தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் டைரக்டர் ரஞ்சித்.
அப்போது அவர் செய்தியாளர்களிடையே பேசியதாவது…
இங்குள்ள ஓட்டு அரசியல் எல்லா சமூகத்தையும் தனித்தனியாக பிரித்து இருக்கிறது.
தலித்தில் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என எல்லா சாதிகளிலும் தனி பிரிவுகள் உருவாக்கியுள்ளது.
பெரியாரிய இயக்கங்கள் இங்கு எல்லோரையும் ஒன்றாக்கியது. ஆனால் தற்போது உடைப்பதற்கான நிறைய வேலைகள் இங்கு நடக்கிறது.” என்றார்.
அதனையடுத்து நடிகர்களுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை பற்றிய கேள்விக்கு அவர் கூறியதாவது…
‘விஜய்சேதுபதி உள்ளிட்ட நிறைய நடிகர்கள் மக்களுக்காக உதவி செய்து வருகிறார்கள், சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.
Many actors does not care about Society says Pa Ranjith