தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மார்ச் 01, 2018 முதல் தமிழ் திரைப்படங்கள் சம்மந்தமான பட ரிலீஸ், சூட்டிங், பத்திரிகையாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட எதுவும் நடைபெறவில்லை.
கியூப் மற்றும் யூ.எப்.ஓ போன்ற டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடர்களின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது.
தற்போது கட்டண குறைப்புக்கு கியூப் நிறுவனம் இறங்கி வந்துள்ளதாலும் மற்ற திரையுலகின் மற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாலும் வேலை நிறுத்தம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுமார் இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமா நிகழ்வுகள் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
இதன் முதல் கட்டமாக, நடிகர்கள் கார்த்திக் மற்றும் அவருடைய மகன் கவுதம் கார்த்திக் மற்றும் ரெஜினா கசண்டரா நடிப்பில் திரு இயக்க ஜி.தனஞ்செயன் தயாரித்துவரும் “Mr.சந்திரமெளலி” திரைப்படத்தின் இசை வெளியீடு, ஸ்ட்ரைக்குப் பின் நடைபெறும் முதல் பெரிய நிகழ்ச்சியாகும்.
சத்யம் சினிமாஸ் திரையரங்கில் ஏப்ரல் 25 புதன்கிழமை அன்று நடைபெறவிருக்கும் “Mr.சந்திரமெளலி” திரைப்படத்தின் இசை இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தின் குழுவினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் பங்குபெறுகிறார். இது அவருக்கான பாராட்டு விழாவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Mr Chandramouli team plan to celebrate TFPC strike success