தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இறந்தார் என அறிவிக்கப்பட்டது.
இந்த தகவலை முதலில் ஊடகங்களுக்கு யார் தெரிவித்தது என்பது இதுவரை தெரியவில்லை.
அதன்பின்னர் மது போதை காரணமாக குளிக்கும் நீர் தொட்டியில் விழுந்து மூச்சு திணறி இறந்துவிட்டதாக கூறப்பட்டது.
இந்த தகவலை பிரதேச பரிசோதனை செய்த பின்னர் வெளியிட்டனர்.
ஆனால் தொட்டியின் அளவு நிச்சயம் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி என்றால் அவர் அதில் இருந்து வெளியே வந்திருக்கலாமே எனவும் அவரது ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
கணவர் போனிகபூர் ஸ்ரீதேவியின் குளியல் அறைக்கு சென்ற நேரம் மாலை 6.30 மணி என்கிறார்கள். ஆனால் போலீசுக்கு தகவல் சொன்ன நேரம் இரவு 9 மணி என்கிறார்கள்.
அப்படி என்றால் அதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
ஒரு வேளை ஸ்ரீதேவி மயங்கிய நிலையில் இருந்தாலும் அதுவரை அந்த ஸ்டார் ஓட்டலின் மருத்துவரை போனி கபூர் ஏன் நாடவில்லை? என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை சொல்லுவார் யாரோ..?