தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மாதங்களில் நடிகர்கள் விஜய் & தனுஷ் இருவரும் வெளிநாட்டு கார் இறக்குமதி நுழைவு வரியில் விலக்கு கேட்டனர்.
இவர்களின் மனுவை தள்ளுபடி செய்து இதனை கடுமையாக விமர்சித்த நீதிபதி சுப்ரமண்யம் இருவருரையும் உடனடியாக வரி கட்ட உத்தரவிட்டார்.
அதன்படி நடிகர் விஜய் ரூ 40 லட்சமும் தனுஷ் ரூ 30 லட்சமும் நுழைவு வரி கட்டினர்.
தற்போது வருமான வரிக்கு வட்டி விலக்கு கோரியுள்ளார் நடிகர் சூர்யா.
கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
எனவே இதனையடுத்து 2 ஆண்டுகள் மதிப்பீட்டில் 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டது.
மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்தது.
அதாவது… 2007- 08, 2008-09 நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் செலுத்த வேண்டும் எனவும் வருமான வரித்துறை சூர்யாவுக்கு உத்தரவிட்டது.
எனவே தீர்ப்பாயத்தில் தனது வழக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரிக்கு சட்டப்படி மாதம் 1 சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார் நடிகர் சூர்யா.
இதனை கடந்த 2018ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காக தொடர்ந்தார் சூர்யா.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆனால் சூர்யா தாமதமாக தான் கணக்கை தாக்கல் செய்தார் என்றும் வருமான வரி துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம், வட்டி விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.
Madras High Court dismiss Suriya’s plea seeking Income Tax exemption