தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பட்டதாரி, கேரள நாட்டிளம் பெண்களுடனே ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் அபி சரவணன்.
இவர் சமூக சேவைகளில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். விவசாயிகளின் போராட்டத்தின் போது டெல்லி வரை சென்று அவர்களுக்கு உதவினார்.
இவர் 2016-ம் ஆண்டு பட்டதாரி படத்தில் நடித்த போது அதிதி மேனன் உடன் காதல் கொண்டார்.
இதனையடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அபி சரவணனை நடிகை அதிதி மேனன் ஆட்களை வைத்து கடத்தியதாக அவரது தந்தை ராஜேந்திர பாண்டியன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் காவல்நிலையத்தில் நேரில் ஆஜரான அபி சரவணன் தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறினார்.
தற்போது நடிகை அதிதி மேனன், அபி சரவணன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிதி மேனன்…
“பட்டதாரி படத்தில் என்னுடன் இணைந்து நடித்தார் அபி சரவணன். நான் அவரைத் திருமணம் செய்துகொண்டு அவருடைய பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும், ஏமாற்றிவிட்டதாகவும், என்னைப் பற்றி தவறான செய்திகள் வந்தன.
அடுத்ததாக இன்னொரு நபருடன் ஓடிவிட்டதாகவும், அவருடன் இணைந்து வாழ்ந்ததாகவும் தவறான செய்திகள் வெளிவந்துள்ளன.
2016-ம் ஆண்டு முதல் அபி சரவணன் மீது அன்பான உறவு இருந்தது. ஆனால் அதன் பிறகு அவர் சமூகசேவை செய்வதாக பணம் பெற்று பிரச்னைகள் உருவாகின.
இதில் என்னையும் மாட்டிவிடுவார் என்ற சூழ்நிலை வந்தது. இதுபற்றி பேசியபோது எங்களிடையே வாக்குவாதம் உண்டானது.
மேலும் ஒரு கதாநாயகியுடன் அவருக்கு 3 வருடம் உறவு இருந்தது. இதனால் வாக்குவாதம் ஏற்படவே பிரிந்துவிடலாம் என்று முடிவு செய்தோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் மற்றொரு புறம் அதிதிக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட, அது தொடர்பாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Living together issue between Abi Saravanan and Aditi Menon