அதே ஜட்ஜ்.. அதே தீர்ப்பு..; விஜய் தனுஷை அடுத்து வரிக்கு வட்டி விலக்கு கேட்ட சூர்யா மனு தள்ளுபடி

அதே ஜட்ஜ்.. அதே தீர்ப்பு..; விஜய் தனுஷை அடுத்து வரிக்கு வட்டி விலக்கு கேட்ட சூர்யா மனு தள்ளுபடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மாதங்களில் நடிகர்கள் விஜய் & தனுஷ் இருவரும் வெளிநாட்டு கார் இறக்குமதி நுழைவு வரியில் விலக்கு கேட்டனர்.

இவர்களின் மனுவை தள்ளுபடி செய்து இதனை கடுமையாக விமர்சித்த நீதிபதி சுப்ரமண்யம் இருவருரையும் உடனடியாக வரி கட்ட உத்தரவிட்டார்.

அதன்படி நடிகர் விஜய் ரூ 40 லட்சமும் தனுஷ் ரூ 30 லட்சமும் நுழைவு வரி கட்டினர்.

தற்போது வருமான வரிக்கு வட்டி விலக்கு கோரியுள்ளார் நடிகர் சூர்யா.

கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

எனவே இதனையடுத்து 2 ஆண்டுகள் மதிப்பீட்டில் 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டது.

மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்தது.

அதாவது… 2007- 08, 2008-09 நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் செலுத்த வேண்டும் எனவும் வருமான வரித்துறை சூர்யாவுக்கு உத்தரவிட்டது.

எனவே தீர்ப்பாயத்தில் தனது வழக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரிக்கு சட்டப்படி மாதம் 1 சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார் நடிகர் சூர்யா.

இதனை கடந்த 2018ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காக தொடர்ந்தார் சூர்யா.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆனால் சூர்யா தாமதமாக தான் கணக்கை தாக்கல் செய்தார் என்றும் வருமான வரி துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம், வட்டி விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

Madras High Court dismiss Suriya’s plea seeking Income Tax exemption

BREAKING டிவி தொகுப்பாளரும் நடிகருமான ஆனந்த கண்ணன் மரணம்.; அவரின் வாழ்க்கை ஒரு பார்வை

BREAKING டிவி தொகுப்பாளரும் நடிகருமான ஆனந்த கண்ணன் மரணம்.; அவரின் வாழ்க்கை ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிங்கப்பூரில் வசித்து வந்த தமிழன் ஆனந்த கண்ணன்.

அங்குள்ள வசந்தம் டிவி சேனலில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.

அதன் பின்னர் சென்னை வந்த இவர் சன் ம்யூசிக்கில் தொகுப்பாளராகவும் ஆனார். இவருக்கு நிறைய ரசிகர்கள் ரசிகைகள் உருவாகினர்.

90’ஸ் குட்டிகளின் பேவரைட் விஜே ஆனார்.

சன். டி.வி.யில் ஒளிபரப்பான சிந்துபாத் தொடரிலும் & விக்ரமாதித்தன் என்ற சீரியலில் நடித்தார்.

வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்திலும் நடித்தார். முள்ளும் மலரும்,இத்தனை நாள் எங்கியிருந்தாய்? ஆகிய படங்களிலும் நடித்தார். அந்த படங்கள் ரிலீசாகவில்லை.

பின்னர் சினிமா வாய்ப்புகள் குறையவே மீண்டும் சிங்கப்பூர் சேனலான வசந்தம் டிவியில் பணியாற்றி வந்தார்.

கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமியக் கலைகளையும் இவர் முறையாக பயின்றுள்ளார்.

இவர் பயின்ற கிராமியக் கலைகளை, `ஆனந்தக் கூத்து’ என்ற பயிற்சி அமைப்பின் மூலம் சிங்கப்பூரில் பயிற்சி மையம் அமைத்து சொல்லிக் கொடுத்தார். சிங்கப்பூரில் இதுவே எனக்கு மகிழ்ச்சி.
இதுவே என் அடையாளம்” என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் என் நண்பர் ஆனந்த கண்ணன் மரணம் அடைந்துவிட்டார் என இயக்குனர் வெங்கட் பிரபு தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் மரணத்திற்கான காரணம் என்னவென்று அவர் தெரிவிக்கவில்லை.

நடிகர் ஆனந்த கண்ணன் கேன்சர் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Sun Music VJ cum Actor Anandha Kannan passed away

பிரபல நடிகையின் கணவருடன் இணைய தமன்னா போடும் ‘ப்ளான்’

பிரபல நடிகையின் கணவருடன் இணைய தமன்னா போடும் ‘ப்ளான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா.

இவரது கைவசம் தற்போது தமிழ் படங்கள் பெரிதாக இல்லை.

எனவே வெப் தொடர்களிலும் நடிக்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் தமன்னா நடிப்பில் ரிலீசான வெப்தொடர் ’நவம்பர் ஸ்டோரி’ ரசிகர்களின் கவனம் ஈர்த்து வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தமன்னா நடிக்கவுள்ள அடுத்த வெப்தொடரான ‘பிளான் ஏ பிளான் பி’ அப்டேட் கிடைத்துள்ளது.

இது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திக்காக தயாரிக்கப்படுகிறது.

இதில் நடிகை ஜெனிலியாவின் கணவரும் பிரபல பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் நாயகனாக நடிக்கவிருக்கிறாராம்.

தமன்னா நாயகியாக நடிக்க அந்த படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

Tamannaah in Plan A Plan B web series update is here

புதுச்சேரி பகுதிகளில் ஒதுங்கியது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’

புதுச்சேரி பகுதிகளில் ஒதுங்கியது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி.

இவர் தற்போது கோலிவுட் படங்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா & சமந்தா உடன் ஜோடியாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கினாலும் கொரோனா ஊரடங்கால் நடிகர்களின் கால்ஷீட் தேதிகள் மாறியது. எனவே படப்பிடிப்பை தொடங்கவில்லை.

தற்போது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை புதுச்சேரியில் தொடங்கியுள்ளது படக்குழு.

அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனையடுத்து போஸ்ட் புரடொக்சன் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் இவ்வருட இறுதிக்குள் படம் ரிலீஸாகும் எனவும் கூறப்படுகிறது.

Kaathu Vaakula rendu kadhal movie shoot updates

விஜய் ரசிகர்களை தொடர்ந்து மம்மூட்டி ரசிகர்கள் செய்த அதே காரியம்

விஜய் ரசிகர்களை தொடர்ந்து மம்மூட்டி ரசிகர்கள் செய்த அதே காரியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2020 பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி ‘மாஸ்டர்’ பட ஷூட்டிங் நெய்வேலியில் நடைபெற்ற போது நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவ வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.

அதன் பின்னர் மீண்டும் ஷூட்டிங் சென்ற நடிகர் விஜய் ஒரு பஸ் மீது ஏறி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

இதை பிப்ரவரி 10ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் நடிகர் விஜய்.

இந்த செல்ஃபி ஒரு ஆண்டை கடந்த போது அதனை கொண்டாடும் வகையில் #1YearOfMasterSelfie ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் 2021 இந்தாண்டில் செய்தனர்.

இந்த நிலையில் மம்மூட்டி ரசிகர்களும் இவர் உடற்பயிற்சி செய்த போது எடுத்த செல்ஃபியை #1YearOfIconicMegastarSelfie என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

1 Year Of @mammukka’s Viral Workout Selfie that Shock the Internet Like Never Before !!

The man who constantly inspires ❤️

#1YearOfIconicMegastarSelfie

#Mammootty #BheeshmaParvam https://t.co/DvQ0Yyuqvt

Mammootty fans follows Vijay fans way

சொல்லிட்டு பண்ண மாட்டேன்.. பண்ணிட்டு சொல்றேன்..; நயன்தாரா சீக்ரெட்ஸ்.. ரசிகர்கள் ஏமாற்றம்

சொல்லிட்டு பண்ண மாட்டேன்.. பண்ணிட்டு சொல்றேன்..; நயன்தாரா சீக்ரெட்ஸ்.. ரசிகர்கள் ஏமாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாராவுடன் இணைந்து அவரது காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் அண்மையில் ஓடிடியில் வெளியானது.

இதில் நாயகியாக நடித்துள்ளதாலும் தன் சொந்த படம் என்பதாலும் இப்படம் தொடர்பான புரோமோசன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் நயன்தாரா.

அடுத்த தயாரிப்பாளர்கள் படம் தயாரித்தால் அந்த புரோமோ நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாத நயன்தாரா அவரின் பட நிகழ்ச்சியில் மட்டும் கலந்துக் கொள்கிறாரே என ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இவர் கலந்துக் கொண்ட ஒரு நிகழ்ச்சி நேற்று விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பானது.

அப்போது..” தனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது” என்றார்.

எனவே திருமணம் எப்போது? என தொகுப்பாளர் கேட்டார்

“விரைவில் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்துகொண்ட பிறகு அறிவிப்பேன்.

ஆனால், எல்லோருக்கும் சொல்லிவிட்டு திருமணம் செய்ய மாட்டேன்.” எனக் தெரிவித்துள்ளார்.

இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Actress Nayanthara talks about her marriage

More Articles
Follows