தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் படங்களைப் போலவே அவரது படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்கும் எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும். அதற்கு காரணம் விழா மேடைகளில் விஜய் பேசும் குட்டி கதையும் அரசியல் சார்ந்த விஷயங்களும் பரபரப்பாக பேசப்படும்.
ஆனால் சமீபத்தில் வெளியான ‘லியோ’ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. அதிகமான போலி டிக்கெட் விற்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் திடீரென விழாவை தயாரிப்பு நிறுவனர் ரத்து செய்தது.
இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. லியோ படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு கொடுக்கவில்லை என்பதால் ஆளுங்கட்சி இந்த சதியை செய்வதாகவும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்திருந்தனர்.
மேலும் கோட்டைக்கும் ரெடி வேட்டைக்கும் ரெடி என்பது போல பல வாசகங்கள் கொண்ட போஸ்டர்களை ரசிகர்கள் ஒட்டி வந்தனர்.
இதன் பின்னர் அக்டோபர் 19ஆம் தேதி ‘லியோ’ படம் உலகமெங்கும் வெளியானது. அதிகாலை 4 மணி சிறப்பு காட்சி கொடுக்கப்படவில்லை என்பதால் அதற்கும் ஆளுங்கட்சியை ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
தற்போது 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில் ரூ. 500+ கோடி வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி லியோ படத்தின் வெற்றி விழாவை மிக பிரம்மாண்டமாக கொண்டாட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளனர.
அதன்படி சென்னை நேரு ஸ்டேடியத்தில் விழாவினை நடத்த சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விழாவில் எத்தனை பேர் பங்கு பெறுவார்கள்? எத்தனை பிரபலங்கள் வருவார்கள்? ரசிகர்களுக்கு அனுமதி உண்டா? என பல்வேறு கேள்விகளை போலீசார் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்களை அடுத்து லியோ வெற்றி விழாவிற்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசை விழா ரத்தான இடத்திலேயே வெற்றி விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leo team plan to celebrate its success in grand level