிரபலம்

ஹரீஷ் கல்யாணின் புதிய படத்தை இயக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் இளம் நாயகர்களில் ஒருவர் ஹரீஷ் கல்யாண்.

இவர் இளம் ரசிகைகளின் சாக்லேட் பாயாக வலம் வருகிறார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தில் அமலா பாலுடன் நடித்திருந்தார்.

மேலும் இவரது நடிப்பில் பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்கள் வந்துள்ளன.

ஹரீஸ் நடிப்பில் ஸ்டார், நூறு கோடி வானவில் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் ஹரீஷ் கல்யாணின் புதிய படத்தை தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘கனா’ படத்தில் உதவி இயக்குனராகவும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் வசனகர்தாவும் பணி புரிந்தவர் தமிழரசன் பச்சமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

நெஞ்சுக்கு நீதி விமர்சனம் 3.5/5.. உஷாரான உதயநிதி

இந்த இரு படங்களும் பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது இந்த புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது.

Harish Kalyan’s next with Nenjukku Needhi dialogue writer

‘யங் மேஸ்ட்ரோ’ ஆனார் யுவன்.; மிரட்டும் எஸ்ஜே சூர்யாவின் ‘பொம்மை’ பட ட்ரைலர்

‘யங் மேஸ்ட்ரோ’ ஆனார் யுவன்.; மிரட்டும் எஸ்ஜே சூர்யாவின் ‘பொம்மை’ பட ட்ரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பொம்மை’.

மான்ஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் இதில் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர் எஸ்.ஜே.சூர்யா & ப்ரியா பவானி சங்கர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது இந்த படம்.

இப்படத்தின் பணிகள் கொரோனா காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தன.

தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

‘உலகத்தில் மிகவும் விசித்தரமானது மனிதனின் மூளை’ என தொடங்கும் வசனத்துடன் ட்ரைய்லர் ஆரம்பிக்கிறது.

இந்த ட்ரெய்லரில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பெயருக்கு முன்பாக ‘யங் மேஸ்ட்ரோ’ என அடைமொழி போடப்பட்டுள்ளது

இந்தப் படம் காதல் கலந்த ரொமாண்டிக் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு சிறப்பான புது அனுபவத்தை தரும் என நம்பலாம்.

“பொம்மை” பட டிரைலர் உலகம் முழுக்க சுமார் 600 திரை அரங்குகளில் வெளியாகிறது.

கமல்ஹாசன் , லோகேஷ் கனகராஜ் உருவாக்கத்தில் உருவான “விக்ரம்” படம் வெளியாகும் திரை அரங்குகளில் நாளை ஜூன் – 3 ஆம் தேதி “பொம்மை” படத்தின் டிரைலர் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.

‘பொம்மை’ படத்தின் சிங்கள் டிராக் வெளியீடு, பாடல்கள் வெளியீடு, பட வெளியீடு குறித்த செய்திகள் பின்னர் தெரிவிக்கப்படும்.

Yuvan became ‘Young Maestro’; SJ Surya’s ‘Bommai’ Movie Trailer is out

பரத்-வாணி போஜன் இணையும் பட டைட்டில் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்

பரத்-வாணி போஜன் இணையும் பட டைட்டில் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.

தமிழ் சினிமாவில் நல்ல தரமான உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தயாரிக்கும் மிகச்சிலரில் ஒருவர் Axess Film Factory தயாரிப்பாளர் G டில்லி பாபு. அவரது தயாரிப்பில் வெளியான ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் என பல திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது தன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ‘மிரள்’ என்ற பெயரில் அடுத்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் பார்வையாளர்கள் தமிழ் திரையில் இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்கும், இப்படத்தில் பரத், வாணி போஜன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மற்ற நடிகர்கள் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்

தொழில்நுட்பக் குழுவில் M.சக்திவேல் (கதை- வசனம்-இயக்கம்), பிரசாத் S.N. (இசை), சுரேஷ் பாலா (ஒளிப்பதிவு), கலைவாணன் R (எடிட்டர்), மணிகண்டன் சீனிவாசன் (கலை), டேஞ்சர் மணி (ஸ்டண்ட்), சச்சின் சுதாகரன்-ஹரிஹரன் M – Sync Cinema (ஒலி வடிவமைப்பு), கவின் முதல்வன் (ADR), அரவிந்த் மேனன் ( ஒலி கலவை), ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் (ஆடை வடிவமைப்பாளர்), M முகமது சுபையர் (ஆடைகள்), வினோத் சுகுமாரன் (மேக்கப்), G.S. முத்து – Accel Media (DI-கலரிஸ்ட்), கிரண் ராகவன் – Resol FX (VFX மேற்பார்வையாளர்), E ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) , சந்துரு – தண்டோரா (பப்ளிசிட்டி டிசைன்), சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு), DEC (புரமோஷன் மற்றும் மார்க்கெட்டிங்), பால முருகன் (தயாரிப்பு மேலாளர்).

Miral

Sivakarthikeyan released first look of Bharath-Vani Bojan duo movie title

சிவாஜி இருந்திருந்தால் மோடியை ஆதரித்திருப்பார்.. தேவையின்றி இழுக்காதீர்.; பிரபு அண்ணன் ராம்குமார் ஆவேசம்

சிவாஜி இருந்திருந்தால் மோடியை ஆதரித்திருப்பார்.. தேவையின்றி இழுக்காதீர்.; பிரபு அண்ணன் ராம்குமார் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மரியாதைக்குரிய இரா. முத்தரசன் அவர்கள், பிரதமர் மோடியை விமர்சிக்கும் சாக்கில், எங்கள் தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பெயரை தேவையின்றி இழுத்திருக்கிறார்.

நடிகர் திலகம் மற்றும் பிரதமர் மோடி இவருக்கும் உள்ள ஒற்றுமை, இருவருமே தங்களின் இடைவிடா மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பினால் இந்த உயர்ந்த இடத்தை அடைந்து இருக்கிறார்களே அன்றி உங்களைப் போல் மற்றவர் முதுகில் சவாரி செய்து வந்தவர்களல்ல என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

எங்கள் தந்தை நடிகர் திலகம் அவர்கள், உங்களின் மூத்த தலைவர்களுடன் நட்போடு இருந்தவர்.

நெருக்கடியான காலங்களில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்.

தன் உடல், பொருள், புகழ் யாவற்றையும் எந்த விதமான எதிர்பார்ப்புமில்லாமல் தன் நாட்டுக்காக அர்ப்பணித்தவர்.

அவருடைய வழியில் நான் பயணித்து வருகிறேன் என்பதையும் பணிவுடன் கூறிக்கொள்கிறேன்.

நடிகர் திலகத்தின் திறமை, நேர்மை, கடின உழைப்பு, அவருக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தது. இதன் மூலமாக பல விருதுகள் கிடைத்தன. அவற்றைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இன்று அவர் இருந்திருந்தால் பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்திருப்பார். அது மட்டுமின்றி என் பக்கம் நின்று பாரதீய ஜனதா கட்சியில் இணையும் என் முடிவை வரவேற்றிருப்பார்.

உலக அரங்கில் பிரதமர் மோடி அவர்களால் நமது பாரதம் தலைநிமிர்ந்து நிற்பதையும் நம் நாட்டுக்கு அவரால் பெருமை சேர்வதையும் கண்டு மகிழ்ந்திருப்பார்.

இறக்குமதி செய்யப்பட்டு தற்போது அழிந்து கொண்டிருக்கும் கொள்கையை இப்போது நீங்கள் பின்பற்றி வருகிறீர்கள்.

பாரத நாட்டின் மண் சார்ந்த கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறார் நம் பிரதமர்.

நமது பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை அவர்களும் இதே பாதையைப் பின்பற்றி வெற்றி நடை போட்டு வருகின்றார். இடது வலது என எந்தப் பக்கமும் திரும்பாமல் நேர்கொண்ட பார்வையில் எங்கள் தலைவர்களின் பயணம் தொடர்கிறது.

உங்களுடைய கருத்தில் இந்திய மற்றும் உலக பொருளாதாரத்தைப் பற்றிய அறியாமை தெரிகிறது.

பாரதிய ஜனதா கட்சி அளித்ததாக நீங்கள் குறிப்பிட்ட வாக்குறுதியை நம்பி மக்கள் கடன் வாங்கவில்லை. உங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க. அளித்த வாக்குறுதி தான், மக்களை கடன் வாங்க வைத்தது. இவையெல்லாம் பொதுவெளியில் இருக்கும் தகவல்களாகும்.

“Little Knowledge is Dangerous” என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. அரைகுறை ஞானம் ஆபத்தானது என்பது உங்கள் அறிக்கை நிரூபிக்கிறது.

உங்களுடைய கருத்துக்கள் வன்முறை, பிரிவினைவாதம் மற்றும் பிரித்தாளும் சூழ்ச்சி போன்றவற்றை மறைமுகமாக வெளிப்படுத்துகின்றன.

இந்தியாவே முதன்மையானது என்ற தேசப்பற்று குறிக்கோளை நிறைவேற்ற பாரத பிரதமர் மோடி அவர்கள் வழியில் பாரதிய ஜனதா கட்சி பாடுபட்டு வருகிறது.

ஒவ்வொரு இந்தியனையும் உயர்வாக மதிக்கும் கட்சி பாரதிய ஜனதா கட்சி.

அயல்நாட்டு கொள்கைகளை கடைப்பிடித்து, அயல்நாட்டு உதவியைச் சார்ந்து, தேச விரோத சக்திகளின் ஆதரவில் இயங்கும் உங்களின் அறிவுரைகளுக்கு இங்கு தேவையுமில்லை. இடமுமில்லை.

நடிகர் திலகத்தைப் பாராட்டுவதை வரவேற்கிறோம். ஆனால் மற்றவர்களை தரமின்றி விமர்சிப்பதற்கு அவர் பெயரை பயன்படுத்த வேண்டாம். உங்கள் கொள்கைகள், வழிமுறைகள் அனைத்தையும் விட உயர்ந்த மனிதர் நடிகர் திலகம்.

உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களைக் கேட்க இந்திய மக்களுக்கு நேரமில்லை.

வணக்கம்.
ஜெய் ஹிந்த்

சென்னை-17
Ramkumar Ganesan
30.05.2022
S/o Nadigar Thilagam Sivaji Ganesan

If Sivaji had been there he would have supported Modi – Ramkumar Ganesan

3 பின்னணி பாடகர்கள் அடுத்தடுத்து மரணம்.; சோகத்தில் மூழ்கிய இசை பிரியர்கள்

3 பின்னணி பாடகர்கள் அடுத்தடுத்து மரணம்.; சோகத்தில் மூழ்கிய இசை பிரியர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 5 நாட்களில் பிரபலமான 3 பாடகர்கள் அடுத்தடுத்து மரணம். இந்த அதிர்ச்சி செய்திகளால் இசை ப்ரியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஒருவர் கொல்லப்பட்டார். மற்ற இருவர் மேடையில் பாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் இறந்தனர்.

அதன் விவரம் வருமாறு..

மே 28 ஆம் தேதி..:

கேரளா ஆலப்புழாவில் நடந்த நிகழ்ச்சியில் , பின்னணி பாடகர் எடவா பஷீர் (77) பாடிக் கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி விழுந்து மரணமடைந்தார்.

மே 29 ஆம் தேதி..:

பஞ்சாபி பாடகர் சித்து மூசேவாலா. தன் வசீகரமான குரலால் பல இளைஞர்களை கவர்ந்தவர்.

இவரது பாடல்கள் பெரும்பாலும் சர்ச்சையாகும். இவருக்கு கொடுக்கப்பட்டு இருந்த அரசு பாதுகாப்பை சில தினங்களுக்கு முன் தான் ஆளும்கட்சி ஆம் ஆத்மி வாபஸ் வாங்கியது.

கடந்த மே 29ம் தேதி மானசா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார் சித்து மூசேவாலா.

நேற்று மே 31 தேதி்: பின்னணி பாடகர் கே.கே., என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னாத் (53) மாரடைப்பால் மரணம்.

ஏஆர்ஆர் யுவன் ஹாரீஸ் இசையில் பாடிய கே.கே. திடீர் மரணம்.; மோடி ராகுல் இரங்கல்

பிறப்பால் மலையாளி ஆனாலும் டெல்லியில் வசித்து வந்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி கன்னடம், என பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். தமிழில் ஏஆர்ஆர் இவரை அறிமுகப்படுத்தினார்.

இவரது பாடல்கள் தமிழக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நேற்று கொல்கத்தாவில் நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

3 playback singers consecutive deaths .; Music lovers immersed in sadness

More Articles
Follows