தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழில் அறிமுகமாகி இந்தியில் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார்.
நேற்று இரவு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்றார்.
இரவு 11.30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிவகாசியை சொந்த ஊராக கொண்டவர் ஸ்ரீதேவி (54). இவர் 4 வயதிலேயே திரைப்படத்துறையில் நுழைந்தவர்.
தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார்.
தமிழில் 16 வயதினிலே, மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும், தமிழ் திரைப்பட உலகில் கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.
அண்மையில் அஜித்துடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்திலும் விஜய்யுடன் புலி என்ற படத்திலும் இணைந்து நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் நடித்த மாம் திரைப்படம் வெளியானது.
இவர் 2013-ம் ஆண்டில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
மேலும், இவர் பிலிம்பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்துக்காக தமிழக அரசின் விருது என பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்..
இவருக்கு போனி கபூர் என்ற கணவரும், ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர்.
Lady SuperStar Actress Sridevi passed away